Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யாழில் தெருக்களில் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூடல்கள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"யாழில் தெருக்களில் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூடல்கள்"

யாழ்ப்பாணத்தில் பாடசாலை வகுப்புக்கள் தகரக் கொட்டகைகளுக்குள் நடத்தப்படுவதுடன், பாடசாலையின் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் வீதியிலேயே நடத்தப்படுவதாக IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தில் தெரிவித்துள்ளது.

அச்செய்தி விவரம்:

யாழ். குடாநாட்டை ஆழிப்பேரலை தாக்கி இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் பருத்தித்துறை வல்வை சிவகுரு வித்தியாலயத்தைச் சேர்ந்த 432 மாணவர்கள் தமது பாடசாலையின் மீள் கட்டுமாணப் பணிகள் முடிவடைவதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பருத்தித்துறையில் உள்ள மற்றுமொரு பாடசாலையான வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் கட்டடப் பணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பினால் புனரைமைக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் சேவைகள் அமைப்பு மேற்பார்வை செய்து வருகின்றது.

மோதல்கள் நடைபெற்று வரும் யாழ். குடாநாட்டில் நடைபெறும் கட்டுமாணப் பணிகள் பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக மந்தமாகவே நடைபெற்று வருகின்றது. பணிகள் நடைபெறும் பகுதிக்கு சென்று வருவதும் மிகவும் கடினமாக உள்ளது. கட்டடப் பொருட்களின் தொடர்ச்சியான பற்றாக்குறையினால் உரிய காலத்தில் பணிகளை நிறைவு செய்வது சாத்தியமற்று காணப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த பாடசாலைகளுக்கான கட்டட வேலைகள் ஆரம்பமாகியிருந்தன, அது ஜூன் 2007 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தமது பாடசாலை ஆழிப்பேரலையின் போது முற்று முழுதாக அழிவடைந்து விட்டதாகவும், புனரமைப்பு வேலைகள் பூர்த்தியாகும் வரையிலும் தாம் நான்கு வெவ்வேறான இடங்களில் பாடசாலையை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் அதன் அதிபர் ஏ.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

ஆண்டு ஒன்றில் இருந்து 11 வரையிலான மிகவும் நேர்த்தியாக பாடசாலை உடையணிந்து பாடப் புத்தகங்களுடன் உள்ள இந்த சிறுவர்களுக்கு ஏனைய பாடசாலைகள் உதவியிருந்தன. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 22 பழைய மேசைகளை கொண்டு தகரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்குள் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கமான வகுப்புக்களையும், மிக அதிகமான சத்தங்களையும் நீங்கள் பார்க்கலாம், எமது பாடசாலையின் ஒன்றுகூடல் நிகழ்வை நாம் வீதியில் தான் நடத்தி வருகின்றோம் என சிவநாதன் மேலும் தெரிவித்தார்.

ஆழிப்பேரலையினாலும், போரினாலும் அழிவடைந்த பகுதிகளை புனரைமைக்கும் பணிகளானது, யாழ். குடாநாடு முழுவதிலும் கிடப்பில் உள்ளதையும், சில பகுதிகளில் அது ஆரம்பிக்கப்படவில்லை என்பதையையும் இன்று வரை முற்றுப்பெறாத பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் எடுத்துக் காட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரையில் நடைபெறும் பெருமளவான கட்டடப்பணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளினால் கடுமையான மந்த நிலையை அடைந்துள்ளது. இதில் குறிப்பாக பகல் நேரத்தில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் பணிகளை மிகவும் தாமதமாக்கி உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் சேவைகள் அமைப்பின் வடக்கு - கிழக்கு பகுதிக்கான பிராந்திய இணைப்பாளர் எஸ்.சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பலவந்தமாக மூடப்பட்ட ஏ-9 நெடுஞ்சாலை யாழ். குடாவிற்கு பொருட்களை கொண்டு செல்லும் ஒரே ஒரு பாதையை இல்லாது செய்ததுடன், கட்டுமானப் பணிகளையும் முடக்கியுள்ளது. அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருவதனால் யாழ். குடாநாடு தற்போது முழுமையாக மட்டுப்படுத்தப்பட்ட கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துகளிலேயே முழுமையாக தங்கியுள்ளது. முக்கியமான பொருட்கள், கட்டடப்பொருட்கள் அனைத்தும் யாழ். குடாநாட்டுக்கு கொண்டு வரப்படுவதானது இந்த பாதைகளில் தான் தங்கியுள்ளது.

வல்வை சிவகுரு வித்தியாலயப் பகுதியில் கொங்கிறீற்களும், உருக்கு கம்பிகளும் கட்டடத்திற்குரிய அமைப்பை கொடுக்கின்ற போதிலும் நிர்மாணப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெறுகின்றன.

கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்கள் கொழும்பில் இருந்து வருவதுடன், அதன் சந்தை விலைகளும் மிகவும் அதிகமாக உள்ளன. அதுவே இதற்கான பிரச்சனை என ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் சேவைகள் அமைப்பின் தொழில்துட்பவியல்த்துறை அதிகாரி ஏ.டொமினிக் தெரிவித்தார்.

