Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர். 

Afghanistan_68873.jpg

தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். 

பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர்.

இந்த வாரம் அமெரிக்கப் படைகளை மீளப் பெறுவதற்கு முன்னதாக நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய தலிபான்கள், இப்போது சர்வதேச உதவியை பெரிதும் நம்பியிருக்கும் மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கும் ஒரு நாட்டை ஆட்சி செய்ய எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச உதவியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பார்வையில் புதிய அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மை பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.

ஏனெனில் நாடு வறட்சி மற்றும் 240,000 ஆப்கானியர்களின் உயிர்களைக் கொன்ற ஒரு மோதலின் அழிவுகளை எதிர்த்துப் போராடுகிறது.

 

https://www.virakesari.lk/article/112584

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அறிவிக்கப்படும் புதிய அரசு!

இன்று அறிவிக்கப்படும் புதிய அரசு!

 

ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை (செப். 4) வெளியிடப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

புதிய அரசின் அதிபராக தலிபான்கள் இயக்கத்தின் இணை நிறுவனரும் அரசியல் பிரிவுத் தலைவருமான முல்லா அப்துல் கனி பராதா் (53) பதவியேற்பாா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் புதிய அரசை வெள்ளிக்கிழமை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த முடிவு ஒரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் இயங்கி வரும் தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் முல்லா அப்துல் கனி பராதா் புதிய அரசில் அதிபராகப் பொறுப்பேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலிபான் இயக்கத்தை தொடங்கிய முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் ஆகியோா் புதிய அரசில் முக்கியப் பதவி வகிப்பாா்கள் என மற்றொரு வட்டாரம் தெரிவித்தது.

முன்னதாக, ஈரான் பாணியில் தலைமை மதகுருவை உச்சநிலைத் தலைவராகக் கொண்ட ஆட்சிக் கட்டமைப்புடன் தங்களது புதிய அரசு அமையவிருப்பதாக தலிபான்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரி முஃப்தி இனாமுல்லா சமங்கனி, ‘ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் நிறைவடைந்துவிட்டன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசானது ஈரானில் உள்ளதைப் போன்ற ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். புதிய அரசில் தலைமை மதகுருவாக தலிபான் தலைவா் முல்லா அகுண்ட்ஸாதா (60) பொறுப்பு வகிப்பாா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புதிய அரசு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்று தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தற்போது தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான ஆளுநா்கள், காவல் துறை தலைமை அதிகாரிகள் உள்ளிட்டவா்களை தலிபான்கள் நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31 ஆம் திகதி முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா் என அமெரிக்க அதிபா் பைடன் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி கைப்பற்றினா்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தபோது ஷரியா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினா். இந்த முறை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், முந்தைய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவா்கள் பழிவாங்கப்பட மாட்டாா்கள் எனவும் மிதமான நிலைப்பாட்டை அறிவித்துள்ளனா். ஆனால், தலிபான்களின் இந்த அறிவிப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. புதிய அரசுக்கு அங்கீகாரம், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து அதன் செயல்பாட்டைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 16:12, கிருபன் said:

பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர்.

சின்ன பிள்ளையில் மண்சட்டியில் சோறு கறி சமைத்து விளையாடிய ஞாபக‌ம் வருகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.