Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் எனக்குப் பிறக்காதா
நானவ் விறையை உணரேனா
ஊனுள் கலந்து உள்ளுருகி
உளத்தில் நிறைந்த தெய்வதத்தின்
மோன நிறைவில் முழுதாக
மூழ்கிப் பிறப்பின் முழுநோக்கை
ஆன மட்டும் புரிந்தந்த
அறிவின் தெளிவில் இவ்வுலகில்
ஏனென் இருப்பு என்பதனை
எனது மனதில் உணரேனா?

எங்கும் நிறைந்த சக்திதனை
என்னைப் படைத்த திருவருளை
அங்கும் இங்கும் என்னாது
அனைத்தும் நிறைக்கும் அன்புருவை
பொங்கும் மகிழ்வில் உளமாரப்
புரிந்து சிலிர்க்கும் நற்பேறை
தங்கு தடைகள் இல்லாது
தமியன் அடைய முடியாதா?

ஒன்றும் இல்லாச் சூனியத்தில்
உதித்ததிந்தப் பேரண்டம்
என்றோ ஒருநாள் உருவழிந்து
எங்கும் எதுவுமில்லாமல்
இன்று நேற்று நாளையெனும்
எதுவுமில்லாப் பரவெளியில்
ஒன்றிக்கலந்து போய்விடுமாம்
உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.

என்றிவ்வாறாய் அறிஞா் பலர்
எமக்கு விளக்கம் கூறுகிறார்
நன்று இதனை நாமுணரல்
நமது பிறப்பில் முடியாது
இன்று பிறந்தே வாடுகிறேன்
இறைவன் இருப்பைத் தேடுகிறேன்
ஒன்றும் புரியா உலகிலது
வொன்றைத் தவிர என்செய்வேன். 

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, karu said:

ஞானம் எனக்குப் பிறக்காதா
நானவ் விறையை உணரேனா
ஊனுள் கலந்து உள்ளுருகி
உளத்தில் நிறைந்த தெய்வதத்தின்
மோன நிறைவில் முழுதாக
மூழ்கிப் பிறப்பின் முழுநோக்கை
ஆன மட்டும் புரிந்தந்த
அறிவின் தெளிவில் இவ்வுலகில்
ஏனென் இருப்பு என்பதனை
எனது மனதில் உணரேனா?

எங்கும் நிறைந்த சக்திதனை
என்னைப் படைத்த திருவருளை
அங்கும் இங்கும் என்னாது
அனைத்தும் நிறைக்கும் அன்புருவை
பொங்கும் மகிழ்வில் உளமாரப்
புரிந்து சிலிர்க்கும் நற்பேறை
தங்கு தடைகள் இல்லாது
தமியன் அடைய முடியாதா?

ஒன்றும் இல்லாச் சூனியத்தில்
உதித்ததிந்தப் பேரண்டம்
என்றோ ஒருநாள் உருவழிந்து
எங்கும் எதுவுமில்லாமல்
இன்று நேற்று நாளையெனும்
எதுவுமில்லாப் பரவெளியில்
ஒன்றிக்கலந்து போய்விடுமாம்
உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.

என்றிவ்வாறாய் அறிஞா் பலர்
எமக்கு விளக்கம் கூறுகிறார்
நன்று இதனை நாமுணரல்
நமது பிறப்பில் முடியாது
இன்று பிறந்தே வாடுகிறேன்
இறைவன் இருப்பைத் தேடுகிறேன்
ஒன்றும் புரியா உலகிலது
வொன்றைத் தவிர என்செய்வேன். 

May be an image of text

1520139373646?e=1629331200&v=beta&t=BOTY நல்லதொரு கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி தமிழ்த்தேசியன்.  எனது கவிதைகளை ஆர்வத்தோடு படித்து பகிர்வுக்கு நன்றிகூறும் தங்கள் கரிசனை மகிழ்ச்சியளிக்கிறது.  நீங்கள் போட்டிருக்கும் படம் பொருத்தமானது.  அதனை எனது தேவைகளுக்குப் பாவிக்கலாமென எண்ணுகிறேன் அனுமதிக்கவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karu said:

மிக்க நன்றி தமிழ்த்தேசியன்.  எனது கவிதைகளை ஆர்வத்தோடு படித்து பகிர்வுக்கு நன்றிகூறும் தங்கள் கரிசனை மகிழ்ச்சியளிக்கிறது.  நீங்கள் போட்டிருக்கும் படம் பொருத்தமானது.  அதனை எனது தேவைகளுக்குப் பாவிக்கலாமென எண்ணுகிறேன் அனுமதிக்கவும்.

