Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு நிர்வாகத்தை இரண்டு வருடங்கள் புலிகளின் தலைவர் பிரபாவிடம் வழங்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நிர்வாகத்தை இரண்டு வருடங்கள் புலிகளின் தலைவர் பிரபாவிடம் வழங்க வேண்டும்

நிஷாந்தி

இனப்பிரச்சினை தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் அமைச்சர் மஹிந்த விஜயசேகர

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும். வடக்கு மாகாணத்தை இலங்கையின் வலயமாக பிரகடனப்படுத்தி, அதன் நிர்வாகத்தை இரண்டு வருடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வழங்க வேண்டும்.

இதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விசேட செயற்றிட்ட அமைச்சர் மஹிந்த விஜயசேகர தெரிவித்தார். வடக்கு நிர்வாகத்தினை இரு வருடங்களுக்கு பிரபாகரனிடம் வழங்குவதன்மூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவரின் நடைமுறைப் பங்களிப்பின் பிரதிபலனை வடக்கில் வாழும் தமிழ் மக்களால் தெளிவாக தெரிந்தகொள்ள முடியும். பின்னர், மஹிந்த ராஜபக்ஷவா? அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனா? சிறந்த தலைவர் என்பதை வடக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

இது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பு கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி (ஜனநாயகக்குழு) வின் தலைமையகமான செத்செவனயில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில் தெரிவித்ததாவது: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை ஜனாதிபதியாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பிரதமாராகவும் கொண்டுவருவதற்கான அரசியல் சதித்திட்டம் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. நாட்டில் யுத்தம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கு வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்க்கப்படுவது அவசியம். எனவே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வலயமாக வடக்கு மாகாணத்தை பிரகடனப்படுத்தி, இரண்டு வருடங்களுக்கு அதன் நிர்வாகத்தை பிரபாகரனிடம் கையளிக்க வேண்டும். பின்னர், அங்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் தமக்குத் தேவையான தலைவர் யார்? என்பதை மக்கள் தெரிவுசெய்வர்.

நடைமுறைப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கும் பிரபாகரனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது சிறந்தது. அவரும் திறந்த பொருளாதாரத்தால் எழும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். இதன்மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி பிரபாகரன் என்ன செய்கிறார்? என்று வடக்கில் வாழும் 99 வீத தமிழ் மக்களாலும் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.

சிங்களவர்கள் தமக்கு ஒன்றும் தருவதில்லை என்பதற்காக, அவர்களைத் தாக்குவதற்கு மட்டுமே பிரபாகரன் தமிழ் மக்களால் பயன்படுத்தப்படுகிறார். பிரச்சினையை தீர்ககும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டால், மக்களால் அவரின் தரத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனால் கிழக்கில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஹொங்கொங் நிர்வாக முறைமையயை ஒத்த நிர்வாக அதிகாரம் பிரபாகரனுக்கு வழங்கப்படுவதன் ஊடாக இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் போதியளவு முன்னேற்றம் காணமுடியுமாக இருக்கும். இவை எனது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். தேசிய அரசாங்கம் வேண்டும்

இனவாத கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு அரசாங்கத்தை ஒருபோதும் முன்கொண்டுசெல்ல முடியாது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். இதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்சிக்க வேண்டும். இவ்வாறான கூட்டிணைவு ஏற்பட்டால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், எனது அமைச்சுப் பொறுப்பைக்கூட விட்டுக்கொடுக்கத் தயார். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கும்போது பெரும்பான்மை சமூகம் பாதிக்கப்படும் வகையில் அது அமைந்துவிடக் கூடாது. இதேபோன்று பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அவை சிறுபான்மை சமூகத்தை பாதிப்பதாக இருக்கக் கூடாது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக அடித்தால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது.

நாம் திருடர்கள் என்றும் துரோகிகள் என்றும் ஜே.வி.பி.யினர் சேறுபூசுகின்றனர். யார் பயங்கரவாத நடவடிக்கைகளில் களமிறங்கி துரோகத்தனம் புரிந்தவர்கள் என்பது ஜே.வி.பி.யினருக்குத் தெரியும். கூட்டணி ஆட்சி அமைவுக்காக கட்சி மாற்றம் சாதாரணமாகிவிட்டது. அதனை பெரும் குற்றமாக கூறிவட முடியாது. இந்த அரசாங்கத்தை வீழ்த்தி யாரிடம் பொறுப்பை வழங்குவது? எனவே, நாம் இந்த அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க மாட்டோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதுவே எமது விருப்பம். அதனாலேயே நாம் 17 பேரும் அரசாங்கத்துடன் இணையவேண்டி ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தான் ஜனாதிபதியாக வருவதற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பிரதமராக்குவதற்கும் திரைமறைவில் முயற்சிகளை எடுத்துவருகிறார்.

