Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில்... சரணடைந்த, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது – சிறீதரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது – சிறீதரன் கேள்வி

இறுதி யுத்தத்தில்... சரணடைந்த, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது – சிறீதரன் கேள்வி

இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்களின் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 14 பேரின் பிள்ளைகளின் தகவல்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது  எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரைவதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1246179

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் 14 முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது? விபரங்களை பாராளுமன்றில் வெளியிட்ட சிறீதரன் எம்.பி.!

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக் காணாமலாக்கப்பட்டதை பாராளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இவ்வாறு காணாமலாக்கப்பட்ட 14 மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சபை ஆவணப்படுத்தினார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இது தொடர்பான தகவல்களை அவா் வெளியிட்டார்.

sritharan-2-300x188.jpg

தம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்களை வெளியிடுவதாக அவா் தெரிவித்து வெளியிட்ட காணாமலாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பிள்ளைகளில் விபரங்களை சமர்ப்பித்தார்.

அந்த விபரங்கள் வருமாறு,

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி யின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,

மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரனின் மகள் அறிவுமதி,

யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,

கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,

மணலாறு தளபதி மஜீத்தின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,

அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மகன் ஜனகன் மகேந்திரன்,

நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியனின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,

விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜாவின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,

வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தியின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,

சுடரின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,

வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமனின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,

அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கனின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,

மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசனின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,

 

https://thinakkural.lk/article/144792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.