Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வட மாகாணத்திற்கு 20 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வட மாகாணத்திற்கு 20 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  இதுவரையில்  20 வீத  நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ்  நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதிசேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின்  மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே  பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் மீது பழி போடப்படுகின்றது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கட்டிட நிர்மாணத் தொழிலும் ஒப்பந்த காரர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் 20 வீதம் முதல் 90 வீதம் வரை விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு மாகாண கட்டிட ஒப்பந்த காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்றுவரை 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மிகுதி 80 வீதம் வழங்கப்படவில்லை. அதாவது வடக்கு மாகாண சபைக்கு இன்னும் 1,522 மில்லியன்  ரூபா வழங்கப்பட  வேண்டியுள்ளது.

ஆனால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அடர்க்கிடையில் அந்த மிகுதி 1522 மில்லியன் ரூபாவையும் நிதி அமைச்சு வடக்கு மாகாண சபைக்கு வழங்குமா என்பது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

அதே நேரம் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு 126 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டது. அதுவும் வழங்கப்படவில்லை என்றார். 

 

https://www.virakesari.lk/article/114751

 

3 - 4 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு குற்றச்சாட்டு எழுந்தது. ஒதுக்கப்பட்ட நிதியைத் தமிழர் தரப்பினர் பவிக்கத் திட்டமிடாமையால் அந்த நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டதாக வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒதுக்கப் பட்டது, வழங்கப் பட்டது என்ற பதங்கள் எப்போதும் குழப்பமாகவே இருக்கின்றன. உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட, அரச கட்டிடக் கூட்டுத் தாபனத்தை நாடி பெற்ற மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பி பணத்தை பெறுவது தான் வழமையென நினைக்கிறேன். இது போல சமர்ப்பிப்பு நடக்காமையால் பணம் வரவில்லையா, அல்லது சமர்ப்பித்தும் வரவில்லையா என்பதை யாராவது தெளிவு படுத்த வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இந்த ஒதுக்கப் பட்டது, வழங்கப் பட்டது என்ற பதங்கள் எப்போதும் குழப்பமாகவே இருக்கின்றன. உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட, அரச கட்டிடக் கூட்டுத் தாபனத்தை நாடி பெற்ற மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பி பணத்தை பெறுவது தான் வழமையென நினைக்கிறேன். இது போல சமர்ப்பிப்பு நடக்காமையால் பணம் வரவில்லையா, அல்லது சமர்ப்பித்தும் வரவில்லையா என்பதை யாராவது தெளிவு படுத்த வேண்டும்!

கனக்க வேலையளுக்கு சமர்ப்பித்தும் வரவில்லை. அதைவிட ஏற்கனவே கட்டிமுடித்த கட்டடங்களுக்கே ஆட்சி மாற்றம்நடந்த பின் ஒப்பந்த காரருக்கு பணம் கொடுக்கப்படவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.