Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ்.

Featured Replies

புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவார். அதன் பின்னர் சிங்கள பாடசாலைச் சிறுவர்கள் சிறிலங்காவின் தேசிய கீதத்தை பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுவித்த செய்தியை இராணுவத்தளபதி மகிந்தாவிற்கு தெரிவிப்பார்.

இதன் பின்னர் சிங்கள மக்களுக்கு மகிந்த உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும்.

சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகளும் பறப்பில் ஈடுபடும். இறுதியாக 800 படையினரின் அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சிகள் முடிவடையும்.

சுதந்திர தினத்தை போன்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலும், பாடசாலைகளிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒழுங்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், மதத்தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் செய்யும் படி பிரதேச செயலாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முக்கிய நிகழ்வு தொடர்பாக மாணவர்களுக்கு கூறும் படி அதிபர்களுக்கு சிறப்பு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் போன்றது.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்டது என்ற செய்தியை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அன்றைய அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவிடம் கையளித்தார். இந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

எனினும் இராணுவ அணிவகுப்புடன் நிகழ்ந்த இந்த நிகழ்வில் அன்று சிங்கக்கொடியை ரத்வத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்றினார். தற்போது மகிந்த சுதந்திர சதுக்கத்தில் சிங்கக்கொடியை ஏற்றப் போகின்றார். மேலும் இராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் உண்டு.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட கொண்டாட்டங்கள் நிகழ்ந்த 9 மாதங்களின் பின்னர், யாழ். குடாநாட்டிற்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியதை 1996 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தாக்குதல் சம்பவம் உறுதிப்படுத்தியது.

யாழ். நகரத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், நாடாளுமன்றத் தலைவருமான நிமால் சிறீபால டீ சில்வா மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

ஆனால் அந்த தாக்குதலில் யாழ். நகரக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆனந்த கமான்கொட, பிரதி காவல்துறை மா அதிபர் சார்லி டயஸ் ஆகியோர் பலியாகினர்.

அத்தாக்குதல் நடைபெற்ற இரு வாரங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ தளத்தின் மீது மரபுவழி தாக்குதலை மேற்கொண்டனர். அதில் 1,500-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்களும் இழக்கப்பட்டன.

குடும்பிமலையை கைப்பற்றியது முக்கியமானது, அதனை கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதனை மீளக் கைப்பற்றியதை விட தக்கவைப்பதே முக்கியமானது. அதனை பாதுகாப்பதற்கு அதிகளவான இராணுவத்தினரும் காவல்துறையினரும் தேவை என்பதில் சந்தேகமில்லை.

அங்கு கெரில்லாக்களின் ஊடுருவலை தடுப்பதுடன் அவர்களின் வளர்ச்சியையும் தடுக்க வேண்டும். அப்படி இல்லாது விட்டால் முன்னரைப் போல சிறிய அளவிலான தாக்குதல்கள் தொடங்கி பின்னர் அது பெருமளவிலான தாக்குதல்களாக மாற்றம் பெறலாம்.

இது முன்னரும் இரு முறை நிகழ்ந்துள்ளன.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய இராணுவம், சிறிலங்காவை விட்டு வெளியேறியதும், மூன்று மாதங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மாகாணத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தமதாக்கி விட்டனர்.

பல இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதியை பெறவேண்டியும் இருந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள இராணுவ நிலைகள் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தன.

பின்னர் அப் பகுதியானது காலம் சென்ற மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கை மூலம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையில் அப்போது லெப். கேணல் தரத்தில் இருந்த தற்போதைய இராணுவத் தளபதியான சரத் பென்சேகாவும் பங்கு பற்றியிருந்தார். அவர் சிங்க றெஜிமென்டின் முதலாவது பற்றாலியனுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

பின்னர் சில வருடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் அங்கு அதிகரித்திருந்தனர். 1994 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக மீண்டும் ஒருமுறை இராணுவ நடைவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டது.

காலம் சென்ற மேஜர் ஜெனரல் லக்ஸ்மன் (லக்கி) அல்கம மற்றும் சுயாதீன படை பிரிக்கேட்டின் (சிறப்புப் படை) கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா ஆகியோர் அதற்கு தலைமை தாங்கினார்கள். பின்னர் அது குடும்பிமலை வரை தொடர்ந்தது. அப்போது அங்கு பெரும் சமர்கள் இடம்பெறவில்லை.

