Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை !

(எம்.எப்.எம்.பஸீர்)

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார்.

சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார்.

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள  பயங்கரவாதிகளுக்கு எதிராக  உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த படுகொலையின் போது உயிர் தப்பிய,  ஆஞ்சா உள்பன புத்தசார தேரரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்திருந்தார். 

குறிப்பாக, குறித்த படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என அவர் அடையாளப்படுத்தும் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதானிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என  கோரப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 சட்டத்தரணி மோதித்த ஏக்கனாயக்க  ஊடாக தாக்கல்ச் செய்துள்ள குறித்த மனுவில் மனுதாரர்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி,  விடுதலை புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தககுதலில் 31 தேரர்களும் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்துடன்,  தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உயிருடன் இருக்கும் நிலையில்,  அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய கோரப்பட்டுள்ளது. 

அதன்படி குறித்த சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய  உயிருடன் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபா  நட்ட ஈடும் கோரியுள்ளார்.

இந் நிலையில் இந்த மனு தொடர்பிலான பரிசீலனைகள் நேற்று இடம்பெற்ற போது, மனுதாரரான பிக்குவின் வாக்கு மூலத்தை சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ள நிலையில் அவ்வாக்கு மூலத்தை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மன்றில் சுட்டிக்கடடினார்.

இந் நிலையில் இது குறித்த மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

 

https://www.virakesari.lk/article/110655

 

  • கருத்துக்கள உறவுகள்

தேரருக்கு கருணாவின் பலம் தெரியவில்லை. கருணாவினால் சிங்கள இனம் அடைந்த நண்மைகள் பற்றித் தெரிந்திருந்தால், கருணாவைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கனவிலும் இவர் நினைத்திருக்க மாட்டார்.

இலங்கையினை பூரண பெளத்த சிங்கள நாடாக மாற்றுவதற்குக் கருணா செய்த உதவி அளப்பரியது. இது சாதாரண சிங்களவர் கொண்டு அரசியல்வாதிகள், ராணுவத்தினர்வரை நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

மகிந்தவுக்கு அடுத்த ஸ்த்தானத்தில் வைத்துக் கருணா இன்றுவரை பல சிங்கள இனவாதிகளாலும், கல்விமான்களாலும் போற்றப்பட்டு வருகிறார்.

கருணா செய்த அந்த ஒற்றை உதவியின்மூலம், அவர் செய்த அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டன. தமிழரின் ரத்தம் கொண்டு கருணா தனது சிங்களத்திற்கெதிரான பாவங்களை நிரந்தரமாகவே கழுவிக்கொண்டார். 

கருணா இன்று எவராலும் நெருங்கமுடியாத , இலங்கையின் மிகவும் செல்வாக்குள்ள ஒரு மனிதர். இலங்கையின் நீதித்துறையோ, காவல்த்துறையோ கருணாவையோ அல்லது அவருடன் சேர்ந்துநின்று சிங்களத்திற்குத் தொண்டாற்றிய பிள்ளையான் போன்றோரையோ ஒருநாளும் தொடக் கூட முடியாது.

நவீன இலங்கையில் சிங்கள பெளத்தத்தின் வரலாற்றினை எழுதியவர்களில் கருணா மிக முக்கியமானவர் என்பதை இவரைத்தவிர அனைத்துச் சிங்களவர்களும் உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார்.

மஹிந்தவின் காலத்திலேயே வி. முரளிதரனுக்கு விஷேட பதவிகளும், விருதுகளும், அமைச்சுக்களும் இந்த சிங்களவரால் வலியுறுத்தி வழங்கப்பட்டன. யாரும் எதிர்த்து கேள்வி கேட்க துணியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை. இவரே நான் இரண்டாயிரம் ஆமிகளை கொன்றேன் என்றபோதுகூட யாரும் கேள்வி கேட்க துணியவில்லை. ஆனால் இன்று எவருக்கு தன் இனத்தை காட்டிக்கொடுத்து  பதவி பெற்றாரோ அவர் அரசில் இருக்கும்போதே விசாரணை ஆரம்பிக்கப்படுகிறதென்றால் மஹிந்தவோடு ஆலோசிக்காமலா நடந்திருக்கும்? அப்படியென்றால் இனிமேல் இவர் போன்றவைகளின் உதவி தேவையில்லை, வீணாக இவர்களுக்கு படி அளக்கவும் தேவையில்லை, தானே நேரடியாக எது வேண்டுமோ அதற்கு தேவையான சட்டங்களையும் இயற்றி,  சிங்கள அதிகாரிகளையும் நியமித்து அடைய முயற்சி நடக்கிறது. இனி இவர்கள் தங்களை காப்பாற்ற போராட வேண்டிய காலமிது. மக்களிடமும் ஆதரவு கிடையாது, அடித்து, பறித்து பிழைத்தவர்களால் உழைத்து பிழைக்கவும் முடியாது, வீர வசனம் பேசவோ முடியாது. துரோகி துரோகத்தாலேயே அழிவான், அதுதானே நிஞாயமுங்கூட. இனி சிங்களவரிடம் சரிந்துபோன தம் அந்தஸ்த்தை தூக்கி நிறுத்த இதை ஆயுதமாக பாவிக்கிறது ராஜாபக்ச கூட்டம். இப்போ இவர்கள் பேசிய ஜனநாயகத்துக்கு என்ன நடக்கப்போகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

தேரருக்கு கருணாவின் பலம் தெரியவில்லை. கருணாவினால் சிங்கள இனம் அடைந்த நண்மைகள் பற்றித் தெரிந்திருந்தால், கருணாவைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கனவிலும் இவர் நினைத்திருக்க மாட்டார்.

இலங்கையினை பூரண பெளத்த சிங்கள நாடாக மாற்றுவதற்குக் கருணா செய்த உதவி அளப்பரியது. இது சாதாரண சிங்களவர் கொண்டு அரசியல்வாதிகள், ராணுவத்தினர்வரை நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

மகிந்தவுக்கு அடுத்த ஸ்த்தானத்தில் வைத்துக் கருணா இன்றுவரை பல சிங்கள இனவாதிகளாலும், கல்விமான்களாலும் போற்றப்பட்டு வருகிறார்.

கருணா செய்த அந்த ஒற்றை உதவியின்மூலம், அவர் செய்த அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டன. தமிழரின் ரத்தம் கொண்டு கருணா தனது சிங்களத்திற்கெதிரான பாவங்களை நிரந்தரமாகவே கழுவிக்கொண்டார். 

கருணா இன்று எவராலும் நெருங்கமுடியாத , இலங்கையின் மிகவும் செல்வாக்குள்ள ஒரு மனிதர். இலங்கையின் நீதித்துறையோ, காவல்த்துறையோ கருணாவையோ அல்லது அவருடன் சேர்ந்துநின்று சிங்களத்திற்குத் தொண்டாற்றிய பிள்ளையான் போன்றோரையோ ஒருநாளும் தொடக் கூட முடியாது.

நவீன இலங்கையில் சிங்கள பெளத்தத்தின் வரலாற்றினை எழுதியவர்களில் கருணா மிக முக்கியமானவர் என்பதை இவரைத்தவிர அனைத்துச் சிங்களவர்களும் உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பிள்ளையானை ஐக்கியதேசிய கட்சி சிறையில் வைத்த சரித்திரம் உண்டு......அதே போல ஆட்சி மாறினால் எதுவும் நடக்கலாம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.