Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 16:40 ஈழம்] [ப.தயாளினி]

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவம் அக்கட்சியின் உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. 3 ரெலோ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள ரெலோ தலைமை அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்தனர்.

ரெலொ அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறைகளையும் சல்லடை போட்டுத் தேடிய அக்குழுவினர் மூடிய அறை ஒன்றை திறக்குமாறு அங்கு நின்றவர்களிடம் கூறினர்.

அதற்கு அலுவலகப் பொறுப்பாளரின் அறை அது என்றும் அதற்குரிய திறப்பு அவரிடம்தான் உள்ளது என்றும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இந்த பதிலை செவிமடுக்காத இராணுவத்தினர் உடனடியாக அதிரடிப்படையினரை வரவழைத்தனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்த செங்கோடன் தியாகராஜா என்ற ரெலோ உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு அந்த அறைக்கதவை உடைத்து திறந்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மேலதிக இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ரெலோ தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 வரை தேடுதல் நடவடிக்கை நீடித்ததோடு அலுவலகத்தில் இருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

ரெலோவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம், திலீப் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். மேலும் ரெலோ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறி ரி-56 ரக துப்பாக்கி, பிஸ்ரல், கைக்குண்டு, 4 சிறிலங்கா காவல்துறையினர் சீருடை, 3 வோக்கி டோக்கி, 300 தோட்டாக்கள் ஆகியவற்றை கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட செங்கோடனுக்கு அருகில் வைத்து புகைப்படம் இராணுவத்தினர் எடுத்துள்ளனர். செங்கோடனின் மார்புப்பகுதியில் கைக்குண்டை இராணுவத்தினர் முதலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் சடலத்தை வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்குமாநு பணித்ததுடன் விசாணைகளை மேற்கொண்டுள்ளார்.

ரெலோ அலுவலகத்துக்கு வழமையான சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட செங்கோடன் தியாகாரஜா, வவுனியா மன்னார் வீதியில் உள்ள பாலாமைக்கல் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

அண்மைக்காலமாக ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியின் உறுப்பினர்கள் சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவத்தினராலும் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரெலோ உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலும் ரெலோ இயக்கத்தை முடக்கும் வகையிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கை இது என்று வவுனியாவில் உள்ள ரெலோ உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோவும் அங்கம் வகிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோவின் 4 சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி தமிழோசையில் இருந்து

தாக்கப்பட்ட அலுவலகம் டெலோ இயக்கத்தின் தலைமை அலுவலகம் என்றும், தமது இயக்கத்தின் பெயரைத் தாங்கிய அறிவிப்பு பலகை அங்கு இருந்தது என்றும், தமது கொடியும் அங்கு பறந்து கொண்டிருந்தததை சுட்டிக் காட்டிய டெலோவைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தாக்குதலுக்கு உள்ளான இலக்கு ஒரு வீடு என்று கூறப்படுவைவதை மறுத்துள்ளார்.

தமது இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு செய்யும் ஒரு செயலாகத்தான் தாங்கள் இதைப் பார்ப்பதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

தாக்கப்பட்ட அலுவலகத்தின் அருகில் ஒரு போலீஸ் காவலரங்கு இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், தாக்கப்பட்ட இடம் ஒரு வீடு என பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளது ஜோடிக்கப்பட்ட ஒரு விடயம் எனவும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ அலுவலகம் மீதான தாக்குதல் அரசின் இன வெறியின் அடையாளமே சாடுகிறார் சிவாஜிலிங்கம் எம்.பி.

தமிழீழ விடு தலை இயக்கம் (ரெலோ) ஒரு அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. இந்தக் கட்சி மீது பயங்கரவாத முத்திரைகுத்து கின்ற அரசின் இனவெறியின் அடையாளமாகவே வவுனியாவில் எமது அலுவலகம் தாக்கப்பட்டதை நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறு ரெலோ அமைப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித் திருப்பதாவது

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு அர சியல் கட்சியாக ஜனநாயக வழியில் திரும்பி இன்று நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் களை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கின்றது. இக்கட்சி மீது பயங்கரவாதச் சாயத்தைப் பூசுவதற்கு இலங்கை அரசு முற்படுகின்றது. இது அர சின் அப்பட்டமான இனவெறி நடவடிக்கை யின் வெளிப்பாடாகும்.

முன்னர் ஒருமுறை ரெலோ அமைப்பில் பல வருட காலமாக அங்கம் வகிக் கின்ற ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு அவரை ஒரு பயங்கரவாதியாக படையி னர் அடையாளப்படுத்தினர். அதேபோன்று இன்று ரெலோ இயக்கத்தின் தலைமைக் காரியாலயத்தை முற்றுகையிட்ட விடயத் திலும் படையினர் நடந்துகொண்டுள்ள னர்.

மும்மொழியிலும் எமது அலுவலகத் தில் எழுதப்பட்ட விளம்பரப் பலகைகள் உள்ளன. மற்றும் எமது இயக்கத்தின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டிருக் கின்றது. எமது அலுவலகத்திற்கு அருகில் படையினரின் காவலரணும் உள்ளது.

வவுனியாவிலுள்ள பொலிஸார் மற் றும் படையினர் இதனை நன்கு அறிவர். எமது அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மறைப்பதற்காக தற்போது படையினர் தங்கியுள்ள வீடுகளின் மீது எமது அலுவலகத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது எனக் கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

இவை அனைத்தும் அரசின் இனவெறி யின் அடையாளமாகவே தென்படுகின் றது என்றார்

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.