1993 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நடைவடிக்கை ஒரு வருடம் நீடித்ததுடன் கிழக்கின் பெரும் பகுதி கைப்பற்றப்பட்டது. இந்தியப் இராணுவத்தினர் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை துருப்புக்களால் நிரப்பும் உத்திகளை கொண்டிருந்தனர். கிழக்கின் நிலைமை வடக்கைப் போல ஒரு நிச்சயமற்ற நிலையில் இருந்தது என அந்த நடவடிக்கையின் பின்னர் சண்டே ரைம்சிற்கு வழங்கிய நேர்காணலில் அல்கம தெரிவித்திருந்தார்.

இந்த மீளக் கைப்பற்றலுக்கு பின்னரும் கெரில்லாக்கள் கிழக்குக்கு திரும்பவும் வந்தது மட்டுமல்லாது அவர்கள் அங்கு தம்மை பலப்படுத்தியும் இருந்தனர். இது பல முகாம்களை மூடி இராணுவத்தினரை விலக்கியதனால் ஏற்பட்டது. ஏனெனில் சந்திரிகா அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தேவைப்பட்டனர்.

ஒமந்தையில் இருந்து கிளிநொச்சிக்குப் பாதையை திறந்து பின்னர், அதனை யாழ். குடாவுடன் இணைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். ஆனால் மூன்று வருடத்தின் பின்னர் அந்த நடவடிக்கை படுதோல்வி அடைந்ததுடன் பெரும் ஆளணி மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களையும் சந்தித்ததுடன் அது கைவிடப்பட்டது.

கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தனர். அதன் கேந்திர முக்கியத்துவமான தெற்குப்புறத்தில் பல தொடர்ச்சியான முகாம்களை அமைத்திருந்தனர். திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பை ஆராய்ந்த அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடத்தை சேர்ந்த அதிகாரிகள் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தனர்.

யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினருக்கு திருகோணமலைத் துறைமுகமே உயிர்நாடியாகும். அங்கிருந்தே உணவு மற்றும் இராணுவ விநியோகங்கள் வடபகுதிக்கு தொடர்ச்சியாக கடல்வழி மூலம் அனுப்பப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் முகாம்களை கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் பகுதியை கொண்டிருக்காத போதிலும், இராணுவத்தினரின் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது வெளியேறிவிட்டு பின்னர் இராணுவத்தினர் வெளியேறியதும் மீண்டும் வந்துவிடுவார்கள்.

அதனால் தான் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான எல்லைகள் கிழக்கில் தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை.

கண்காணிப்புக் குழுவின் துணையுடன் பல முயற்சிகள் செய்யப்பட்ட போதும் வடக்கைப் போன்று கிழக்கில் பகுதிகளை பிரிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் குடும்பிமலை மீதான நடைவடிக்கையின் போது விடுதலைப் புலிகளை தப்ப முடியாதபடி பெட்டி வடிவில் சுற்றி வளைத்திருப்பதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு தப்பும் வழி இருக்க போவதில்லை, அவர்கள் இராணுவத்தினருக்கு இரையாகப் போகின்றனர். அவர்களுக்கு பேரழிவு நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் பெருமளவான தமது இராணுவத் தளபாடங்களுடன் அங்கிருந்து இலகுவாக பின்வாங்கிவிட்டனர்.

குடும்பிமலையில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் மிகைப்படுத்தியிருந்தமைக்கு முரணாக பெருமளவான விடுதலைப் புலிகளை கொல்லாத போது அல்லது அவர்களின் இராணுவ இயந்திரத்தை அழிக்காத போது அந்த வெற்றியில் உண்மையில்லை என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை சமருக்கான புதிய ஆயுதக்கொள்வனவில் உச்சக்கட்ட ஊழல்" குடும்பிமலை சமருக்காக சிறிலங்கா அரசாங்கத்தால் புதிய ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அதில் உச்சக்கட்ட ஊழல் நடந்துள்ளதாகவும் கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் மறைமுகமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்தி:

58 நாட்கள் நடைபெற்ற குடும்பிமலை சமரில் படையினர் பெருமளவான சுடுவலுவை சிறிலங்கா இராணுவத்தினர் பிரயோகித்திருந்தனர். ஆட்டிலெறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், சிறிய ரக மற்றும் கனரக துப்பாக்கிகள், கிபீர், மிக்-27 ரக குண்டு வீச்சு வானூர்திகள் என அவர்கள் பயன்படுத்திய சுடுவலு மிக அதிகம். அதன் செலவுகளும் மிக அதிகம்.

