Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

July 30, 2021

spacer.png

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும்
எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சங்கத்தின் தலைவி பூங்கோதை தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் பெற்றோர் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை பெற்றுத் தாருங்கள் என கோஷம் எழுப்பினர்.


https://globaltamilnews.net/2021/164024

 

  • கருத்துக்கள உறவுகள்

என்று  தீரும்  இவர்களது கவலைகளும் தேடுதல்களும்????😭

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்’- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

IMG 20210730 095223 1 1 'சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்'- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

 

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதனூடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்று  வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இதில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள்,   ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

received 533519981101521 'சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்'- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

அதில் வவுனியா மாவட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

 “எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்து அரசை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடி கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

 எமதுபோராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது.

எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாக போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம்  கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை” என்றனர்.

அதே நேரம் மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 2009ம் ஆண்டு போர் நடைபெற்ற இறுதிப் பத்து நாட்களில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். சர்வதேச விசாரணை ஒன்று மட்டுமே எமது பிள்ளைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வழிசெய்யும்  என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

ஆனால் இந்த சர்வதேசம் மௌனமாக இருக்கின்றது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.

இலங்கை அரசை நாங்கள் நம்பவில்லை காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு முடிவு என்ன? ஏனெனில் எமக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறதுது. எமது பிள்ளைகளுக்காக போராடுவதற்கு எமது உடம்பில் தெம்பு இல்லை .நாங்கள் தொலைத்தது   நாங்கள் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை.   அந்த பிள்ளைகளுக்காக இன்று நாங்கள் ரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம். இதனை அனைத்து சர்வதேச அரசாங்கங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

 

https://www.ilakku.org/we-can-only-get-a-solution-from-the-international-community/

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 21:22, விசுகு said:

என்று  தீரும்  இவர்களது கவலைகளும் தேடுதல்களும்????😭

தீர்வை தேடி, தேடி காணாமலே முடிந்து போனவர்கள் எத்தனையோ பேர். இவர்கள் உயிரோடு இருக்கும்வரை அந்த வலிகளும், தேடுதல்களும் தொடரும்.இவர்களை வைத்து வியாபாரம் செய்வோருமுண்டு என்பதே வேதனையான விடயம்.                          

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.