Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பொறுப்புக்கூறவைக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல் அமெரிக்க காங்கிரசில் கட்சிசார்பற்றமுறையில் தீர்மான மொன் று ச மர்ப்பிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுப்புக்கூறவைக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல் அமெரிக்க காங்கிரசில் கட்சிசார்பற்றமுறையில் தீர்மான மொன் று ச மர்ப்பிப்பு

* ஐ. நா . வின் 3 பிரதான  அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை

—————-

இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கையில் ‘பொறு ப்பு  கூறலுக்கான செயற்பாட்டுத்திறன்வாய்ந்த  சர்வதேசப்பொறிமுறை” மற்றும் ”நிரந்தரமான அரசியல் தீர்வு ”ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிசார்பற்ற  தீர் மானமொன்றை  அமெரிக்க காங்கிரசில் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ்அறிமுகப்படுத்தியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால்  பாரிய  தாக்குதல்
முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டது  என்பதை  தீர்மானம் அங்கீகரிக்கிறது,முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று   தசாப்தகாலத்திற் கும் மேலாகியும், குற்றமிழைத்தோரை பொறுப்புக்கூற வைக்கஇலங்கை  அரசு தவறிவிட்டதெனவும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு  அளித்த உறுதிமொழியிலிருந்தும்  பின்வாங்கியுள்ளதுஎன்றும்தீர்மானத்திலிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “நாட்டில் தண்டனைவிலக்கீடு  நிலவுகிறதால் ” . போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்களை  , விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தீர்வுகாணத் தவறியு ள்ளதாகவும் என்று அது குறிப்பிடுகிறது.

deborah_ross-300x300.jpg
பதிலாக  ஒரு உள்நாட்டு செயல்முறைமூலம்  பொறுப்புக்கூறலையும் நீதியையும் வென்றெடுக்க முடியு ம் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.”இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான மரணங்கள், காணாமல் போனமை , துஷ்பிரயோகம் மற்றும் இடம்பெயர்வுகளை அனுபவித்தனர்” என்று தீர்மானம்  முன்னிலைப்படுத்துகிறது.” தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில்அதிகளவு க்கு  போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாய் என்பதாக  இராணுவமயமாக்கப்பட்டுள்ளது” என்றும்அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் வடக்கு மாகாண சபை  “நிரந்தர அரசியல் தீர்வொன்றைமேம்படுத்திக்கொள்வதை  ஆதரிக்க” வடகிழக்கில் ஐ.நா.வின் கண்காணிப்புடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு   அழைப்பு விடுத்து  சொந்த தீர்மானங்களை சபை நிறைவேற்றியுள்ளது என்பதையும் இந்த  தீர்மானம் அங்கீகரிக்கிறது.
ஜனப்பிரதிநிதிகள்  சபை யில்  முன்வைக்கப்பட்ட  தீர்மானத்தில் ;
1) இலங்கையில் போர் முடிவடைந்த 12 வது ஆண்டு நிறைவடைவதையும்  மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதன் ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவிக்கிறது;
(2) இறந்தவர்களின் நினைவைகவுரவிக்கிறது  மற்றும் நல்லிணக்கம், மீள்கட்டுமானம்  இழப்பீடு மற்றும் மறுசீரமைப்புஆகியவற்றுக்கான   தேடலில் இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுடனும் அதன் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது;
(3)இந்தநடவடிக்கைகளில்  இலங்கை அரசாங்கத்தின்   தலையீடின்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ,முன்னுரிமை அளித்ததற்காக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையை பாராட்டுகிறது,
;4) காணாமல் போனவர்களின் தமிழ் குடும்பங்கள் உட்பட, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்கான வாதிடுவோரின்  துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறது, அவர்களின்  ஆர்ப்பாட்டங்களும் பதில்களுக்கான கோரிக்கைகளும் சில சமயங்களில் அரசாங்க பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள்,  மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன;
(5) இலங்கையின் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறது மற்றும் இன மோதலுக்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்;
(6) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு அமைவாக விசாரணைகள் மற்றும் வழக்குகளை ஆராய அமெரிக்கா பரிந்துரைக்கிறது;
7]இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு நம்பகரமானதும் செயலாற்றலைக்கொண்டதுமான  சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு ஐ. நா. பொதுச்சபை., ஐ. நா. பாதுகாப்பு சபை , ஐ. நா .மனிதஉரிமைகள் பேரவைஆகியவற்றுடன்  அமெரிக்கா செயற்படவேண்டும்  என்றும் தீர்மானத்தில்  வலியுறுத்தப்பட் டுள்ளது.
“மனித உரிமை மீறல்களுக்கு  குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்று காங்கிரஸ் உறுப்பினர்  ரோஸ் அறிக்கையொன்றில்   தெரிவித்திருக்கிறார். “இலங்கை அரசாங்கம் நீதிக்குத் தடையாக உள்ளது, நிறுவனரீதியான  மறுசீரமைப்பிற்கு  தடையாக உள்ளது,  தமிழர்கள் உட்பட அதிருப்தியாளர்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக மனித உரிமை மீறல்கள்  இழைக்கப்பட்டுள்ளன..”
“இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க ஒரு சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன், மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித மற்றும் சிவில் உரிமைகள் மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வாக்குறுதிகளைப் பின்பற்றுமாறு  ராஜபக்ச அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்,” என்றும்அவர்  கூறியுள்ளார்.
தீர்மானத்திற்கு இணை தலைமை தாங்கியகாங்கிரஸ்  உறுப்பினர் ஜோ ன்சன்
கூறுகையில் ,
”வடகிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் ,சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்க சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளனர்”என்று  தெரிவித்திருக்கிறார்.

