Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கொவிட் தடுப்பூசி உற்பத்தி என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளைய தினம் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மற்றும் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1223117

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 

 

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துளார். டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு ஸ்டாலின் மேற்கொள்ளும் முதலாவது வெளி மாநில பயணம் இதுவாகும்.

இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை 5.45 மணியளவில் ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார்.

டெல்லியில் இன்று இரவு தங்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 

 

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துளார். டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு ஸ்டாலின் மேற்கொள்ளும் முதலாவது வெளி மாநில பயணம் இதுவாகும்.

இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை 5.45 மணியளவில் ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார்.

டெல்லியில் இன்று இரவு தங்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.

ஹலோ,  பிழம்பு… செய்தியின் மூலத்தை குறிப்பிடவும். 👈 😎

அல்லது… இதை நீங்கள், டெல்லிக்குப் போய் திரட்டிய செய்தி என்று… நாங்கள் நினைக்க வேண்டி வந்திடும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஹலோ,  பிழம்பு… செய்தியின் மூலத்தை குறிப்பிடவும். 👈😎

அல்லது… இதை நீங்கள், டெல்லிக்குப் போய் திரட்டிய செய்தி என்று… நாங்கள் நினைக்க வேண்டி வந்திடும். 🤣

இந்திய பிரதமர் மோதியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்திப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)

  • கருத்துக்கள உறவுகள்

'நீட் முதல் கச்சத்தீவு வரை' முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பில் முன்வைத்த கோரிக்கைகள்!

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார். - தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி தமிழ்நாடு இல்லதுக்கு சென்ற ஸ்டாலினை திமுக எம்.பி- க்கள் வரவேற்றனர். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அதன் பிறகு கோரிக்கைகள் அடங்கிய மணு ஒன்றையும் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளார். அது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்டாலின்,

"கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்தி்க்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் எங்களிடத்திலே வெளிப்படையாகக் தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கையையும் அவரிடம் கொடுத்துள்ளோம். கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமெனவும், செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையை உடனடியாகச் செயல்பட வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

 
மோடி
 
மோடி

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். திருக்குறளை தேசிய நூலாகக்கவும், மேகதாது திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படவும், இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளோம். கச்சத்தீவு மீட்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமைனையை விரைவராகக் கட்டி முடிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். மருத்துவத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தர வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக குடியேறியுள்ள மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு உரிமைகளை மாநில அரசே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். குடியரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். இப்படியாக மேலும் சில கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அதை நிறைவேற்றவும் அழுத்தம் கொடுப்போம் " என்றார். மத்திய அரசுடனான உறவு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உறவுக்கு கை கொடுப்போம்உரிமைக்கு குரல் கொடுப்போம் என பதிலளித்தார்.

ஏழு தமிழர் விடுதலை குறித்த பத்திரிகையாளர்களின் கேட்டதற்கு அது குறித்து ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளோம். குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

'நீட் முதல் கச்சத்தீவு வரை' முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பில் முன்வைத்த கோரிக்கைகள்! Article about Tamil Nadu chief minister Stalin's meeting with Prime minister Modi - Vikatan

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி, மன நிறைவு: மோடி சந்திப்பு பற்றி ஸ்டாலின்

spacer.png

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது. பிரதமரை சந்தித்ததற்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று அங்கே செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“ கொரோனா என்ற பெருந்தொற்று பரவல் காரணமாக பதவியேற்ற உடனேயே பிரதமரை சந்திக்க முடியவில்லை. நியாயமாக முன்பே சந்தித்திருக்க வேண்டும். எனினும் இப்போது தொற்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் குறையும் நிலையில், பிரதமரிடம் நேரம் கேட்டேன். அவரும் நேரம் ஒதுக்கிக்கொடுத்தார்.

 

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக மன நிறைவான சந்திப்பாக இருந்தது. முதலில் எனக்கு வாழ்த்துகளை சொன்னார். நானும் அவருக்கு நன்றி சொன்னேன். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதிமொழியளித்தார். எந்த கோரிக்கை என்றாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் திட்டங்கள், தேவைகளுக்கான கோரிக்கைகளை முழுமையாக தயாரித்து அவரிடம் கொடுத்திருக்கிறோம். அதை முழுமையாக சொல்ல நேரம் இல்லை. அதில் சில தலைப்புகளை மட்டும் சொல்கிறேன்” என்றவர் அதைப் பட்டியலிட்டார்.

“தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கவேண்டும். செங்கல்பட்டு, ஊட்டி தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டுக்கான நிலுவையில் இருக்கும் நிதியை தர வேண்டும், ஜிஎஸ்டி பாக்கியை தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும், மேகதாது அணைத் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட வேண்டும், காவேரி-கோதாவரி இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், கச்சத் தீவு மீட்பு, புதிய மின்சார சட்டம் நீக்கப்பட வேண்டும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுத்தப் படவேண்டும், கோவையிலும் புதிய எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, செம்மொழித் தமிழாய்வு மையம் சீரமைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அளவுகோலை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும், சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், பெண்களுக்கு 33% ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடத்திலே மெமோரண்டமாக கொடுத்திருக்கிறோம்.

 

இதில் பல பிரச்சினைகள் நேரடியாக ஒன்றிய அரசு செய்ய வேண்டியது. சில பிரச்சினைகள் இரண்டு அரசுகளும் இணைந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிறைவேற்ற முடியும் என்ற நம்பிகையை டெல்லி பயணம் கொடுத்திருக்கிறது, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம். தலைநகரில் தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வாதாட வேண்டும்” என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன பதில் சொன்னார் என்று கேட்டபோது, “ நான் அமைச்சர்களோடு பேசி, அதிகாரிகளோடு பேசி நல்ல முடிவு சொல்கிறேன் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசுடனான உறவு எப்படியிருக்கும் என்று கேட்டபோது, “கலைஞரின் வழியில் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்”என்று பதில் அளித்தார் ஸ்டாலின்.

 

https://minnambalam.com/politics/2021/06/17/42/modi-stalin-meet-pleasure-delhi-tamilnadu-demands

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.