Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா!

53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா!

இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போயுள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து அட்மிரல் ஜூலியஸ் விட்ஜோஜோனோ கூறுகையில், ‘கடற்படை தற்போது அதைத் தேடுகிறது. எங்களுக்கு அந்த பகுதி தெரியும், ஆனால் அது மிகவும் ஆழமானது’ என கூறினார்.

ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.

https://athavannews.com/2021/1211582

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியை கண்டால் சொல்லி விடுங்கோ.

வலையோட கடல் பக்கம் போனால், அகதிகள் கூட்டத்துடன், நீர்மூழ்கி கப்பல் பிடிபடலாம்.

எங்கடை சமூக சேவகர், அர்ஜுன் அண்ணரையும் கூட்டிக் கொண்டு போனால் நல்லது. 😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஆறு சிதைவுகள், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காட்சிப்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலைக்குள் நீர்மூழ்கிக் கப்பலில் ஒக்ஸிஜன் தீர்ந்துவிடும் என்று எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகளில் கிரீஸ் போத்தல், டார்பிடோ லாஞ்சரின் ஒரு பகுதி, உலோகக் குழாயின் ஒரு பகுதி, பிரார்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் பாய்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை அடங்கும்

இவை கடலில் 850 மீட்டர் (930 கெஜம்) ஆழத்தில் ஒரு இடத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கே.ஆர்.ஐ.நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பலில் முந்தைய பயணத்தில் இருந்தவர்கள், இந்த சிதைவுகள் நீர்மூழ்கிக் கப்பலுக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியதாக கடற்படைத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 53 பேருடன் பயணித்த கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற நீர்மூழ்கி கப்பல், பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போனது.

https://athavannews.com/2021/1212090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியே காணாமல் போனது- 53 பேரும் உயிரிழப்பு!

இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியே காணாமல் போனது- 53 பேரும் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உயிரிழந்த 53 பணியாளர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்தோனேசியர்கள் அனைவரும் சோகத்தை பகிர்ந்து கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 44 ஆண்டுகள் பழமையான நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற கப்பல் பாலி தீவின் வடக்கே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட போது தொடர்பை இழந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சியில் இந்தோனேசிய இராணுவத்துக்கு உதவியாக சில பன்னாட்டு கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த கப்பலுடையது என சில பொருட்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212353

  • கருத்துக்கள உறவுகள்
இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு

 
 
இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு
ஜகார்த்தா, 
 
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.
 
 
இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது. 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் இறங்கின. 
 
இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது. காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து இந்தோனேசிய கடற்படை இவ்வாறு அறிவித்தது.
 
நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழுவாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை, உயிரிழந்த வீரர்கள், உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .
 
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.