 

Thinakkural.lk <p>* ஐ. நா . வின் 3 பிரதான  அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை —————- இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் […]</p>

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நிகழ்ந்த குற்றகள் குறித்து சவர்தேச பெறிமுறை அவசியமாகும் - தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்க காங்கிரஸ் 

(ஆர்.ராம்)

இலங்கையில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சர்வதேச பொறிமுறையை கோரும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ், “இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான செயற்றிறனுடைய சர்வதேச பொறிமுறையையும்: நிரந்தர அரசியல் தீர்வையும் கோரல்” எனும் தீர்மானத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார். 

 

0101.jpg

 

முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் நிறைவுக்கு வந்து 12ஆண்டுகளாகிவிட்ட நிலையில் போரின் இறுதியில் பாரிய தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்புக்களுக்கு இலங்கை இராணுவம் காரணமாக உள்ளது. 

 

பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் கடந்துள்ள நிலையிலும் அக்குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கூறச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது. 

 

அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. 

 

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிவர்த்தி செய்யவோ, விசாரணைக்கு உட்படுத்தவோ, வழக்குத் தொடரவோ தவறியதால், குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உள்நாட்டில் தண்டனைகளற்ற நிலைமையே நீடிக்கின்றது. அத்துடன்  உள்நாட்டு பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறலையும் நீதியையும் அடையும் என்று இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

 

இலங்கையில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போரில் மரணமடந்துள்ளனர். காணாமல் போயுள்ளனர். துஷ்பிரயோகம் மற்றும் இடம்பெயர்வுகளை அனுபவித்துள்ளனர் என்பதை காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூட்டிக்காட்டுவதோடு  மிகவும் போரினால் பாதிக்கப்பட்ட பாரம்பரியமான தமிழர் தாயக பிராந்தியங்களில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு சிப்பாய் என்ற அடிப்படையில் இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றது.

  

அத்துடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வின் பெற்றுக்கொள்வதற்காக ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வடகிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினையும் இந்தத் தீர்மானம் அங்கீகரிப்பதாக உள்ளது. 

 

இதேவேளை, பிரேரணையை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ், இலங்கை அரசாங்கமானது, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவது அவசியமாகும். 

 

மேலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கான நீதி கிடைப்பதில், இலங்கை அரசாங்கம் தடையாக உள்ளது. அத்துடன் நிறுவனங்கள் ரீதியான சீர்திருத்தங்களுக்கும் தடையாக உள்ளது.  அத்துடன் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை மீறிச் செயற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

 

அத்துடன் குறித்த தீர்மானத்திற்கு இணைத்தலைமை வகித்த ஜோன்சன் கூறுகையில், 

 

இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்காக சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் பணியையும் முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றறேன். 

 

போர்க்குற்றங்கள் மற்றும் மனித, சிவில் உரிமைகள் மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான காலதாமத வாக்குறுதிகளைப் தவிர்க்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் உறுதி மொழிகளை ஊக்குவிக்கிறேன் என்று காங்கிரஸ்காரர் தீர்மானத்திற்கு இணை தலைமை தாங்கிய ஜோன்சன் கூறினார்.

 

வடகிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிகழ்ந்த குற்றகள் குறித்து சவர்தேச பெறிமுறை அவசியமாகும் - தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்க காங்கிரஸ்  | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.