Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணைத்தவைமை நாடுகளின் மாநாடும் எதிர் விளைவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தவைமை நாடுகளின் மாநாடும் எதிர் விளைவுகளும்

- நா.யோகேந்திரநாதன்

ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இணைத்தலைமை நாடுகளின் சமாதான முயற்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்த நிலைதான் காணப்பட்டது. இது தொடர்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் போர் நிறுத்தத்தை சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்பதைத் தெட்டத்தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ போர் நிறுத்த மீறல்களைப் பதிவு செய்வது மட்டும் எனத் தனது பணிகளைச் சுருக்கிக் கொண்டு தனது பலவீனமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளையில் இம்மாநாடு இடம்பெற்றிருக்கும் போதே இது ஒரு வழமையான சந்திப்பு எனவும், இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் சிறீலங்கா அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இப்படியாக தமிழ் மக்களோ, சிறீலங்கா அரசோ பெரிதாக எதையும் எதிர்பார்க்காதது போலவே அம்மாநாடு ஒரு கூட்டறிக்கையைக் கூட வெளியிடாமல் நிறைவு பெற்று

விட்டது. ஆனால் இம்மாநாடு இடம்பெற்ற காலமும், இனப்பிரச்சினை தொடர்பாக நிலவிய ஒரு சூழலும் இம்மாநாடு தொடர்பாகச் சில எதிர்ப்பார்ப்புக்கள் உருவாகக் காரணம் என்றே கருதப்படுகிறது.

இலங்கைத்தீவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அண்மைக் காலங்களில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை கண்காணிப்பு மையம், ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால் கடும் கண்டனங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபை உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறீலங்கா அரசுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் அதைச் சர்வதேச அளவில் அம்பலப்படுத்

தும் வகையிலும் அமைந்திருந்தன.

அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவுக்கான நிதி வழங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது மிலேனியம் நிதியுதவிப்பட்டியலில் இருந்து சிறீலங்காவைச் சேர்ப்பதில்லை என அறிவித்தது. பிரித்தானியாவும் தன் நிதியுதவியைக் குறைத்துக் கொண்டது. மேலும் சிறீலங்காவுக்கான பொருளாதார உதவிகளில் மூன்றில் இரண்டு பங்கை வழங்கும் யப்பானிடம் சிறீலங்காவுக்கான நிதியுதவிகளைக் குறைக்க வேண்டும் எனச் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.

இப்படியான ஒரு நிலைமையில் இணைத்

தலைமை நாடுகளின் கூட்டம் இடம்பெற்ற காரணத்தால் மீண்டும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையிலும், கட்டற்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசபடை

களின் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்

டுப்படுத்தும் வகையிலும் அழுத்தம் கொடுக்கத் தக்க தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சில தரப்பினரால் வெளியிடப்பட்டது.

அதாவது சர்வதேச அளவில் அம்பலப்பட்டுப் போயிருக்கும் மனித உரிமை மீறல்களையும், சிறீலங்கா அரசின் போர்முனைப்பையும் கட்டுப்படுத்தும் வகையில் சில அழுத்தங்கள் கொடுக்கப்படக் கூடும் என எதிர்பார்க்

கப்பட்டடது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக ஒரு சாதகமான சூழல் உருவாகுவதற்கான கதவு ஒரு சிறிய அளவிலாவது திறக்கும் என நம்பப்பட்டது.

மேற்கு நாடுகளின் நிதியுதவிகள் தொடர்பாக சிறீலங்கா அரசு வெளியிட்ட கடும் போக்கும், உதாசீனப் பேச்சுக்களும், தங்களுக்கு ஆசியா சார்ந்த நாடுகளின் உதவிகளே போதுமானவை என விடுத்த சவால்களும் இத்தகைய நம்பிக்கைகளுக்கு ஒரு முக்கிய காரணமாயிருந்தன. ஆனால், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இணைத்தலைமை நாடுகள் இனப்பிரச்சினை விவகாரத்தில் வகிக்கும் ஸ்திரமற்ற போக்கும், சிறீலங்காவின் நடவடிக்கைகள் தொடர்பாக கையாளும் மென்போக்கும் கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்படும் சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடைபிடிக்கும் ஒரு செயன்முறை மௌனமும், இம்மாநாடு தொடர்பாக தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கைகளையும் உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கவே செய்தது.

