Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர மத்தி 10 நாட்களுக்கு முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தரம் 5, க.பொ.த சாதாரண தரம், உயர் தர வகுப்புகள் தவிர்ந்த அனைத்து தனியார் கல்வி நிலையங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுகின்றன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து சேவைகள் புதிய பஸ் நிலைய பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

யாழ் மாநகர மத்தி 10 நாட்களுக்கு முடக்கம் – நிகழ்வுகளுக்கு தடை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 77 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் மாநகரில் நவீன சந்தை உள்ளிட்ட கடைத் தொகுதிகளில் பணியாற்றும் 66 பேர் அடங்குகின்றனர்.

11 பேர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அதிகரிப்பு – மூடப்படுகின்றது யாழ். மாநகரின் மத்திய பகுதி

 
1-201.jpg
 31 Views

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தின் நகரை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய கொரோனா தடுப்பு செயலணி, குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் யாழில் 150 பேருக்குத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  இலங்கையில், 90514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 551 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும் என்றும் கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு,  சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாக, உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=45452

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவர்கள் ஏன் தடியுடன் நிற்கிறார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

அது சரி இவர்கள் ஏன் தடியுடன் நிற்கிறார்கள்??

மருந்து அடிக்கினம். (DDT மறந்துவிட்டதா) 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் நகர மத்திய பகுதி முடக்கம்! - அவசர கலந்துரையாடலில் முடிவு!

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா!

அவர்களில் மாநகரில் நவீன சந்தை உள்ளிட்ட கடைத் தொகுதிகளில் பணியாற்றும் 66 பேர் அடங்குகின்றனர்.

1-201.jpg

பொறுத்த இடத்தில்... கொரோனா தொற்று ஆரம்பித்திருக்குது.
எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ... அது ஆரம்பித்து விட்டது.

தொற்று நீக்கும் பணியாளர்கள், எந்த வித உடற் கவசமும் இன்றி.. 
பணியாற்றுவது பெரும் சோகம். 

இதுவே... சிங்களப் பகுதி என்றால், அரசு அவர்களுக்கு தகுந்த உடைகளை கொடுத்து இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்!

யாழில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

எடுக்கப்பட்ட தீர்மாணங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

https://athavannews.com/2021/1204840

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகரம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

 
1-202-696x364.jpg
 9 Views

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்,  நகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி  தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றையதினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அதன் படி யாழ் நகர பகுதியில் அதிகளவான காவல்துறையினர், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இணைந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வட மாகாணத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

school-2.jpg

இதற்கமைய பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=45480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.