Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி - உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பஸ்களை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் என்று கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று(16.06.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பஸ்களையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்றிடம் தொடர்பில் சிலரினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை  செயற்கையாக உருவாக்கும் நோக்குடன், பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பஸ்கள், கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட  உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படு்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன்றது.

குறிப்பாக, கடந்த 2017  ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய  கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கருடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.

இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்த விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத  பஸ்களை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும்  உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 பல நூற்றாண்டுகளாய் அந்நியர் வசமே இருந்த தமிழர்  நில நீர் பரப்புகளை சில ஆண்டுகளாவது  எதிரிகளுடன் போராடி மீட்டு எமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் என்பது நாம் இறந்து பல நூற்றாண்டு காலம் ஆன பின்பும்   அடுத்து அடுத்து வரும் எம் எதிர்கால   தலைமுறையால்  அதிசமாய் பார்க்கபடபோகும் ஒன்று.

  இனி வரும் எத்தனை தலைமுறையும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படப்போகும் அவர்கள் தலைமுறைக்கு கற்பனைக்கு எட்டாத ஒன்று.

வென்றார்களோ தோற்றார்களோ வேறு விஷயம் கண்டிப்பாக அது காவியம்தான்

தனக்கு சொந்தமான பூமியை தனது ஆளுகைக்குள் வைத்திருந்த ஒரு இனத்தின் வரலாறு அந்த ஒற்றை மனிதனுடன் முற்றுப்பெற்றுபோனது. ஆனால் அந்த காவிய காலம் எதிர்கால சந்ததியால் ஆக குறந்தது மனசுக்குள்ளாவது பக்கம் பக்கமாக படிக்கப்படும்..

நீ சிங்களவன் தர்றத தின்னுபுட்டு கடலுக்குள்ள பஸ்சை தாக்குறதபத்தி மட்டும்தானே பேசணும், எதுக்கு காவியம்பற்றி எல்லாம் பேசுறே? இதெல்லாம் உங்களுக்கு சம்பந்தபடாத இன மானம் சம்பந்தப்பட்ட விஷயம்.

உங்களுக்கும் இன மானத்துக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

தனக்கு  சம்பந்தமில்லாத விஷயங்களில் ஒருவன் மூக்கை நுழைப்பதுகூட காடாத்து பண்ற வேலைதான்.

ஒருகாலம்  புலிகள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தால் நான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று அடிக்கடி கூறினீர்களே, இப்போ புலிகள் இயக்கமே இல்லையே எப்போது அரசியலைவிட்டு ஒதுங்குவீர்கள்?

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லா அற்ப பிறவிகள் காவியம்பற்றியெல்லாம் பேசகூடாது, அதெல்லாம் பெரிய விஷயம்.

  • கருத்துக்கள உறவுகள்

காவியம் படைக்கப்பட்டதால் தான் பனையை வெட்டி கடலில நட்டனீங்கள். உங்கள் கறுமங்களை மக்கள் அறிவார்கள்.

இப்படி கேள்வி என்னடா என்னா.. இவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வை பகிரங்கப்படுத்தட்டும் பார்க்கலாம். அந்த ஆய்வு ஏற்கத்தக்கதா அல்லது பக்கச் சார்ப்பானதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஏனெனில்.. ஹாவாய் தீவை சுற்றி கடலில்  இப்படிப் போடப்பட்ட உக்கல் உலோகங்களின் நன்மையை விட தீமைகளும் அதிகம் என்றே ஆய்வுகள் சொல்கின்றன. தொடர்ந்து ஆய்வுகள் நடாத்தி நிலைமை கண்காணிக்கப்படனும் என்று தான் சொல்கின்றது விஞ்ஞானம்.

கொழும்பு கப்பல் விபத்தால் வடக்குக்கு பாதிப்பில்லை என்ற கணக்கா கதைவிட்ட இவர்... இப்போ மன்னாரிலும்.. தீவகத்திலும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு.. கப்பல் கழிவுகள் கரை ஒதுங்குவதற்கு என்ன பதில் வைச்சிருக்கிறார்...??!

மொக்கன் என்னத்திலையோ முட்டினால்.. மூன்று இடத்துக்கு சேதம் என்பார்கள்.. அதே தான் கதை இங்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.