Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் அரசியலில் கறையை துடைக்க அகதிகளுக்கு சலுகை செய்கிறதா திமுக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இந்த அன்ரி தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் எம்மவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நடக்கும் சித்திரவதைகள் பற்றி நல்லா எடுத்தியம்பிறா!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை சலுகையில் வந்து நிக்குது .இன்னும் கொஞ்ச காலம் போக கருணாநிதி தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் போல் ஆகிடும் .

அப்படி ஒரு சிறுவனை தத்து எடுக்கவில்லை என்று சாதிக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக திமுக இதை அரசியல் காரணங்களுக்காகவே செய்கிறது.

ஆனால் மக்களுக்கு காரணம் முக்கியம் இல்லை காரியம்தான் முக்கியம். எமக்கு எம் மக்களின் நல்வாழ்வுதானே முக்கியம். தமிழக அரசியல் அல்லவே? அந்த வகையில் இது நல்லதுதான்.

இதுவரை புலம்பெயர் அமைபுக்களும், தனி மனிதர்களும் கூட இந்த மக்களுக்காக பெரிதாக எதையும் செய்ததாக நான் அறியவில்லை.

புலம் பெயர் அமைப்புகள், திமுகவை அணுகி - ஒரு நம்பிக்கை நிதியம் போல அமைத்து இந்த மக்கள் நல்வாழ்வில் எமது பங்கையும் உறுதி செய்ய வேண்டும்.

அதையும் திமுக தன் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தும். So what? இந்த மக்கள் நலன் மட்டுமே பிரதானம்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  

3 hours ago, goshan_che said:

நிச்சயமாக திமுக இதை அரசியல் காரணங்களுக்காகவே செய்கிறது.

ஆனால் மக்களுக்கு காரணம் முக்கியம் இல்லை காரியம்தான் முக்கியம். எமக்கு எம் மக்களின் நல்வாழ்வுதானே முக்கியம். தமிழக அரசியல் அல்லவே? அந்த வகையில் இது நல்லதுதான்.

இதுவரை புலம்பெயர் அமைபுக்களும், தனி மனிதர்களும் கூட இந்த மக்களுக்காக பெரிதாக எதையும் செய்ததாக நான் அறியவில்லை.

புலம் பெயர் அமைப்புகள், திமுகவை அணுகி - ஒரு நம்பிக்கை நிதியம் போல அமைத்து இந்த மக்கள் நல்வாழ்வில் எமது பங்கையும் உறுதி செய்ய வேண்டும்.

அதையும் திமுக தன் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தும். So what? இந்த மக்கள் நலன் மட்டுமே பிரதானம்.

 

 

 

@கோசான் ஐயன் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

ஆர் என்னத்தை செய்து விட்டுச் சென்றாலும் அங்குள்ள எம்மக்களுக்கு நல்லது நடந்தால் காணும். அதுகள் நல்லா வாழ்ந்தால் சரி. முடிந்தால் அந்த உக்கலுக்குள் இருந்து தப்பினால் புண்ணியம்.

---------------------------------------------

 

நான் இந்தியாவில் வசித்த போது சென்னையில இருக்கிற ஒரு குறிப்பிட்ட முகாமை (எங்கள் வாடகை வீட்டிற்கு அருகில் இருந்த) நேரில் சென்று பார்த்தனான். சுற்றி வர தொழிற்சாலை கழிவுகள், நடுவில் எம்மவர்களின் ஏதிலி வீடுகள். எமது மக்களின் தோல் நிறம் சாம்பலுக்கு கொஞ்சம் கிட்ட. பார்க்கவே கவலையாக இருந்தது. கையறு நிலை. 

