Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம்

கிழக்கு மாகாணத்தை முற்றாக புலி களின் பிடியிலிருந்து விடுவித்தமை தொடர் பான அரசின் வெற்றி விழா நாளை மறு தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுப்பார்.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் கரு ஜயசூரிய இத்தகவ லைத் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் அபிவிருத்திக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

நேற்று கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவல் களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவையாவது:

சுதந்திர தினத்திற்குச் சமனாகக் கொண் டாடும் கிழக்கு மீட்பு வெற்றி விழாவில், அந்த மீட்புக்காகத் தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த இராணுவத்தினருக்கும் மற் றும் அந்த மீட்பு நடவடிக்கையின் போது சிக்குண்டு இறந்த அப்பாவிப் பொதுமக் களுக்கும் அரசு அஞ்சலி செலுத்திக் கௌர விக்கவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நட வடிக்கை அடுத்த ஆறு மாதத்துக்குள் மேற் கொள்ளப்படும்.

கிழக்கு மாகாணம் பல

பகுதிகளாக வகுக்கப்படும்

பின்னர் அங்கு அபிவிருத்தித் திட்டங் கள் முன்னெடுக்கப்படும். இதற்காகக் கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக் கப்படும். ஒவ்வொரு பகுதியின் அபிவி ருத்திக்கும் ஒவ்வொரு அமைச்சர் பொறுப் பாக நியமிக்கப்படுவார்.

இதேவேளை, கிழக்கு மீட்பு வெற்றி விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ , கிழக்கில் நடத்தப்படவுள்ள மாகா ணத் தேர்தல் குறித்த விடயங்களையும் அபிவிருத்தி , திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களையும் வெளியிடுவார்.

தொப்பிகல மீட்பு எமது அரசிற்கு மட் டும் கிடைத்த வெற்றியல்ல இது முழு நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இதனை இன, மத பேதமின்றி ஒவ்வொரு வரும் கொண்டாட வேண்டும். அவரவர் வீடுகளில் இலங்கையின் சிங்கக் கொடியை ஏற்றி இத்தினத்தை சுதந்திர நாளாக அனுஷ்டிக்க வேண்டும்.

அரசு யுத்தம் புரிந்து வெற்றி ஈட்டியதால் இன்று மக்களின் மனதையும் வென் றுள்ளது. முன்பெல்லாம் யுத்தத்தின் பின் னர் படையினரே மிஞ்சுவர். ஆனால் இன்று அப்படியல்ல. மக்களுடன் சேர்ந்து இந்த வெற்றியை நாம் கொண்டாடுகின்றோம் என்றார்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் கிழக்கு மீட்பு வெற்றி விழாவை பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண மீட்புத் தொடர்பாக நாளை மறுதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசு நடத்தவிருக்கும் வெற் றிக் கொண்டாட்டத்தில் ஜே.வி.பி. மற் றும் பிரதான எதிர்க்கட்சிகள் பங்குபற்ற மாட்டா.

""படையினரின் வெற்றியை நாம் பாராட்டுகிறோம். அவர்களுக்கு எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் அரசியல் லாபம் கருதி, அரசு நடத் தும் இத்தகைய திருவிழாக்களில் நாம் பங்குபற்ற மாட்டோம்.'' இவ்வாறு ஜே. வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீர வன்ஸ "உதயனு' க்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் ஐ. தே. கட்சித் தலைவர்களும் பங்குபற்ற மாட் டார்கள் எனத் தெரிகின்றது.

இதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, மேலக மக்கள் முன்னணி, மலை யக மக்கள் முன்னணி ஆகியவையும் இந்த நிகழ்வைப் பகிஷ்கரிக்கவிருக்கின்றன.

ஜாதிக ஹெல உறுமய, ஈ. பி. டி. பி., மக்கள் ஐக்கிய முன்னணி, அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையிலான ஐ. தே. கட்சி யின் அதிருப்தியாளர் குழு (ஜனநாயக மாற்றுக்குழு) ஆகிய தரப்பினர் இந்நிகழ் வில் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப் பட்டது.

விழா எடுப்பது

வேதனைக்குரியது

இதேவேளை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் தோட்ட உட்கட்ட மைப்பு பிரதி அமைச்சருமான முத்து சிவ லிங்கத்துடன் தொடர்புகொண்டு இந்நிகழ் வில் பங்குபற்றுவீர்களா எனக் கேட்ட போது ""இதுவரை எமக்கு எந்தவிதமான அழைப்பும் கிடைக்கவில்லை. அழைப் புக் கிடைத்தவுடன் கேளுங்கள். அப் பொழுது எமது நிலைப்பாட்டைக் கூறு கின்றோம்'' என்று கூறிச் சமாளித்தார் அவர்.

இதற்கிடையில், மலையக மக்கள் முன் னணித் தலைவரும் அமைச்சருமான சந் திரசேகரன் இது குறித்துக் கருத்துத் தெரி வித்தார். அவர் கூறியவையாவது:

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி விட்டதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண் டாடும் அரசின் முனைப்பு இனப்பிரச் சினையை அரசு முற்றாக உதாசீனப்படுத்தி விட்டதையே காட்டுவதாக நாம் கருது கின்றோம்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பேச்சு மூலம் தான் தீர்வு காணவேண்டும் என சர்வதேச மும் வலியுறுத்தும்போது இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையில் தீவிர முனைப் புடன் செயற்படுகின்றமை புரையோடிப் போயுள்ள தேசிய பிரச்சினையை மேலும் மோசமாக்கும்.

இப்படியான ஒரு நிலையில் அரசு கொண்டாடும் வெற்றி விழாவில் மலை யக மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது.

நாடு சுதந்திரமடைந்த நாள்முதல் தமி ழர்களின் தேசிய இனப் பிரச்சினை புரை யோடிப்போயுள்ளது.

இதனை ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்க்க முடியாது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அரசு ஏதோ ஓர் அயல் நாட்டைக் கைப்பற்றி விட்டதுபோல் விழாவெடுப்பது வேத னைக்குரியது என்றார் அவர்.

- உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த எவ்வளவு தூரம் தொப்பிக்கல தொடர்பாகப் பெருமையாகச் சொல்லுகின்றாரோ, அவ்வளவு தூரம் அதை அவர் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளவார். தொப்பிக்கலவில் இருந்து சிறிலங்கா இராணுவம் காட்டுவழிப் பிரயாணம் செய்வது என்பது சில அதிர்ச்சியான பெறுபேற்றை அவர்களுக்குச் சந்திக்க வைக்கலாம்.

விரைவில் மகிந்த பலனை அனுபவிப்பார்

சுதந்திர தினத்துக்கு சமனாக கொண்டாட போகின்றாராம் அப்ப இன்னொரு நாட்டையா கைபற்றியவர்.வெற்றிவிழா தோல்வி விழாவாகாவிட்டால் சரி.வான் புலிகள் எழும்பி புத்தளம் வரை வந்து சென்றால் புறோகிறாம் கான்சல் மகிந்த நிலகீழ் கக்குஸுகுள்ள பதுங்கி இருப்பான் சரியான கோமாளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.