Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நடைமுறை இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குத் திரும்பும் இலங்கையர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என கடந்த மாத இறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/வெளிநாடுகளில்-இருந்து-இ-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்

வேற்று நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்று வித்தியாசம் இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையா??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இதில் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்

வேற்று நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்று வித்தியாசம் இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையா??

நேற்று வரை இலங்கை கடவுச்சீட்டு வைத்திருந்து இரன்டு தடுப்பூசி போட்டு 14 நாட்களின் பின நாட்டுக்கு வருபவர்கள் 1 நாள் தங்கி பி சி ஆர் பரிசோதனையில் கொரனா இல்லை என்றால் உடன் வெளியேறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

நேற்று வரை இலங்கை கடவுச்சீட்டு வைத்திருந்து இரன்டு தடுப்பூசி போட்டு 14 நாட்களின் பின நாட்டுக்கு வருபவர்கள் 1 நாள் தங்கி பி சி ஆர் பரிசோதனையில் கொரனா இல்லை என்றால் உடன் வெளியேறலாம்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இது பொருந்தாது???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

 

14 minutes ago, விசுகு said:

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இது பொருந்தாது???

31 ம் தேதி மட்டும் ஒருத்தருக்கும் விதிவிலக்கு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இது பொருந்தாது???

தடுப்பூசி செலுத்தியிருந்து அவரகளுக்கு இலங்ஙையில் ஒரு முகவரி இருந்தால் பொருந்தும்.ஆனால் இப்ப எல்லாருக்கும் ஊசி டீபாட்டாலும் போடா விட்டாலும் 14 நாள் தனிமைப்டுத்தல அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் இலங்கைக்கு ஏன் இவர்கள் வருகினம்....? வந்தாலும் அரசுக்கு வெளிநாட்டு வருவாய் அதிகரிக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.