Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை

மகனுக்கு மருந்து வாங்க  300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த  தந்தை

 

மகனுக்கு மருந்து வாங்குவதற்காக 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் பாசக்கார தந்தை ஒருவர்
பதிவு: ஜூன் 01,  2021 15:11 PM
பெங்களூரு 

கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து இல்லாததால் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம்  மைசூரு அருகே நரசிபூர் தாலுகா கனிகன கோப்பலு  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் கட்டைட தொழிலாளி  
 போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்தநிலையில் இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார். மைசூரூவில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும், ஒரு நாள் கூட தவறவிடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.சிறுவன் 18 வயதை அடைவதற்கு முன்னர் மருந்துகள் நிறுத்தப்பட்டால் கால்-கை வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மகனை மருத்துவமனைக்கு பெங்களூரு அழைத்துச் செல்லமுடியாமல் ஆனந்த் தவித்தார்.

நாள் தவறாமல் மகனுக்கு மருந்து கொடுக்க வேண்டிய சூழலில் வேறு வழியின்றி பெங்களூருக்கு சைக்கிளில் செல்ல ஆனந்த் முடிவெடுத்தார். கனகபுரா பாதை வழியாக பயணம் செய்தார்.

ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு சென்றடைந்தார் ஆனந்த்.

கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். ஆனந்த்தின் முயற்சியை எண்ணி நெகிழ்ந்து போன அவர்கள் ஆனந்தின் மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினர்.

அதை பெற்றுக்கொண்டு ஆனந்த் அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக அவர் 300 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில் ‘‘எனது மகனுக்கு தேவையான மருந்தை வாங்குவதற்காக மைசூரு சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் தேவையான மருந்து கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள் கூட மருந்து சாப்பிடாமல் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இதனால் பெங்களூரு சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சைக்கிளில் சென்று வாங்கி வர முடிவு செய்து சென்றேன். அதன்படி வாங்கி வந்தேன். கஷ்டப்பட்டாலும் எனது மகனின் உடல்நலத்தை எண்ணிப் பயணம் செய்தேன். மருந்து வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சிஎனக் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/01151148/Man-cycles-300-km-to-get-medicine-for-his-son-in-Karnataka.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் அன்பும் தியாகமும் தரைக்குள் கிடைக்கும் வேர் போன்றது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

CICTkXZUEAA8Xcm.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

சில  சமயங்களில் தாய் கூடத் தான் செய்தவற்றைச் சொல்லிக்காட்டுவாள்!

ஆனால் ...தந்தை மூச்..! எப்பவுமே சுமை தாங்கி தான்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

சில  சமயங்களில் தாய் கூடத் தான் செய்தவற்றைச் சொல்லிக்காட்டுவாள்!

ஆனால் ...தந்தை மூச்..! எப்பவுமே சுமை தாங்கி தான்!

எனக்குத் தற்பெருமை பிடிக்காது புங்கையர்.....!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.