Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு

இலங்கை இனப்பிரச்சினையை நியாயமான வழியில் தீர்த்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து அதனைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டுமாறு அரசிடம் எடுத்துரைக்கவும் அந்த நாடுகள் தயாராக உள்ளன.

இதுவரை எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் உயர் ராஜ தந் திரிகளையும் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு வட்டாரங்களில் இருந்து இது அறியவந்தது.

யுத்தத்தைத் தவிர்த்து அமைதிப் பேச்சு மூலம் இலங்கைப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதையே அந்த நாடுகள் விரும்பு கின்றன என்றும் சந்திப்புக்களில் கலந்து கொண்ட அந்நாடுகளின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் கூட்டமைப்பின ருக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுவரை இடம்பெற்ற அத்தனை சந் திப்புக்களும் வெற்றிகரமாகவும் திருப்தி கரமாகவும் முடிவடைந்துள்ளன என்றும் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனுப வித்துவரும் துன்ப, துயர நிலைமை, அவர் கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் கொடூர யுத்தம் போன்றவை உள்ளிட்ட தமிழர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்குவதற்காக அந்த நாடுகளுக்கு விஜ யம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்நாட்டு இராஜதந் திரிகளைச் சந்தித்து வெற்றிகரமாகப் பேச் சுகளை நடத்தி வருகின்றனர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்குகிழக்கு தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் தொடர் அடக்கு முறை, கிழக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டமை, கொலை, ஆள் கடத்தல், காணாமல் போதல் ஆகியவை தீவிரமடைந்துள்ளமை, அமைதித் தீர்வுக் கான வழிவகைகளைத் தவிர்த்து இரா ணுவ நடவடிக்கை மூலம் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அரசு முனைப்புக் காட்டுகின்றமை உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்களை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தாங்கள் விளக்கினார்கள் எனக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அத்தோடு அண்மையில் கொழும்பு லொட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் சம்பூர் , மூதூர் பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடணப்படுத் தப்பட்டமை போன்றவை குறித்தும் அவர் கள் எடுத்துக் கூறி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை தாங்கள் சந்தித்த நாடுகளின் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு உள் வாங்கிக் கொண்டனர் என்றும் கூட்டமைப் பின் தூதுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இம்மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தைத் தொடங்கிய கூட்டமைப்பினர் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று அந் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜ தந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள் ளனர்.

கூட்டமைப்பினரின் இந்தச் சந்திப்புக்கள் இம்மாத இறுதிவரைத் தொடர் கின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர்கள் நாடு திரும்புகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.