Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.

ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1210102

  • கருத்துக்கள உறவுகள்

விஜேதாசவை அச்சுறுத்துவதற்காக ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை - விளக்குகிறார் மஹிந்தானந்த 

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. நாட்டின் ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவது சாதாரணமானதொரு விடயமாகும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

 

அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு தான் செயற்பட்டார். 

இறுதி நேரத்தில் நான் விளக்கமளித்ததன் பின்னரே அவர் 20 இற்கு ஆதரவாக வாக்களித்தார். எனவே இந்த விடயம் தொடர்பிலும் அவர் சரியான தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்திருக்கலாம்.

அவருக்கு அமைச்சு பதவி கிடைத்திருக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இல்லாதவொன்றை கூறுவது நியாயமற்றது. 

இந்நிலையில் இன்றைய தினம் பிரிதொரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து தொலைபேசியூடாக ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் பிள்ளைகள் இருவர் தொடர்பில் கருத்து வெளியிட்டமையால் தான் அவர் தன்னை அச்சுறுத்தியதாக விஜேதாச ராஜபக்ஷ கூறுகின்றார். 

அத்தோடு அவர் உங்களின் பிள்ளைகள் தொடர்பில் கூறவில்லை என்று ஜனாதிபதியிடம் கூறியதாகவும் தெரிவிக்கின்றார். இது ஒரு சாதாரண விடயமாகும்.

நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர்களுடன் பணியாற்றியிருக்கின்றேன். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சி காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டறிந்து கொள்வார். இதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் விஜேதாச ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு , வரலாற்றை நினைவுபடுத்தி நீங்கள் கூறிய விடயம் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதிக்கும் , விஜேதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் தெளிவுபடுத்தும் வகையிலான தொலைபேசி உரையாடலே இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் இவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது ? தற்போதைய ஜனாதிபதி தனக்கான வரப்பிரசாதங்களை மட்டுப்படுத்திக் கொண்டு சாதாரண இல்லத்திலேயே வசிக்கின்றார். இவ்வாறான சிறந்த விடயங்கள் தொடர்பில் பேசப்படுவதில்லை.

இதே வேளை நாம் முருத்தெட்டுவே ஆனந்த தேரரையும் சந்தித்து இது தொடர்பில் வினவினோம். இந்த ஊடக சந்திப்பு நேரலையாக ஒளிபரப்படுவதை தானும் அறிந்திருக்கவில்லை என்றும் , ஊடக சந்திப்பு நிறைவடைந்த பின்னர் நீங்கள் சற்று காரசாரமாக கருத்து வெளியிட்டீர்கள் என்று விஜயதாசவிடம் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த எம்மிடம் கூறினார். 

விஜயதாச ராஜபக்ஷ தனிப்பட்ட நிகழச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தேரர் எம்மிடம் கூறினார்.

எனவே அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவோ அல்லது வேறுதனிப்பட்ட விடயங்களுக்காகவோ நாட்டின் தேசிய பிரச்சினைகளை தொடர்புபடுத்தி கருத்து வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். அரசாங்கத்தினுள் இதனை பேசி தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது சிறந்ததாகும் என்றார்.

விஜேதாசவை அச்சுறுத்துவதற்காக ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை - விளக்குகிறார் மஹிந்தானந்த  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 அப்படியென்றால், விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு விளக்கம் குறைவோ அல்லது பதவி ஆசையோ? இன்னும் கொஞ்ச நாளில் பலபேருக்கு இந்த நிலை வரலாம்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல – அனுர

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.

நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

https://athavannews.com/2021/1210183

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதியின் மிரட்டல் – மேலதிக பாதுகாப்பு கோரும் விஜயதாச!!

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் கடிதத்தை கையளித்துள்ளார்.

நேற்று காலை விஜயதாச ராஜபக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, கடும் தொனியில் பேசியதாக தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் என விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.

அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://athavannews.com/2021/1210174

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.