Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாதகல் கடலில் நங்கூரம் திருடமுற்பட்ட மூவர் மீனவர்களால் மடக்கிப்பிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

 

மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

நேற்று திங்கட்கிழமை மாலை பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றுள்ளனர். 

 

இதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர். நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று மீனவர்கள் கேட்டபோது,

madhagal_sea.jpg

"கடற்படையினர் எமக்கு இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பினை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது." என்று தெரிவித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து மீனவர்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரும்பு வாங்க சென்றவர்களை காணவில்லை என உறவினர்கள் அவர்களை தேடி மாதகல் பகுதிக்கு குழந்தைகள் பெண்களுடன் வேனில் அப்பகுதிக்கு வந்தனர். இதனை அவதானித்த மீனவர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக மீனவர்கள் கருத்து  தெரிவிக்கையில்,

நாங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான எமது உடமைகள் அனைத்தையும் கடலிலேயே விட்டுச் செல்கின்றோம்.வேறுபகுதியில் இருப்பவர்கள் வந்து இப்படி எமது கடலில் உள்ள உடமைகளை திருடிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது?

ஒவ்வொரு நங்கூரமும் ஐயாயிரம் ரூபா தொடக்கம் பதினைந்தாயிரம் பெறுமதியுடையவை.

நாங்கள் கடன்பட்டுத்தான் எமது தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குகின்றோம். இது இவ்வாறு இருக்க உடமைகள் திருடப்பட்டால் நாங்கள் கடன் வாழங்கியவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எமக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கடற்படையே எமது சொத்துக்களை திருடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றது என்றால் கடற்படையினர் எதற்கு இங்கு இருக்கவேண்டும்?

எங்களுக்கு தொடர்ந்து இவ்வாறு அட்டூழியங்கள் நடக்குமானால் நாங்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டிவரும் என்றார்கள்.

யாழ். மாதகல் கடலில் நங்கூரம் திருடமுற்பட்ட மூவர் மீனவர்களால் மடக்கிப்பிடிப்பு | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.