குடும்பிமலை மீதான நடவடிக்கை ஏன் இழுபட்டு செல்கின்றது என பல நாட்டு அரச தலைவர்கள் கேள்வி எழுப்பியதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த படைவலு மேலும் அதிகரிக்கப்பட்டது.

படை பலத்தில் ஆட்டிலெறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் நவீன ஆயுதங்களை வாங்குவது பொதுவானது. ஆனால் அதில் பெறப்படும் தரகுப்பணம் பலரை கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் மாற்றியுள்ளது. அதாவது தற்போதைய வேறுபாடு என்ன எனில் நாட்டில் ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது.

அதிரடிப்படை ஒன்று புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிக்கேடியர் சார்லி கலகேயினால் அண்மைய நாட்களில் வழிநடத்தப்படுகின்றது. இதுவே குடும்பிமலை மீதான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தது. அது 6 பற்றாலியன்களை கொண்டது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த படைப்பிரிவை 58 ஆவது படையணியாக்கு இராணுவத் தலைமையகம் விரும்புகின்றது.

மேலும் இந்த நடவடிக்கையில் கொமோண்டோ றெஜிமென்டின் 2 ஆவது பற்றாலியன், கெமுனு வோச்சின் 7, 8 ஆவது பற்றாலியன்கள், இரு இலகு காலாட்படை பற்றாலியன்கள், சிங்க றெஜிமென்டின் 1 ஆவது பற்றாலியன் ஆகியனவும் பங்கு பற்றியிருந்தன. இரு வாரங்களுக்கு முன்னர் வடபோர் முனையில் இருந்து மேலதிக துருப்புக்களும் நகர்த்தப்பட்டிருந்தனர். அரச தலைவர்களின் கேள்விகளை தொடர்ந்து தாக்குதலை நடத்த உருவாக்கப்ட்ட மேலதிக இராணுவத்தினரும் கடந்த வாரம் அனுப்பப்பட்டருந்தனர்.

குடும்பிமலை மீதான தாக்குதலை வெற்றி விழாவாக அரசு நாடு முழுவதும் பெருமெடுப்பில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. தற்போது இராணுவத்தின் கவனம் வடபகுதி நோக்கி திரும்பியுள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனமாக்கும் வரையில் வடபகுதி மீதான படை நடவடிக்கை தொடரும் என மகிந்த சூளுரைத்துள்ளார்.

மன்னார் களமுனையில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினரால் தொடங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை பெரும் மோதலாக வெடித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மோதல்களை நிறுத்தி அமைதிக்கான அழைப்பை விடுக்கும் வரையிலும் தாம் தமது படை நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என நோர்வே அனுசரனையாளர்களுக்கு அண்மையில் ஜெனீவாவில் மகிந்த தெரிவித்திருந்தார்.

இதற்கான பதிலை விடுதலைப் புலிகள் இந்த வாரமும் மீண்டும் தெரிவித்துள்ளனர். மகிந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவார் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பு அரசின் இராணுவ பொருளாதார இலக்குகளை தாக்கப் போவதாகவும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர் சைமன் ஹார்ட்னரிடம் தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு உருவான போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும், இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், அரசும் விடுதலைப் புலிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளனர்.

எனவே நாட்டின் பொருளாதாரம் அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் போதும் பிரகடனப்படுத்தப்படாத நான்காம் ஈழப்போரில் பெரும் சமர்கள் விரைவில் வெடிக்கப்பேகின்றன என்பதை உறுதிப்படுத்த இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியில் குடும்பிமலை சமர் குறித்து பல நாட்டு அரச தலைவர்கள் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டிருக்கும் இக்பால் அத்தாஸ், படை வலு அதிகரிக்கப்பட்டிருப்பதையும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.