Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொப்பிகலவை கைப்பற்றுவதற்கு அது முக்கியத்துவமான பிரதேசம் அல்ல! முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jul 7 5:07:55 EEST 2007

தொப்பிகலவை கைப்பற்றுவதற்கு அது முக்கியத்துவமான பிரதேசம் அல்ல! முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி

1987 ஆம் ஆண்டு ஜூலை முதல் 1990ஆம் ஆண்டு மார்ச் வரை, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படை போரிட்டு வந்துள்ளது. இப் படைகள் தொப்பிகலக் காடுகளி லும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும், அங்கு நிலைகொள்ள முயலவில்லை. அப்படி நிலைகொள் வதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் இருக்க வில்லை.

இவ்வாறு இந்திய இராணுவ முன்னாள் பிராந்திய தள பதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல புதன்கிழமை வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கு முகமாகவே, முன்னாள் மேஜர் ஜெனரல் மேத்தா இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

20, 000 துருப்புகளைக் கொண்டிருந்தும், இந்திய அமை திப்படையால் தொப்பிகலவைக் கைப்பற்ற இயலவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த வாரம் குறிப்பிட் டிருந்தார்.

அசோக் மேத்தா தமது பேட்டியில்

புலிகளின் கேந்திர பகுதுங்குமிடமாகத் திகழ்ந்தது

""தொப்பிகல பரந்து விரிந்த ஒரு காட்டுப்பகுதி. எத்தகைய தொரு முக்கிய தொடர்பாடலுக்கும் வழிகிடையாது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர பதுங்குமிடமாகத் திகழ்ந்தது'' என விளக்கியுள்ளார்.

""இக்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மருத்து வமனைகள், சிறைக் கூடங்கள், பயிற்சி முகாம்கள் ஆகியவை இயங்கின. இவற்றை நிர்மூலமாக்கு வதற்காக நானே தனிப்பட்ட ரீதியில் இராணுவ நடவடிக்கைகளை வழி நடத்தினேன்'' என்றும் அவர் விவரித்துள்ளார்.

""இராணுவ நடவடிக்கைகளை முடித் துக்கொண்டு எப் போதும் நாம் எமது நிலைக்குத் திரும்பி விடுவோம். அங்கு நிலைகொள்ளவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அங்கு கைப்பற்றுவதற் கும் ஒன்றுமிருக்கவில்øல்'' என்றும் அவர் காரணம் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கு மாவட்டங்களில், மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, அக்கால கட்டத்தில் இந்திய அமைதிப் படையை வழிநடத்தி வந்தவராவார்.

அதேவேளை, இந்திய அமைதிப்படை தொப்பிகலவில் முகாம்களை நிறுவி இருந்தது என தமிழீழ விடுதலைப் புலி களின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஆஸ்திரேலிய வானொலி நிலையமொன்றுக்கு தாம் அளித் துள்ளபோட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பெருமளவிலான மனித சக்தியும் பொருட்செலவும் தேவை

""தொப்பிகலவைக் கைப்பற்றுவதும், தக்கவைப்பதும் பெரும் பகீரதப் பிரயத்தனங்களாகும். பெருமளவிலான மனித சக்தியும் பொருட்செலவும் இவற்றிற்குத் தேவை'' என சுயா தீன இராணுவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

""தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியில் தோற் கடிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு சிக்க லான வளைவுக்குள் மாட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது பெருத்த விரயங்களையும் பொருட்படுத்தாத ஒரு முன் நகர்த் தலாகும் '' என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

இளந்திரையன் "தமிழ் நெற்' றுக்கு சமீபத்தில் தாம் அளித் துள்ள பேட்டியொன்றில், "தமிழீழ விடுதலைப் புலிகளின் வாபஸ் தந்திரோபாயமான உபாயமாகும். இலங்கை இராணுவம் "பொறிக்குள்' நடைபோடுகின்றது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் அதன் செயற்பாடுகளில் குறியாக உள்ளது

இலங்கை இராணுவம் தொப்பிகலப் பகுதிக்குள் பிரவே சித்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ""எனினும், அரசின் நிலைப்பாடு எத்தகைய உறுதி படைத்தது என்பதை எதிர்காலமே நிர்ணயிக்கும். கிழக்குக்கான எமது திட்டங் களை நாம் மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தரு ணத்தில் எம்மால் இதை மாத்திரம் கூறமுடியும்'' என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

எது எப்படியிருப்பினும், இலங்கை இராணுவம் அதன் செயற் பாடுகளிலேயே குறியாகவுள்ளது.

தொப்பிகலவில் 700 சதுர கிலோ மீற்றரை நாம் ஏற்கனவே, கைப்பற்றி விட்டோம். இன்னும் சுமார் 7 முதல் 8 மைல்கள் வரையே பிடிக்க வேண்டும். இதன் பின்னர், முழுப்பகுதியும் எம் கட் டுப்பாட்டுக்குள்ளேயே வந்து விடும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க வியாழக்கிழமை தெரி வித்துள்ளார். "இது இதற்கு முன்னர் நடைபெறாத ஒரு காரியமாகும்' என்றும் அவர் பெரு மிதம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் நடைபெறாத காரியம் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

""தொப்பிகலவைக் கைப்பற்றும் விடயத்தில் முன்னேற் றம் மந்தகதியிலேயே உள்ளது. விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பு உண்டு. தரை அமைப்பும் சிக்கலானது'' என சுயா தீன இராணுவ அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சண்டை முடிவடைந்தால், ஏன் விமா னப்படை புதன்கிழ மையும் வியாழக்கிழமையும் அப்பகுதி மீது வான் வழித் தாக்குதலை மேற்கொண்டன? என "சண்டே டைம்ஸ்' இதழில் இக்பால் அத்தாஸும் கேள்வி எழுப்பியிருக்கின்றார். (சி)

நன்றி - உதயன்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

அரசு மீதான மக்கள் எதிர்ப்பலையை ஜூலை 26 இல் முழு உலகும் பார்க்கும்

ஜ07 - துரடல - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

ழூ தொப்பிகலவை மீட்டு தூபி அமைப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? ரணில் கேள்வி

எம்.ஏ.எம். நிலாம்

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தியை இம்மாதம் 26 ஆம் திகதி காண்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ முழுநாட்டினதும் எதிர்ப்பலைகளை அன்றைய தினம் தலைநகரிலிருந்து உலகம் காணப்போவதாகவும் கூறியுள்ளார்.

சமாதானப் பேச்சுகளில் ஆர்வம் காட்டாமல் அரசு யுத்தத்தில் முனைப்புக் காட்டுவதால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.