Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீதனம் - பெருகும் பிரச்சனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் - பெருகும் பிரச்சனை

நமது ஊரில் சீதனம் பெரும் பிரச்சனை தான்.... இப்போது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதால் ஓரளவுக்கு பெரிதாக தெரிவதில்லை.

அண்மையில் நண்பர், இலங்கையில் மருத்துவம் முடித்தவர். அவருக்கு ஒரு நகைக்கடை வியாபாரி, மகளை கட்டி வைத்து, கொடுத்த சீதனத்தினை கேட்டால், அவர் வேலையை விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

கந்தர்மடத்தினை சேர்ந்த ஒரு மொறட்டுவையில் பொறியியல் படித்தவருக்கு, இருப்புக்கடைக்காரர், கொடுத்த சீதனம், மயக்கம் போடும் ரகம்.

படித்தால் காசு என்று நினைகிறார்கள். பெண் தகுதியானவளா என்று நினைப்பதில்லை.

யாழில் புகழ் மிக்க ஒரு தியேட்டர் முதலாளி, மகளுக்கு டாக்டர் வேண்டும் என்றாராம். வந்தார் ஒரு டாக்டர்.... பெரும் படிப்புக்காரர். லண்டன் எல்லாம் போய் படித்து வந்தவர்.

மாமன் கார் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும், படிப்பறிவில்லா மகள், மருமகனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காசு அனைத்தையுமே கொடுக்காது என்பதை தாமதமாக உணர்ந்த டாக்டர், குடிகாரர் ஆனார். 

ஈழத்தில், கணவன், மனைவி வீட்டுக்கு சிப்ட் ஆவதே கலாசாரம். மனைவிக்கு சீதனமாக வீடு கிடைப்பதால் இது ஒரு காரணமாக இருக்கலாம்.

தமிழகத்தில் நேர் எதிர். மனைவியே கணவன் வீட்டுக்கு சிப்ட் ஆவதே கலாசாரம்.

வந்த பெண்ணை, வைத்து, மேலும் சீதனம் பிடுங்குவதே இன்று தென் இந்தியாவில் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.

பெண்ணை, கணவன் உள்பட அவனது குடும்பமே சேர்த்து வதைப்பது பெரிய சாபக்கேடாக போயுள்ளது.

தாங்க முடியாத நிலையில், தற்கொலைக்கு போகின்றனர் அல்லது கொலை செய்யப்பட்டு, அதனை விபத்தாக அல்லது தற்கொலையாக காட்டப்படுகின்றன. 

பெண்ணின் குடும்பம் ஏழ்மையானதாக இருந்தால், சரிதான் என்று கொடுத்த சீதனத்தில் மிச்சுவதை வாங்கிக்கொண்டு இருந்துவிடும். கணவரும் புதுமாப்பிள்ளை ஆகி வேறு பெண் தேடுவார்.

ஆனால், இப்போது சீதன மரணங்களில், கணவனையே, அதிகாரிகள் சந்தேகமாகவே பார்க்க தொடங்கி விட்டார்கள்.

கேரளாவில் அண்மையில் சீதன கொடுமையால், படித்த பெண் தற்கொலை மரணம்,மாநிலத்தினையே உலுக்கியது.

அங்கே கடந்த வருடம் நடந்த ஒரு கொலை மீது இப்போது நீதி மன்ற விசாரணை நடக்கிறது. ஒரு மகனை பெத்த பின்னும் சீதனம் கேட்டு நச்சரித்து, கடைசியில் பாம்பினை விட்டு கடிக்க வைத்து, கொலையினை விபத்தாக காட்டி சிக்கி கொண்டுள்ளார், பெண்ணின் கணவர்.

இன்று சென்னையில், கணவனும் அவரது தாயாரும், 10 வருட தண்டனை வழக்கப்பட்டுள்ளார்கள். வாழ வந்த பெண்ணை, சீதனம் கேட்டு நச்சரித்து, சீதன கொடுமையால், தற்கொலைக்கு  தூண்டியதாக.

