Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா' என்ற பதாதைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா' என்ற பதாதைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்!

By Shana
S7180095.JPG

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரச அதிகாரிகளே கணிய வளத்தை சுரண்டுவதற்கு துணை போவது ஏன்? ராஜபக்சக்களின் பெயர்களால் மண் சுரண்டல்,எமது வளத்தை சூரையாடாதே.பிரதேச செயலாளரே விவசாய நிலங்களில் கிறவல் ,மண் அகழ்வினை தடுக்கவும்.

குறித்த காணிக்கு உரிமை கோரி ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பகுதியில் கிரவல் தோண்டப்பட்டு பெரிய அளவிலான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது குறித்த காணியில் பயன்தரும் மாம்பழம்,மாதுளை மரம், மரவள்ளி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது என சுமார் 30 பேர் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் பயிர் செய்கை பண்ணுவதற்காக முன்பு கடமையாற்றிய பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் தற்போது அரச காணியில் எவ்வாறு பயிர் செய்ய முடியும் என பிரதேச செயலாளர் கேட்பதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.இதேவேளை இக்காணிக்கான உரிமம் கோரி 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சந்திவெளியில் உள்ள ஒரு தனி நபருக்கு கிரவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்இ கிறவல் அகழ்விற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரை வினவியபோதுஇகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

S7180083.JPG
S7180066.JPG
 
S7180069.JPG
 
S7180125.JPG
 
S7180130.JPG


http://www.battinews.com/2021/10/blog-post_40.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் எப்படி பிள்ளையானும் முரளிதரனும் வென்றார்கள் அதிக வாக்குகளைப் பெற்றார்கள்???☹️

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

அப்படியானால் எப்படி பிள்ளையானும் முரளிதரனும் வென்றார்கள் அதிக வாக்குகளைப் பெற்றார்கள்???☹️

எங்கோ உதைக்கிறதே!
அப்படியானால் எங்கோ போடப்பட்ட வாக்குகளோடு பெட்டிகள் வந்தனவா?

Edited by nochchi
உதை;கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படி பதாகை பிடிக்கும் மக்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது. 

  • கருத்துக்கள உறவுகள்+

மகிந்த மாமாவிற்கு ஆதரவாக நின்று நீங்கள் வாக்குப்போட்ட பிள்ளையும்👶 அவரது காவாலித்🌮 தொழில் கூட்டாளி குருணாவும்🥴 உங்களை விரைந்து வந்து மீட்டு அருள் பாலிப்பார்கள் என நம்புகிறேன்.🤣 

Edited by நன்னிச் சோழன்
Resentenced

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.