இதை விட சிறப்பு முகாம் என்று ஒரு 'இந்திய வெலிக்கடை சிறச்சாலை'! சித்திரவதைகளின் கோரத்தை அங்கு காணலாம். இந்த முகாமினுள் இருந்து தப்பிய ஒரு புலிவீரன் தான் அனுபவித்த சித்திர வதைகளை ஒரு புத்தகமாக எழுதி 2015 ஆம் வெளியிட்டிருந்தார் . நான் அதன் ஒரு 20 பக்கங்கள் மட்டுமே வாசித்தேன். தான் அனுபவித்த நேரில் கண்ட சித்திரவதைகளை அப்படியே அதில் எழுதியிருந்தார். மேற்கொண்டு என்னால் வாசிக்கவே இயலவில்லை. கண்கள் குழமாகியதை விட, மனதில் ஒரு பயம் எழுந்தது எங்கெனில், அதில் இந்தியர்களால் எம் பெண்களுக்கு நடந்த வன்புணர்ச்சிகள், காவலிச் சேட்டைகள், பாலியல் அத்துமீறல் பற்றி வாசித்த போது. கடவுளே. அதை வாசித்துவிட்டு இரண்டு நாட்கள் நான் நித்திரைக்கே போகவில்லை. 

முதலில் 1991 ஆம் ஆண்டு சமரொன்றில் கடுங் காயமடைந்து இந்தியாவிற்கு பண்டுவத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டபோது காவாலிகளிடம் சிக்கி 1999 வரை சிறையிலிருந்து, பின்னர் ஒரு வழியாக விடுதலையாகி, மீண்டும் நாடு திரும்பி, புலியாகி சமராடி, 2009 இல் தப்பித்து மீண்டும் இந்தியா வந்து வெளிநாடு செல்ல முயன்றபோது திரும்பவும் காவாலிகளிடம் அகப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருந்தேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். சித்திரவதையால் சூம்பிப்போயிருந்த தன்னுடைய இடது காலின் நிழற்படத்தினைக் கூட அதில் இணைத்திருந்தார். கொடூரத்தின் உச்சம்.

சித்திரவதையினை சொற்களால் விரித்திருந்தார் அந்த இயக்க அண்ணா. அதிலையும் இந்த புளட்காரர் (91, 92 களில்) முகாம்களுக்குள் வந்து செய்த நாசமறுத்த வேலைகளையும், சில இடங்களில் எம் பெண்களுக்கு சில காரணங்களால் அவர்கள் வழங்கிய தண்டனைகளையும் விரிப்பாக குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் புத்தகத்தை முள்ளந்தண்டுள்ள எம்மவர் எவரேனும் வாசிக்க நேர்ந்தால் இந்தியனை வாழ்நாளிற்கும் வெறுத்திடுவார். 😡😡😡 இந்தப் புத்தகத்தோடுதான் நான் இந்தியனை முற்றாக வெறுத்தேன்😠😠.  விலங்கிலும் மோசமாக நடந்திருக்கிறார்கள் எம்மினப் பெண்களிடம்! சா...

 

 

5 hours ago, பெருமாள் said:

குடியுரிமை சலுகையில் வந்து நிக்குது .இன்னும் கொஞ்ச காலம் போக கருணாநிதி தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் போல் ஆகிடும் .

அப்படி ஒரு சிறுவனை தத்து எடுக்கவில்லை என்று சாதிக்கிறார்கள் .

அப்படியா ஐயா... கருணாநிதி தத்தெடுத்தா*?

Edited by நன்னிச் சோழன்
Quoted

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

அப்படியா ஐயா... கருணாநிதி தத்தெடுத்தா*?

இன்னும் அந்த பையனை பாலன் தோழர் மட்டும் தேடிக்கொண்டு இருக்கிறார் யாருக்குமே புரியாத மர்மம் அந்த ஈழத்து அனாதை அகதி சிறுவனை பல்லாயிரம் பேர் பாத்திருக்க கருணாநிதி தனது வளர்ப்பு மகனாக மேடையில் வைத்து அறிவித்தார் அதன் பின் கொஞ்சநாள் முரசொலியில் அந்த பையனை பற்றி எழுதியிருந்தார்கள் சில வருடங்களின் பின் காணாமல் போய் விட்டார் லிஸ்டில் அந்த பையனும் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.