Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்குள் ஒரு சீன அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குள் ஒரு சீன அரசு

தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகி றது
சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது – விக்னேஸ்வரன்

 

பா.கிருபாகரன் – ந. ஜெயகாந்தன்
இந்த அரசிடம்  தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும்  வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
Justice-C.V.-Wigneswaran-300x225.jpg
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம்  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர்   மேலும்  கூறுகையில்,
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூல த்தை அவசர அ வசரமாக நிறைவேற்ற முயன்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் கடிவாளத்தை கெட்டியாகப்போட்டுள்ளது. இலங்கைக்குள் ஒரு சீன அரசை உருவாகவா இந்த அவசரம் ? பொருளாதார ரீதியில் சீனாவின் காலடியில் இலங்கை விழுந்துள்ளது.  கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம்  வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அன்றே சீனா இன்னொரு கடனை அறிவித்துள்ளது. வீணாக தமிழர்களுடன் பகைத்து உலகெல்லாம் இலங்கை கடனாளியாகியுள்ளது.
ஒரே நாட்டில் கூட்டு சமஸ்டி முறை அரசியல் அமைப்பையே தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்த அரசிடம்  தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும்  வழங்கப்படுகின்றது.சீனாவின் கொடையாளியாக அவர்கள் கேட்கும் அனைத்தையும் இலங்கை வழங்குகின்றது. ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு என்ன நடந்தது? இந்த நாடு எமக்கும் உரியது. இதனை தாரைவார்க்க அனுமதிக்க முடியாது.  நீதித்துறையின் ஏகபோக உரிமையையும் தாரைவார்க்க முடியாது.
எனவே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம்  தொடர்பில் புதிய வரைபை வரையுங்கள், அதனை ஆராய எமக்கும் கால அவகாசம் தாருங்கள். அவசர அவசரமாக இந்த சட்டமூலத்தை நாளை ( இன்று) நிறைவேற்றாதீர்கள் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா குழப்பிய குட்டையில் சீனா இலகுவாக மீன் பிடிக்கிறது. இப்போ இந்தியா வாய் பார்க்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இந்தியா குழப்பிய குட்டையில் சீனா இலகுவாக மீன் பிடிக்கிறது. இப்போ இந்தியா வாய் பார்க்கிறது. 

இந்தியா....  வாய் பார்க்கிறது மட்டுமல்ல,
அது அவர்களுக்கே பெரிய பிரச்சினைகளை..  கொடுக்கப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.