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

புளித்துப் போன யோசனை!

தொண்டமான் முன்பு வடக்குகிழக்கைப் புலிகளுக்கு 10 வருடங்கள் ஆட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்றார்.அதுக்குக் கூட தலைவர் உடன்படவில்லை. காலம்காலமாக எம் மக்கள் படுகின்ற கஸ்டங்களுக்கு வெறும் 2 வருடம் என்பது சுத்துமாத்து. அப்படியென்றால் அதைவிட சமாதானப் பேச்சுவார்த்தை என்று நிறையக் காலத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு நிரந்தரமான தீர்வின்றி இவர்களை நம்பி எக்காரணம் கொண்டும் போய்விட முடியாது.

எலும்புத்துண்டுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவரல்ல பிரபாகரன் அதற்கு ஆசைபட்டிருந்தால் அதற்கான அருமையான சந்தர்பங்கள் அவருக்கு கிடைத்தும் வீணாக்கி இருக்க மாட்டார்.இதனை கருணாவுக்கோ அல்லது டக்கிகோ சொல்லுங்கோ

இவர்கள் போடும் பிச்சை அல்ல விடுதலை. அது எங்கள் பிறப்புரிமை. கிழக்கை உள்ளடக்காத எந்த தீர்வும் தமிழரை பிரித்து அழிக்கும் தந்திரமே ஒழிய வேறில்லை. ஒரு இலங்கைத்தீவு அதில் இரு நாடு. இது தான் நிரந்தர தீர்வு. இது தான் சிங்களவர்களுக்கும் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை பிரபாகரனிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கி விட்டதா

வீரகேசரி நாளேடு

1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த நாட்டிற்கு இந்த ஆண்டே அழிவுகூடிய ஆண்டாக இருக்கின்றது. குறுகிய காலத்தில் கூடுதலான அழிவுகளை இந்த அரசாங்கம் தேடிக்கொண்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று முன்வைக்கப்படாத நிலையில் கிழக்கை மீட்டதன் பின்னர் வடக்கை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இரண்டு வருடங்களுக்கு ஒப்படைக்கவேண்டும் என அமைச்சர் மஹிந்த விஜேசேகர தெரிவித்துள்ளதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் அமைச்சரவை 30 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் அமைச்சரவை அமைச்சு பதவிகளை வைத்திருப்பதை தடைசெய்தல் என்ற தனி நபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது;

இந்த பிரேரணையை நான் தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கத்திற்காக கொண்டுவரவில்லை. முன்னால் ஜனாதிபதிகள், பிரதமர்கள் அமைச்சரவையில் அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் முக்கிய பதவிகளை வகிக்கவில்லை என்று கூறவில்லை எனினும் இவ்வாறு வைத்திருக்கவில்லை . ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நிறைய பணிகள் இருக்கின்றன. ஐ.தே.க.ஆட்சிக் காலத்தில் சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியும் பிரதமரும் சில தவறுகளை செய்து இருக்கின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தேடியறித்து அதற்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அமைச்சரவையை பிரதமர் வழிநடத்துவபவராக இருக்கவேண்டும். எனினும் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டு அவர்கள் மீது பாரம் திணிக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த நாட்டிற்கு இந்த ஆண்டே அழிவுகூடிய ஆண்டாக இருக்கின்றது. குறுகிய காலத்தில் கூடுதலான அழிவுகளை இந்த அரசாங்கம் தேடிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கூட நிதியமைச்சை தம்வசம் வைத்திருக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்ற இந்தியாவில் இந்திய ஜனாதிபதி மன்மோகன்சிங் அமைச்சரவையை 65 க்கு மட்டுப்படுத்தியுள்ளார். இதேபோல இங்கிலாந்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவ்வாறான உலக நாடுகளின் முன்மாதிரிகளை தெரிந்துகொள்ளவேண்டும். அப்போழுதுதான் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாமும் இந்த நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிக்கின்றபோது அரசாங்கத்திற்குள் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன. இதனால் சர்வகட்சி ஆலோசனை குழுவிடமிருந்து ஒரு முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படையினர் கிழக்கே மீட்டதன் பின்னர் வடக்கை புலிகளிடம் இரண்டு வருடங்களுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று அமைச்சர் மஹிந்த விஜேசெகர தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.