Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்: கேகலிய ரம்புக்வெல

ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:14 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ

கிழக்கு மாகாணத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுவது தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பது தேசத்துரோகம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை. அது முக்கியத்துவமில்லாத ஒரு நடவடிக்கை என சிலர் தவறாக கதை பரப்பி வருகின்றனர்.

கிழக்கை உள்ளடக்காத ஈழத்தைப் பிரபாகரன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அங்குள்ள பொருளாதார நலன்களுக்காகவே பிரபாகரன் இதனை அடைந்துகொள்ள நாட்டம் கொண்டுள்ளார்.

கிழக்கை மீட்கும் முயற்சி தேவையற்றதொரு நடவடிக்கை எனக்கூறுவது அபத்தமானது கிழக்கை மீட்டெடுப்பது எமது நாட்டின் தேசியப் பிரச்சினை. அதனை அரசியல் இலாபம் தேடும் ஒன்றாக மாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர். புலிகளின் பிரதான ஏழு தாக்குதல் முகாம்கள் கிழக்கில் இருந்தன. கிழக்கை மீட்பதற்காக இன்று வரை இராணுவம் எடுத்துள்ள முன்னெடுப்பின் மூலம் ஈழத்தை அடைந்து கொள்ளும் புலிகளின் எதிர்பார்ப்பு 90 விழுக்காடு அசாத்தியமாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார கேந்திர நிலையம் கிழக்கில் தான் உள்ளது. திருகோணமலைத் துறைமுகம் பிரபாகரனின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அத்துடன்இ பிரதான அனைத்துலக நிறுவனங்கள் பலவும் கிழக்கில் தான் அமைந்துள்ளன. பிறிமா நிறுவனம்இ டோக்கியோ சீமெந்து நிறுவனம் என்பன இதில் குறிப்பிடத்தக்கவை.

சுற்றுலாத்துறைக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. கிழக்கில் மட்டும் சுமார் 461 கிலோ மீற்றர் தூர கடற்கரைப் பிரதேசம் உள்ளது. அத்துடன்இ வடக்குக்குச் செல்லும் பிரதான பாதைகள் கூட கிழக்கினூடாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முக்கிய தளமாக கிழக்கு மாகாணம் பயன்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு முஸ்லிம்கள் படுகொலைஇ அரந்தலாவைப் படுகொலை மற்றும் 600 சிறிலங்கா காவல்துறை உறுப்பினர்களின் மீதான படுகொலை என எத்தனையோ அசம்பாவிதங்களைப் புலிகள் இங்கு தான் முன்னெடுத்தனர்.

வரலாற்று உண்மைகள் பல இவ்வாறு இருக்கையில் இது ஒரு வீணான நடவடிக்கை எனவும் அரசியல் இலாபம் தேடும் ஒரு முயற்சி எனவும் சித்தரிக்க எடுக்கும் முயற்சி தேசத்துரோகமானது.

சவூதி அரேபிய நீதிமன்றம் சிறிலங்கா பெண்ணுக்கு வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் மேன்முறையீட்டை முன்வைப்பதற்காக சிறிலங்காவிலிருந்து வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் தலைமையில் குழு ஒன்று சவூதி அரேபியாவுக்குச் நாளை செல்லவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவது தவறானது.

இச்சம்பவம் தொடர்பான ஆலோசணைக் கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் எனது தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணின் பெற்றோர்இ நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சவூதி அரேபியா செல்லும் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இக்குழு சவூதியில் உள்ள குறித்த பிரதேசத்தின் ஆளுநரை சிறிலங்கா அரசு சார்பாக சந்தித்து இந்த மேன்முறையீட்டைச் செய்ய உள்ளது.

நான்கு மாதக் குழந்தையை சவூதி அரேபியாவில் கொன்றதாகக் கூறிஇ மூதூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பணிப்பெண்ணானஇ ரிசானா நபீக் என்பவருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மேன்முறையீடு செய்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ளது.

http://www.eelampage.com/?cn=32530

தன் மேல் எதிர்கேள்வி கேட்பவன் எல்லாம் தேசத்துரோகி உங்கள் கடமை என் புழுகுகளை கேடு சேகவம் செய்வதே என்கின்றார் ரம்புக்வல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.