Jump to content

சில ஞாபகங்கள் -10


pri

Recommended Posts

வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன?  பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது  விசாரித்தால்  அவர்கள் விழி பிதுங்குவார்கள். அப்படி ஒரு ஒழுங்கை இங்கே இல்லை என்று வேண்டுமானால் சத்தியம் கூட செய்வார்கள். அந்தளவுக்குத்தான் அது பிரபலமானது.  கல்லடி ஒழுங்கை என்றும் சங்கக்கடைக்கு முன்னால் இருக்கிற ஒழுங்கை என்றும் அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்றபடி சொல்வதுண்டு.  தபால்காரன் மாத்திரம் வாங்குகிற சம்பளத்திற்கு நாணயமாக  சரியான பெயரை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தார். அவரின் கடமை விசுவாசத்தால்  கடிதங்கள் எந்த பொல்லாப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தது.

அப்பேர்ப்பட்ட வீதியில் இடப்பக்கத்தில் மூன்றாவதாக எங்கள் வீடு இருந்தது. ஐந்தாவதாக சீதாராம் வீடு  இருந்தது. சீதாராமும் நானும் ஒரே வயதுக்காரர். வேறு வேறு பாடசாலையில் படித்துகொண்டிருந்தோம். தானும் தன்பாடும் என இருந்த சீதாராம் எந்த குழப்படிக்கும் போகாத நல்ல பிள்ளை.  சீதாராமுக்கு கண்ணன் என்பது வீட்டுப்பெயர். போதாக்குறைக்கு  ரேமன் என்ற இன்னுமொரு புது  பெயரும் வந்து சேர்ந்தது. அதற்கு பிறகு ஆள் ஊரில் இல்லை.  அது இயக்க பெயர். அலாப்பினாலும் சண்டைக்கு வராத ஒரு ஆள் குறைந்து போனதில் கூட விளையாடிய பலருக்கு கவலை. இன்னும் சிலருக்கு பெரிய ஆச்சரியம்.

இயக்கத்துக்கு போன பிறகு சீதாராம் பல வருடங்களாக ஊருக்கு வந்ததில்லை. பெரும்பாலான நாட்கள்  இந்தியாவும் இயக்க வேலையுமென கழிந்து  போயிற்று. இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி மற்றைய எல்லா இயக்கத்தையும் வீட்டுக்கு அனுப்பிய பிறகு யாழ்பாண வீதிகளிலும் பஜிரோக்கள் ஓடியது. அப்படி ஓடிய பஜிரோ ஒன்றில் பானு முன் சீட்டில் இருந்தார். மஞ்சளுக்கும்  வெள்ளைக்கும் இடையில் ஒர் நிறத்தில்  சாரதி இருக்கையில் ஒருவர்  இருந்தார். அவரை  ரேமன் என்று சொன்னார்கள்.  அந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை ஒழுங்கைக்கு  வந்து போனதாக அறிந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்கும் வந்து எல்லோர் சுக துக்கங்களையும் விசாரித்து போயிருந்தான். சின்ன வயதில குண்டு விளையாடுகிற போது என்னோடு சண்டை போட்டதை பற்றி சொல்லி இப்போது நான் என்ன செய்கிறேன் என கேட்டறிந்ததாக  அம்மா சொன்னார்.  எனக்கு சந்திக்க வாய்ப்பு  கிட்ட வில்லை.

சேவல் கூவ அன்றைய பொழுதும் தப்பாமல் விடிந்தது.  இரத்தனப்பாவின் ஆடுகள் இலைகுழைகளை தேடி கூட்டமாக நடைபோட்டன. போகிற வழியில் ஆடொன்று எங்கள் படலையை தலையால் தள்ள  குட்டி ஆடு  உள்ளே நுளைந்தது. முற்றத்தில் மல்லிகை மரமொன்று இருந்தாக வேண்டும் என்ற அம்மாவின் கனவையும்  சேர்த்தே  அது கவ்வியது.  படலையின் கொழுக்கியை போடமறந்தவருக்கு அர்ச்சனை பாடியபடி அம்மா ஆட்டுகுட்டியை வெளியே துரத்தினபடி இருந்தார். அதுவும் எல்லா சாகசங்களையும் செய்து உள்ளேயே சுத்தித்சுத்தி ஓடியது.

அப்போதுதான் அந்த  ஓவென்ற அழுகுரல்  குட்டி ஒழுங்கையை நிறைத்தது. அவரவர் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள். அது சீதாராம் வீடாக இருந்தது. சினைப்பர் தாக்குதலில் சீதாராம் இறந்த செய்தியை காவிய இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள்.  கோபத்திற்கும் துக்கத்துக்கும் இடையில் ஏதேனும் ஒரு வடிவம் இருப்பின் அது அவர்கள் முகத்தில் தெரிந்தது.  அவர்கள் என்னதான் செய்வது? ஒரு கோழையை போல அழவும் முடியாது . பிள்ளையை இழந்து கத்துகிற குடும்பத்தின் வலியில் கலக்காமல் கல்லாகவும் இருக்க முடியாது.  அந்த   சங்கடம் அவர்கள் அசைவில்  தெரிந்தது.

சின்ன வயது முதல் மரணம் எல்லோரையும் கலங்க வைத்தது. சிலர் இராணுவம் பாடையில் போவர் என திட்டினார்கள். சிலர் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துகொள்வார் என ஆறுதல் சொன்னார்கள்.  இப்படியாக அன்றைய  பகல்பொழுது இருண்டே கிடந்தது.

பின்னர் வந்த நாளொன்றில் வீதியின் தலைப்பில் பெயர் பலகை ஒன்றிருந்தது. அது ரேமன் வீதி என்று சொன்னது.
எங்கள் ஊரின் எல்லா வீதிகளுக்கும் சொல்ல  ஒரு பெயரும் கனத்த நினைவுகளை சுமந்த சில கதைகளும்  அதைக் காவி பல ஆயிரம் மைல்கள் தாண்டி வாழ்கிற  மனிதர் கூட்டமும்  இருப்பர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.