Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாட்டால் திணறும் மருத்துவமனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 13 நோயாளிகள் இறந்ததாக வெளியான தகவல்கள், தமிழக மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாற்குறை இல்லை என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், தமிழகத்தின் நிலை என்ன என்பதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆக்சிஜன் தேவையை தமிழகம் சரியாக கையாளுகிறதா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.

கடந்த வாரம் வரை,இந்திய தலைநகர் டெல்லியில் குவியல் குவியலாக இறந்த கொரோனா நோயாளிகளின் சிதைக்கு தீமூட்டும் காட்சிகள் எங்கோ நடந்தவை போல தோன்றின. ஆனால் தற்போது, தமிழகத்தில் சென்னைக்கு வெகு அருகாமையில் உள்ள செங்கல்பட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நிகழந்த மரணங்கள் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகம் மிகவும் கடினமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்றும் அடுத்து வரவுள்ள இரண்டு மாதங்களும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த செய்திகள் எல்லாம், நாம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? நம்மை சுற்றியுள்ளவர்களை பாதிக்காத வகையில் நடந்துகொள்கிறோமா? தமிழக மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் உள்ளனவா என யோசிக்க வைக்கிறது.

இரவு நேரம் எடுக்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் காணொளியில், ராஜீவ் காந்தி மருத்துவமனையை எட்டுவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரிசையாக அம்புலன்ஸ் வாகனங்கள் நிற்கின்றன. அடுத்ததாக கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையம் ஒன்றின் வாசலில் 'இன்று தடுப்பூசி இல்லை' என்ற கரும்பலகை வைக்கப்பட்டுள்ள படம் நமக்கு கிடைத்தது.

''நிலைமை கைமீறிவிட்டது''

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ணற்ற நோயாளிகள் கொரோனா பாசிட்டிவ் என்ற சான்றிதழோடு படுக்கை தரக்கோரி மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள் என அங்குள்ள மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசும்போது, ''தினமும் நீங்கள் மருத்துவ அறிக்கையில் பார்க்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். புள்ளிவிவரங்களை விடுங்கள். மருத்துவமனைகளில் குவியும் மக்கள் திரளை நேரில் பார்த்தால், நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது என்று உணர்வீர்கள்,''என்கிறார்.

''கோவை மருத்துவமனைகள் - இரண்டாம் அலைக்கு தயாராகவில்லை''

தமிழகத்தில் கைமீறிவிட்டதா கொரோனா இரண்டாம் அலை?

பட மூலாதாரம்,ARUN SANKAR

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை தினமும் பார்வையிட்டு, நோயாளிகளின் தேவையை அதிகாரிகளுடன் பேசி பூர்த்தி செய்ய முயல்கிறார்.

''கோவையில் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 25 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமயத்தில், இச்சூழலை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பலருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் நீடிக்கின்றன. சமீபத்தில், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை வெளியிலேயே படுக்க வைத்த அவலமும் நடந்தது,'' என்கிறார் ரவி.

''அதிக அளவிலான நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையத்திற்குள் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பது சவாலாக மாறியுள்ளது. மருத்துவமனை தூய்மை என்பது கொரோனா தடுப்புக்கு மிகவும் அவசியம். ஆனால் அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த சிக்கலான காலகட்டத்தை எப்போதும் போல் அணுகக்கூடாது. இதனால் நோயாளிகளின் சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. வடநாட்டில் நடந்தது போன்ற உயிரிழப்புகள் இங்கும் நேரிட அதிக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது,'' என்கிறார் இவர்.

தமிழகத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாட்டால் திணறும் மருத்துவமனைகள் - கள நிலவரம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின் தான் பதவிக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என நினைத்து அழுகின்ற நிலை வரும் போல தோன்றுகிறது.. 🤣🤣

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.