 

தாராளமாக பயன்படுத்துங்கள் .. அந்த பச்சை புள்ளியை அழுத்தி நன்றியை தெரிவிக்கலாமல்லொ தோழர்.👌

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் எனக்குப் பிறக்காதா
நானவ் விறையை உணரேனா
ஊனுள் கலந்து உள்ளுருகி
உளத்தில் நிறைந்த தெய்வதத்தின்
மோன நிறைவில் முழுதாக
மூழ்கிப் பிறப்பின் முழுநோக்கை
ஆன மட்டும் புரிந்தந்த
அறிவின் தெளிவில் இவ்வுலகில்
ஏனென் இருப்பு என்பதனை
எனது மனதில் உணரேனா?

Image

 

எனது உள் உணர்வை இதைவிட 
மிக எளிமையாக தெளிவாக 
எழுதமுடியுமா என்றால் நிற்சயமாக இல்லை.

எவ்வாறு உங்களால் இவ்வாறு எழுத முடிகிறது?
என்பதுதான் எனது தற்போதைய கேள்விகள் 

நீங்கழும் உள்ளம் உருகியதுண்டா? 

கவிதைக்கு மிக்க நன்றிகள் !
ஒவ்வரு வரியாக ரசித்து வாசிக்கிறேன்  

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் இல்லாச் சூனியத்தில்
உதித்ததிந்தப் பேரண்டம்
என்றோ ஒருநாள் உருவழிந்து
எங்கும் எதுவுமில்லாமல்
இன்று நேற்று நாளையெனும்
எதுவுமில்லாப் பரவெளியில்
ஒன்றிக்கலந்து போய்விடுமாம்
உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.....!

 

சிறப்பான கவிதை கரு ....கருவும் சிறப்பு......மீண்டும் இருமுறை வாசித்தேன் தேன் .......!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாராளமாக பயன்படுத்துங்கள் .. அந்த பச்சை புள்ளியை அழுத்தி நன்றியை தெரிவிக்கலாமல்லொ தோழர்.👌

மிக்க நன்றி தமிழ்த்தேசியன்.   பச்சைப்புள்ளியைக் காணவில்லையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

எனது உள் உணர்வை இதைவிட 
மிக எளிமையாக தெளிவாக 
எழுதமுடியுமா என்றால் நிற்சயமாக இல்லை.

எவ்வாறு உங்களால் இவ்வாறு எழுத முடிகிறது?
என்பதுதான் எனது தற்போதைய கேள்விகள் 

நீங்கழும் உள்ளம் உருகியதுண்டா? 

கவிதைக்கு மிக்க நன்றிகள் !
ஒவ்வரு வரியாக ரசித்து வாசிக்கிறேன்  

எனது கவிதை பற்றிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மருதங்கேணி.  சுயவிசாரம் (ஆத்ம விசாரம்)  எல்லோருக்கும் இருக்கும் ஆனால் அதனைத் தம் உள்ளே விசாரித்து நோக்க அனேகருக்கு நேரமோ தேவையோ இருப்பதில்லை.   என்னைப்போன்ற வேலை மினக்கெட்டவர்கள் அதைச் செய்கிறோம்.  பதில் தெரியாமல் திண்டாடுகிறோம்  பதிவிலும் போடுகிறோம்.  வாசிப்பவர்களில் உங்களைப்போன்ற சிலர் அது தங்கள் சிந்தனைகளுடன் ஒத்துப்போகின்றதால் பதிலெழுதுகிறார்கள்.  பலரை அது கடந்து போய்விடும்.  உங்களைப் போன்ற சிலரைத் தடுத்து நிறுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.  எழுத்தின் நோக்கம் அதனால் நிறைவேறுகிறது.
 

14 hours ago, suvy said:

ஒன்றும் இல்லாச் சூனியத்தில்
உதித்ததிந்தப் பேரண்டம்
என்றோ ஒருநாள் உருவழிந்து
எங்கும் எதுவுமில்லாமல்
இன்று நேற்று நாளையெனும்
எதுவுமில்லாப் பரவெளியில்
ஒன்றிக்கலந்து போய்விடுமாம்
உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.....!

 

சிறப்பான கவிதை கரு ....கருவும் சிறப்பு......மீண்டும் இருமுறை வாசித்தேன் தேன் .......!  🌹

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.