பாம்பாய் நகரமே (அதாவது பின்னர் வந்த நகரம் உள்ளடங்கிய ஒரு பகுதி), போர்த்துகேயர்களால், தமது இளவரசியினை கலியாணம் செய்த இங்கிலாந்தின் இரண்டாம் சார்ள்ஸ் மன்னருக்கு சீதனமாக கொடுக்கப்பட்டது. அதை தந்தால் தான், பல் துருத்திக்கொண்டிருந்த, அழகில்லாத இளவரசியை கட்டுவேன் என்று மன்னர் சொல்லி இருந்தார். காரணம், போர்த்துகேயம், டச்சு, பிரென்சு, டானிஷ் என்று பெரும் பலங்களிடையே சண்டை போடாமல், இந்திய துணைக்கண்டத்தில் கால் பதிக்கும், நோகாமல் நொங்கு தின்னும் அரசியல் நோக்கம்.

ஆக, சீதனம் ஒரு அரச குடும்பத்தில் இருந்து, ஆண்டி குடும்பம்  வரையான நோகாமல் நொங்கு தின்னும் நோக்கம் கொண்ட ஒரு சமூக பிரச்சனை தான். 

ஆனாலும் சமுகம், முக்கியமாக பெண்கள், அந்த சீதன பணத்துடன் சுஜமான, கவுரவமான வாழ்வு வாழ துணிய வேண்டும்.

இப்படி, பணத்தினை காதலிப்பவர்கள் சகவாசம் தேவையா என்று சிந்திக்க வேண்டும் பெண்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்கினால் பிறகு அடிமை தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

படித்தால் காசு என்று நினைகிறார்கள். பெண் தகுதியானவளா என்று நினைப்பதில்லை.

யாழில் புகழ் மிக்க ஒரு தியேட்டர் முதலாளி, மகளுக்கு டாக்டர் வேண்டும் என்றாராம். வந்தார் ஒரு டாக்டர்.... பெரும் படிப்புக்காரர். லண்டன் எல்லாம் போய் படித்து வந்தவர்.

மாமன் கார் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும், படிப்பறிவில்லா மகள், மருமகனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காசு அனைத்தையுமே கொடுக்காது என்பதை தாமதமாக உணர்ந்த டாக்டர், குடிகாரர் ஆனார்.

எனது தூரத்து உறவுகள் சில பணத்திமிர் பிடித்தவர்கள். அவர்களுக்கு  காசு பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அதில் ஒன்று ஆக பணத்திமிர்.அத்துடன் கடவுள் பக்தியும் அதிகம். எல்லாம் இருந்து என்ன?????

எவ்வளவு சீதனம் அள்ளி அள்ளி கொடுக்க தயாராக இருந்தும்  மருமகன் மருமகள் கிடைக்கும் பாக்கியத்தில் அவர்கள் பரம ஏழைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எனது தூரத்து உறவுகள் சில பணத்திமிர் பிடித்தவர்கள். அவர்களுக்கு  காசு பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அதில் ஒன்று ஆக பணத்திமிர்.அத்துடன் கடவுள் பக்தியும் அதிகம். எல்லாம் இருந்து என்ன?????

எவ்வளவு சீதனம் அள்ளி அள்ளி கொடுக்க தயாராக இருந்தும்  மருமகன் மருமகள் கிடைக்கும் பாக்கியத்தில் அவர்கள் பரம ஏழைகள்.

நம்ம ஊரு சீதனக் கதை மேற்கே விமானமேறி வந்து விட்டது.

மகளுக்கு ஒரு வீடு, மகன்மாருக்கு ஆளுக்கு ஒன்று என்று புழுகித்தள்ளுகினம். கொடுத்து ஏழு வருசம் உசிரோட இருந்திட்டம், இனி அதுக்கு வரி இல்லை என்ற தம்பட்டம் வேறு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.