இம்மாநாடு ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக சிறீலங்காவுக்கு விஜயம் செய்த யப்பானின் சிறப்பு தூதுவர் யசூசி அகாசி சிறீலங்காவுக்கான எந்த விதமான உதவிகளையும் குறைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள படைத் தளபதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு, யப்பான் நிதிவுதவிகளை நிறுத்தினால் மீளக்குடியேற்

றப்படும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு முதலைக் கண்ணீர் கருத்தையும் வெளியிட்டார்.

ஆனால், சிறீலங்காவுக்கு வழங்கப்படும் உதவிகள் மேலும் பல புதிய இடப்பெயர்வுகளை உருவாக்கவே உதவும் என்பதைக் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.

அதுமட்டுமன்றி, இம்மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல் நாள் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேற்கொண்ட அவசர யப்பான் விஜயமும் இம்மாநாட்டில் யப்பான் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைத் தெளிவாகவே முன்னறிவிப்புச் செய்துவிட்டது.

இப்படி வெளிப்படையில் இது ஒரு நம்பிக்கையூட்டும் ஒரு தோற்றப்பாடுடனும் தமிழ் மக்களின் அப்பட்டமான நம்பிக்கையீனத்துடனும், இம்மாநாடு ஆரம்பமானது. இரண்டு நாட்களின் பின்பு ஒரு கூட்டறிக்கை கூட வெளியிடத் தென்பின்றி இது நிறைவு பெற்றது.

ஒருமித்த கருத்துக்கு வர யப்பான் உடன்பட மறுத்த காரணத்தினாலேயே இவ்வறிக்கை வெளியிடப்படவில்லை என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால் இணைத்தலைமை நாடுகளின் முடிவுகள் யப்பானின் விருப்பத்திற்கு அமையவே அமையும் என்பது அர்த்தமா? அதே

வேளையில் யப்பானுக்கும் சிறீலங்காவுக்கும் இடையேயான பொருளாதார உறகளின் அடிப்படையில், சிறீலங்காவின் விருப்பத்திற்கு மாறாக யப்பான் செயற்படும் என எதிர்பார்க்க முடியாது.

இவ்வகையில் இணைத்தலைமை நாடுகள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறீலங்காவின் விருப்பத்திற்கு விரோதமாக இருக்க முடியாது என்றே கருத வேண்டியுள்ளது. இப்படியான ஒரு கருத்தோட்டம் உருவாகிய வேளையில் சில அறிவித்தல்கள் இக்கருத்தின் வேகத்தை தணிக்கும் வகையில் வெளிவந்துள்ளன. அதாவது போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழுவினர் தங்கள் தொகையை மேலும் பத்துப் பேரால் அதிகரித்துப் பணியை மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றனர் எனவும், நோர்வேயின் தூதுவர் விடுதலைப் புலிகளை விரைவில் வந்து சந்திக்கவுள்ளார் என்பதும் தான் அந்தச் செய்திகள்.

அத்துடன் மீண்டும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி இரு தரப்பினர் மீதும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது, பின் தொடரப்படுவது ஹன்சன் போவர் அவர்களின் விஜயம், பேச்சுக்களை தொடங்க இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்தல், இவையெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன பழைய பல்லவிகள்.

எனவே, இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் அனுபவ உண்மையாகும்.

ஆனால், சிறீலங்கா அரசு இம்மாநாடு காரணமாக பலன்களைப் பெற்றுள்ளது என்பது கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயமாகும். அதாவது, அண்மைக்காலமாக சிறீலங்கா அரசு தொடர்பாக சர்வதேச அளவில் உருவான எதிர்ப்பலைகளைத் தணிக்கவும், பெற்ற அபகீர்த்தியை மழுங்கடிக்கவும் இந்த மாநாடு உதவியுள்ளது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த எவ்வித உருப்படியான அழுத்தங்களையும் இது கொடுக்கத் தவறி, மீண்டும் பேச்சுவார்த்தை என்ற வெற்றுக் கோசத்திற்குள் அது தன்னை முடக்கிக் கொண்டு விட்டது. இது இவ்வாறு தொடர்ந்தால், இலங்கை தீவில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் பாதையிலிருந்து விலகி மேலும் போரை ஊக்குவிக்கும் ஒரு நிலைமையையே தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு சரியான முறையில் கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்கமளவுக்குக் கூட இம்மாநாட்டால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்றால், இவர்களிடமிருந்து ஒரு நிலையான தீர்வுக்கான அனுசரணையை தமிழ் மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.