Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் "புலிகளுடனான தேர்தல் உடன்பாடு" என்ன?: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் "புலிகளுடனான தேர்தல் உடன்பாடு" என்ன?: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 08:06 ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதாக கூறப்படும் உடன்பாடு என்ன என்பது குறித்து கொழும்பு வார ஏடான சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விபரம்:

இந்த உடன்பாட்டின் போது போலியான வீடமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பல மில்லியன் ரூபாய்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவிலாறு பகுதியில் 15,000 சிங்கள விவசாயிகள் நீரின்றி நெருக்கடிகளுக்கு உள்ளன போதும், பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மூதூரில் இடம்பெயர்ந்த போதும், கடும் மோதல்களில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பலியான போதும், போலியான இந்த திட்டம் வன்னிப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் மகிந்தவினால் நாடாளுமன்றத்தில் இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் பெருமளவான பணம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு முன்னரே வழங்கப்பட்டிருந்தது.

அரச தலைவர் தேர்தலின் போது வடக்கு - கிழக்கில் உள்ள மக்களை வாக்களிக்க விடாது தடுப்பதற்காக மகிந்த மேற்கொண்ட இந்த நடைவடிக்கை இரு பகுதிகளை கொண்டது.

முதலாவது பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியான எமில் காந்தனுக்கு பெருமளவான பணத்தை அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்ச வழங்கியிருந்தார். அந்த பணத்தில் அமெரிக்க டொலர்களும் இருந்தன.

இரண்டாவது பகுதி மகிந்தவின் வெற்றியுடன் நடைமுறைக்கு வந்தது. அதில் விடுதலைப் புலிகளின் பகுதியில் வீடமைப்பு திட்டம், கருணா குழுவின் ஆயுதங்களை களைதல், பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் அலுவலகங்களுக்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை நியமித்தல், தாய்லாந்தில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்தல் என்பன அடங்கும்.

மகிந்தவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இந்த திட்டம் தேசிய ஜெயலங்கா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் 400 வீடுகளை அமைக்கும் பணி 437ஏ, மூன்றாவது வீதி, திருநாவுகுளம், தாண்டிக்குளம், வவுனியா என்னும் முகவரியில் உள்ள ஹெல்டிங் பிறைவேட் நிறுவனத்திற்கும். மட்டக்களப்பில் 400 வீடுகளை நிர்மானிக்கும் பணி 113-1, மில் வீதி, உயிலங்குளம், வவுனியா என்னும் முகவரியில் உள்ள எவரெஸ்ட் சிவில் எஞ்சினியரிங் சேர்வீஸ் என்னும் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் 400 வீடுகளை நிர்மானிக்கும் பணிகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது எந்த மாவட்டத்தில் என குறிப்பிடப்படவில்லை. மொத்தமாக 1200 வீடுகளுக்குமான மொத்த செலவீடு 757,166,000 ரூபாய்கள் ஆகும். இந்த நாடகத்தின் முக்கிய பிரதிநிதிகள் எமில் காந்தன், நீதித்துறை திணைக்களத்தை சேர்ந்த ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோராவார்கள்.

முன்னாள் வானூர்தி நிலைய தலைவரே காந்தனுக்கு நிதியை வழங்கியதாக அரசு குற்றம் சுமத்தி கைது செய்திருந்தது. ஆனால் மகிந்தவே காந்தனின் முன்னணி நிறுவனத்திகு பணத்தை வீடமைப்பு திட்டத்தின் அடிப்படையில் வழங்கியிருந்தது. வவுனியாவில் உள்ள ஜீஎஸ் கட்டட நிர்மாண நிறுவனம் காந்தனுடன் தொடர்புள்ள நிறுவனம் என உயர் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

எமில் காந்தனுக்கு வழங்கப்பட்ட திட்டத்தை அங்கிகரிக்குமாறு மீள்கட்டுமான அபிவிருத்தி சபைக்கு மகிந்த உத்தரவுகளையும் வழங்கியிருந்தார். இந்த திட்டமானது விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த பர்கவி சாந்திகுமாருக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும் எமில் காந்தன், பர்கவியின் இரு சகோதரர்களான சாந்திக்குமார் கிசோகுமார், சாந்திக்குமார் கஜன்குமார் ஆகியோரும் இணைக்கப்பட்டிருந்தனர்.

மகிந்த பதவியேற்ற ஒருமாதத்தின் பின்னர் வீடமைப்பு திட்டம் 437ஏ, மூன்றாவது வீதி, ஹிருநாவுகுளம், தாண்டிக்குளம், வவுனியா என்னும் முகவரியில் உள்ள பி அன்ட் கே ஹோல்டிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த போலியான நிறுவனத்திற்கு 700 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு மகிந்த கையொப்பமிட்டிருந்தார்.

இந்த நிறுவனமானது டிசம்பர் 23 ஆம் நாள் 2005 ஆம் ஆண்டு கொழும்பிலேயே நிறுவப்பட்டிருந்தது. வவுனியாவில் இல்லை. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் 45-4 சேர்ச் வீதி வத்தளை என்னும் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் சேர்ச் வீதி வத்தளையில் நிறுவனங்கள் எதுவும் இல்லை.

எமில் காந்தனினின் நிறுவனத்தின் பங்குதாரரான அவரது உறவினர் கொடுத்த முகவரியான 48 ஏ அல்பேட் பிளேஸ், தெகிவளைப் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு வீடே உள்ளது.

மேலும் 113-1, மில் வீதி, உயிலங்குளம், வவுனியா என்னும் முகவரியிலும் எந்த நிறுவனங்களும் இல்லை. அதில் உள்ள வீட்டில் பி.நந்தகுமாரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். 437ஏ, மூன்றாவது வீதி, திருநாவுக்குளம், தாண்டிக்குளம், வவுனியா என்னும் முகவரியிலும் ஒரு வீடு உள்ளது அதில் வன்னியசிங்கம் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார்.

இந்த பகுதிகளில் 700 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நிறுவனங்கள் எதுவும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனுடன் மகிந்தவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விபரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். சண்டே லீடர் துவேச ஊடகமும் இல்லை. புலிகள் இதற்கு என்ன தான் சொல்கிறார்கள்? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.