Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுமாறும் பொருளாதாரத்தை புலிகள் மேலும் தள்ளாட வைக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறும் பொருளாதாரத்தை புலிகள் மேலும் தள்ளாட வைக்கலாம்

மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளில் இலங் கைத்தீவு மூழ்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. ஆனால் அந்தப் பேரிடர் பற்றிய விடயங்களை மூடி மறைத்து, தென்னிலங்கை மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இராணுவ வெற்றிகள் பற்றிய முழங்கல்களையும், பிரகடனங்களையும் முன்வைக்கின்றது கொழும்பு அரசு.

இராணுவ வெற்றிகள் பற்றிய மாயைகள் கலைந்து, ஆரவாரங்கள் அடங்க, வயிற்றை வாழ்வை பிடுங்கும் அன்றாடப் பிரச்சினைகள் தம்மை பிணியாகப் பீடித்து உறுத்துவதை மக்கள் உணர்ந்தேயாக வேண்டியிருக் கும். அப்போதும் அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி, வேறுபுறம் சிரத்தையை வழி நடத்துவதற்காகப் புதிய ஆரவாரங்களை அரசு தேடும்.

தென்னிலங்கை மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை இவ்வாறு அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் அர சியல் தலைமைகளின் அபத்த நாடகம் வெற்றிகரமாகத் தொடரும்.

ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அரசுத் தலை மையின் இந்த ஏமாற்று நாடகம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது என்பது போலவே தோற்றுகின்றது.

மக்களின் அன்றாட வாழ்வை மோசமாக மிக மோச மாக பாதித்து நிற்கின்றன வாழ்வாதாரப் பிரச்சினைகள். விலைவாசி உயர்வு எல்லை மீறிவிட்டது. வாழ்க்கைச் செலவு சாதாரண மக்களின் கைக்கு எட்டாத உயரத்துக்கு எகிறிவிட்டது. மக்களின் பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு காணும் உருப்படியான திட்டங் களோ, தீர்க்க தரிசனமான தந்திரோபாயங்களோ அரசுத் தலைமையிடம் இல்லவே இல்லை என்பதைத் தென்னிலங்கை மக்கள் புரியத் தலைப்பட்டு விட்டனர்.

வெறும் இராணுவ வெற்றிகள் பற்றிய பீற்றல்களும் ஆரவாரங்களும் தமது அன்றாட வயிற்றுப் பசிப் பிரச்சி னையைத் தீர்க்கமாட்டா என்பதைப் புரிந்துகொண்டு, அரசுக்கு எதிராகப் குழம்பும் நிலைக்குத் தென்னிலங்கை மக்கள் வந்துவிட்டனர்.

தொப்பிகல காடு மீட்கப்பட்டதை வைத்துக்கொண்டு பெருத்த எடுப்பிலான பிரசாரத்தை முன்னெடுக்க அர சுத் தலைமை எடுத்த முயற்சிக்கு, ஆரம்பக் கட்டத்தி லேயே முட்டுக்கட்டைகள் வந்துவிட்டன என்று கூறப் படுகின்றது.

இலங்கையில் கடந்த இருபத்தியைந்து ஆண்டு கால உள்நாட்டு யுத்த சரித்திரத்தில் தொப்பிகல பிரதேசத்தை அரசுப் படைகள் கைப்பற்றி மீட்டமை இதுவே முதல் தடவை என்ற சாரப்பட பிரசாரத்தை முன்வைத்து, அதை அரசின் பெரும் இமாலய வெற்றியாகக் காட்ட அரசு முயன்றது. ஆனால் உண்மையைப் போட்டுடைத்து அந்த முயற்சிக்கு ஆப்பு வைத்துவிட்டது பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. கட்சி.

1992 இலும் பின்னர் 1994 இலும் இரண்டு தடவை கள் தொப்பிகல காட்டுப் பகுதியைப் புலிகளிடமிருந்து அரசுப் படைகள் மீட்டன என்பதை இராணுவ ஆவணங் களுடன் நிரூபித்திருக்கின்றது அக்கட்சி.

ஐக்கிய தேசியக் கட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதியை மீண்டும் புலி களிடம் பறிகொடுத்ததே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரச நிர்வாகம்தான். அதுவும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இடம்பெற்றிருந்த ஆட்சியே தொப்பிகலவைப் புலிகளிடம் மீண்டும் இழந்தது. தமது ஆட்சிக் காலத்தில் தாங்கள் இழந்த காட்டுப் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றி விட்டு, இந்த ஆட்சித் தலைமை ஒன்றுமில்லாமல் வெறும் ஆரவாரம் பண்ணு கின்றது என்று ஐ.தே.க. அம்பலப்படுத்திய விவகாரம், ஆளும் தரப்பின் பீற்றல் பிரசாரத்துக்கு வேட்டு வைத் திருக்கின்றது.

தொப்பிகல சமர் குறித்து புலிகள் தரப்பும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கும் இதுதான் கார ணம் என்று கூறப்படுகின்றது.

கடந்த வாரம் கிளிநொச்சியில் தம்மைச் சந்தித்த நோர்வே அனுசரணைத் தரப்பினரிடம் விடுதலைப் புலி களின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இதனை சாடைமாடையாகக் கோடிகாட்டினார் என்றும் கூறப்படுகின்றது.

""இது (தொப்பிகல) நாங்கள் இப்போதுதான் இழக் கும் பிரதேசம் என்பது அல்ல. தொண்ணூறுகளின் முற் பகுதியிலும் இரண்டு தடவைகள் இப்பிரதேசத்தை இழந்து பின்னர் நாம் மீட்டெடுத்திருக்கின்றோம். இப் போது தந்திரோபாய ரீதியில் அதை நாம் இழப்பது அப் படி ஒன்றும் பெரிய விடயம் அல்ல. மீண்டும் அது கை மாறும். காலம் கனியும்வரை பொறுங்கள். நடப்பதைப் பார்த்திருங்கள்.'' என்ற சாரப்பட தமிழ்ச்செல்வன் கூறினார் எனத் தெரிகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான கட் டத்தை அடைந்திருக்கும் இன்றைய நிலையில், அதைச் சீர்செய்யும் சிந்தனைப் போக்கு ஏதுமின்றி, அற்ப இராணுவ வெற்றிகளை ஆரவாரப்படுத்தி மகிழ்வதில் கொழும்பு அரசு ஒரே நிலைப்பாடாக இருக்கையில்

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ, பொருளாதார நிலைகளை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படும் என விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கை மிகுந்த கவனத்துக்குரியதா கின்றது.

இத்தகைய இலக்குகளைத் தாக்குவதில் புலிகள் வெற்றி காண்பார்களாயின் இலங்கைத்தீவின் பொருளா தாரம் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடும் என்பது திண்ணம்.

-உதயன்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.