Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டைவிட்டு வெளியேறினார் கோத்தபாய ராஜபக்ச: கொழும்பு ஆங்கில ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைவிட்டு வெளியேறினார் கோத்தபாய ராஜபக்ச: கொழும்பு ஆங்கில ஊடகம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்காவிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

சிறிலங்காவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தினால் அழுத்தங்கள் ஏற்படலாம் என்ற கருத்தைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா கடந்த சனிக்கிழமை திட்டமிடாத பயணமாக குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

தன்னை படுகொலை செய்ய கோத்தபாய திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரான சிறீபதி சூரியராச்சி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த 48 மணிநேரத்தில் கோத்தபாயா நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து ஐ.நாவின் பாதுகாப்புச் சபை கடந்த மாதம் கலந்துரையாடியதுடன், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் அவசியம் என பிரான்ஸ்சும் அழைப்பு விடுத்திருந்தது.

அமெரிக்காவின் 50 காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு சிறிலங்காவில் நடைபெற்று வரும் மோசமான

நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க அரச தலைவர் நடைவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கு நடைபெறும் நீதிக்கு புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை இரு தரப்பும் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே கோத்தபாய உடனடியாக நாடு திரும்பப் போவதில்லை என சில தகவல்கள் தெரிவித்த போதிலும் அவர் எதிர்வரும் 15 ஆம் நாள் சிறிலங்கா திரும்பக் கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்கள் தெரிவித்தன என்று அந்த ஆங்கில வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

ஜூலை முடிந்தபின் வருவார் தாக்குதல் பயமாக இருக்கும் முன்னோர் செய்த அட்டகாசத்தினது நினைவு நாட்கள் அல்லவா .அத்துடன் மண்டைதீவில் நடந்த கொலைகளின் முக்கியகாரணகார்தாவும் இவர்தான் இவர் மீது அமெரிக்கா வாழ் மக்கள் வழக்கு தொடரமுடியாதா போர் குற்ரவாளி என

செய்த பாவத்துக்கு இப்ப நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் இனி நாடே இல்லாம அலையப்போறார்

தமிழ் வர்த்தகர்களிட்டை கொள்ளையடிச்ச காசை செலவளிக்க குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கார். உவனாவது நாட்டை விட்டு போறதாவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Defence Spokesman Keheliya Rambukwella further said that it was heartening to note that no new cases of abductions have been reported. Since a major breakthrough was made recently with the arrest of ten suspects a leader of the gang has left the island and the INTERPOL has been informed.

http://www.nationalsecurity.lk/fullnews.php?id=6465

Edited by Vasan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.