நாம் நத்தையின் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம், இந்த இரு பாடசாலைகளின் வேலைகளையும் பூர்த்தி செய்வதற்கு 10,000 பை சீமெந்தும், 50 மெற்றிக் தொன் இரும்புகளும், கூரைத்தகடுகளும் தேவை. அண்மையில் நாம் 1,000 பை சீமேந்துகளை ஒவ்வொன்றும் 1,650 ரூபாய்கள் பெறுமதிக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.

இது சாதாரண விலையை விட மூன்று மடங்கு அதிகமானது. உருக்கு கம்பிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. சிறிலங்கா படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகளினால் கட்டட தேவைகளுக்கான மணலைப் பெறுவது கூட சிரமமானது. பார ஊர்திகளின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சிறீஸ்கந்தராஜா மேலும் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் "பாதுகாப்பு தொடர்பில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த முடியாது" என யாழ். மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இந்த பாடசாலைகளை புனரமைப்பதில் யுனிசெஃப், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் சேவைகள் அமைப்பு என்பன அரச அதிபரின் உதவியுடன் தம்மால் முடிந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றன.

பாடசாலைகளின் கட்டடப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான சிமெந்து மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு தாம் முயற்சி எடுத்து வருவதாக யுனிசெஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் அதிக குறைந்த இலக்கு கட்டட வேலைகளின் அரைப் பங்கையாவது முடிப்பது தான். அதற்குரிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு முயன்று வருகின்றனர். இவ்வாறு அரைப்பங்கு பூர்த்தி செய்யப்படும் கட்டடத்தில் ஒக்டோபர் மாதம் 2007 ஆம் ஆண்டு வகுப்புக்களை நடத்த முடியும்.

இதன்படி வல்வை சிவகுரு வித்தியாலய கட்டடப் பணிகளில் மூன்று தள வேலைகளில் இரண்டு பூர்த்தி செய்யப்படும். பொருளாதார நிலைமை உறுதியானால் இரு பாடசாலைகளினதும் இறுதித் தளப்பகுதியும் ஏனைய வேலைகளும் எதிர்வரும் ஜூன் 2008 ஆம் ஆண்டுக்கு இடையில் பூர்த்தி செய்யப்படும்.

யாழ். குடாநாட்டில் மனிதாபிமான நிறுவனங்கள் மட்டும் கட்டடப் பணிகளில் நெருக்கடிகளை சந்திக்கவில்லை. கட்டடப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்கள் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை என்பவற்றால் சுகாதார அமைச்சு போன்ற சில அரச நிறுவனங்களுக்கும் ஒரு மில்லியன் ரூபாய்களுக்கு (US $ 91,000) உட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட திட்டங்களை மேற்கொள்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே காரணங்களால் உள்ளூர் ஒப்பந்தகாரர்களும் பல திட்டங்களை எடுப்பதற்கு மறுத்து வருகின்றனர். மேலும் யாழ். மாவட்டத்தில் 10 சமூக அபிவிருத்தி நிலையங்களை நிறுவுவதற்கு யுனிசெஃப் சமூக நல அமைச்சுடன் இணைந்து முயன்று வருகின்றது. இந்த நிலையங்கள் ஒரு கூரையை உடைய இல்லங்களாகும், இங்கு எல்லா அரச சேவைகளும் சிறார்களின் நலன் தொடர்பாகவே இருக்கும்.

பெரும்பாலும் கட்டடப் பொருட்களை பெறமுடியாது இருப்பதனாலும், இந்த திட்டத்தின் கீழ்வரும் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருப்பதனாலும் இந்த 10 திட்டங்களையும் யுனிசெஃப் கிடப்பில் போட்டுள்ளது.

பாடசாலைகளை புனரமைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களினால் கல்விச் செயற்பாடுகளுக்கு நேரடியாக தேவைப்படும் பிரதான பொருட்களான அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மணவர்களின் ஊட்டச்சத்திற்கு தேவையான உயர் சக்தி பிஸ்கட்டுகள் போன்றவற்றை வழங்கும் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளதாக யுனிசெஃப் இன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலையினால் அழிக்கப்பட்ட அல்லது 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியிருந்த போது விறகுக்காக பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்ட மேசை மற்றும் கதிரைகளுக்கு பதிலாக யாழ் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு புதிய தளபாடங்களை வழங்குவதற்கும் யுனிசெஃப் திட்டமிட்டுள்ளது.

எனினும் புதிய தளபாடங்களை உற்பத்தி செய்வதற்குரிய இரும்புகளையும் ஏனைய பொருட்களையும் யுனிசெஃப் பெற முடியாது. இதற்குரிய இடைக்கால தீர்வாக பழைய மேசைகளையும் கதிரைகளையும் திருத்துவதற்கு உதவி புரிவதே மிகவும் சிறந்த வழியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.