Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தின் அரசியல் முற்றுகைக்குள் மகிந்த அரசு சிக்குகின்றதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் அரசியல் முற்றுகைக்குள் மகிந்த அரசு சிக்குகின்றதா!

ஒன்றரை வருட மகிந்தரின் ஆட்சியில் சிங்கள அரசு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது. சர்வதேசத்தில் இருந்துவரும் அரசியல் நெருக்கடி களாலும் - உள் முரண்பாட்டால் எழுந்த அரசியல் சிக்கல்களாலும் மகிந்த அரசு தடுமாறுகின்றது. தமிழருக்கு எதிரான இனக்குரோதச் செயற்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி வெளிநாடுகள் மீது வெறுப்புணர்வு காட்டல் என்ற கட்டத்திற்கு மகிந்த அரசுசென்றுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் கொழும்பு அரசாங்கம் மீது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் எல்லை கடந்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகிற்குக் கூறிக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்யும் சிங்கள அரசின் செயற்பாடுகளைச் சர்வதேச சமூகம் கேள்விக்குட்படுத்த ஆரம்பித்துள்ளது.

தமிழரின் இனச்சிக்கல்களுக்கு இராணுவ வழியில் தீர்வு தேடமுடியாது என்று உலக நாடுகள் சிங்கள அரசிற்கு இடித்துக்கூற முற்பட்டுள்ளன. தமிழினத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்து! போரை நிறுத்து!

சமாதானத்திற்கான கதவுகளை உடனடியாகத் திற! என்று உலக நாடுகள் மகிந்த அரசை நோக்கி உரத்துக்கூறுகின்றன. ஆயினும், இவற்றுக்குச் செவிமடுக்க மகிந்த அரசு தயாராக இல்லை.

மகிந்த ராஜபக்சவும் - அவரது அமைச்சர்களும் “போர் அன்றி வேறெந்தவேலையும் இல்லை” என்று முழங்கிவருகின்றனர். தங்களது முடிவில் கைவைக்கும் எந்த நாட்டையும் கடுமையாக விமர்சித்துக் கருத்துக்கூறவும் அவர்கள் தயங்கவில்லை.

கொழும்பு அரசியலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சிங்கள அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையே ஒருவித “பனிப்போர்” நிலவுவதைக் காணமுடியும்.

சிங்கள அரசிற்கு எதிராக உதவிநிதிக் குறைப்பு - ஆயுத விற்பனைக்கு மறுப்பு - எச்சரிக்கை விடுப்பு - அழுத்தங்கள் கொடுப்பு என்று உலக நாடுகள் சில அரசியல் - இராணுவ - பொருளாதார ரீதியில் மகிந்த அரசிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இதன் வளர்ச்சிக்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபை என்ற உலக அரசியல் மன்றத்தின் சக்திமிகுந்த பிரிவாகிய பாதுகாப்புச் சபைக்குச் சிங்கள அரசின் மனித உரிமை மீறல் விவகாரத்தை எடுத்துச் செல்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை 24 மணிநேரத்திற்குள் வெளியேற்ற உத்தரவிட்டதுடன், அந்த வெளியேற்ற உத்தரவைக் கண்டித்து விமர்சித்த உலகநாடுகளைப் பகிரங்கமாகவே தாக்கி அறிக்கைவிட்ட கோத்தபாய ராஜபக்சவை உலகநாடுகள் சில தனியாகவும் குறிவைத்துள்ளன என்றும் செய்திகள் கசிந்துள்ளன. கோத்தபாய ராஜபக்சவிற்கும் - இவரைப் போன்று பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிங்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் வெளிநாடு செல்வதற்கான விசாக்களை வழங்காமல் தடுப்பதற்கு உலக நாடுகள் உத்தேசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மகிந்த அரசு மீது சர்வதேச நாடுகள் காட்டும் சீற்றத்தைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே கட்ச்p மகிந்த ஆட்சியில் சிங்கள அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதென்றும், இலங்கை அரசை உலக நாடுகள் தனிமைப்படுத்த முயல்கின்றன - இது சிங்கள தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கப்போகின்றன என்றும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. மகிந்த பதவி விலகி வீடு போகவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரதத் தொடங்கியுள்ளன.

மகிந்த அரசின் அமைச்சராக இருந்து பதவி விலக்கப்பட்ட மங்கள சமரவீர மற்றும் சிறிபதி சூரியாராச்சி போன்றோர் புதியதாகக் கட்சி தொடங்கி மகிந்த ராஜபக்சவிற்குத் தலைவலியை உண்டு பண்ணியுள்ளனர். இவர்களுடன் சந்திரிக்கா அம்மையாரும் இணைந்து மகிந்தவின் ஆட்சிக்கு சமாதிகட்ட முயலப்போகின்றார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

இவ்விதம் மகிந்த அரசானது தனது ஒன்றரைவருட ஆட்சிக்காலத்திலேயே சர்வதேச ரீதியாகவும் - உள்நாட்டிலும் அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இராணுவ ரீதியாகவும் வடபுலப் போர்முனையில் சிங்களப் படைகள் சந்தித்துள்ள தேக்கநிலை மகிந்த அரசைக் கவலையடையச் செய்துள்ளது.

முப்படைப் பலத்தையும் புலிகள் இ;யக்கம் மரபுப் போர்முறையில் தாக்கமாக வெளிப்படுத்தியுள்ளதும் மகிந்தரின் இராணுவத் தீர்வுக் கனவையும் கேள்விக்குரியதாக்கிவிட்டுள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.