Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

Featured Replies

9 hours ago, குமாரசாமி said:

நானும் உப்பிடித்தான் பதில் சொல்லேலாட்டில் நைஸ்சாய் எதையாவது சொல்லிப்போட்டு இடத்தை விட்டுட்டு 

நீங்கள் கேட்டது ஒன்றும் பதில் சொல்ல முடியாத அறிவுபூர்வமாக கேள்வி அல்ல. 70 வருடங்களாக எல்லாத் தமிழர் தலைமைகளும் தவறான அரசியலை செய்துவருவதும் அதனால் தமிழ் மக்களின் நிலை தொடந்து இறங்கு முகத்தில் செல்வதும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனது பல கருத்துக்களில் இதுபற்றி தெளிவாக எனது கருத்தைக் கூறியுள்ளதை நீங்கள் வாசித்து எனக்கு பதிலும் எழுதியுள்ளீர்கள். 

ஆனால் திடீரென்று நீங்கள் ஜேர்மனியில் பிறந்து ஈழ அரசியல் தெரியாதத குழந்தை  போல் பாசாங்கு செய்து கேட்ட கேள்வியாதலால் அப்படிக்கூறினேன். எனது பதிலின் கருத்தைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை உங்களின் இந்த பதிலின் மூலம் தெரிவித்துள்ளீர்கள். 

  • Replies 78
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

அது இங்கும் பொருந்தும். வேறு யாராவது புலிகளை விட வேறுவழியில் போராடி ஈழத்தை வெல்லமுடிந்தால் உங்கள் வழியில் போராடுங்கள் என்றுதானே சொல்கிறோம்! 12 வருடமாக என்னத்தை புடுங்கினீர்கள்!! சிறிலங்காவிற்கு விளங்கக்கூடிய ஒரேமொழி அடிதான். அது விழுந்தால்தான் பேச்சுவார்த்தை மேடைக்கே வருவார்கள். இணக்க அரசியல் செய்து ஒன்றையும் சாதிக்கமுடியாது!! அடிமையாய் இருப்பதை தவிர!

வேறு வழியில் முயல்பவர்களுக்கு தானே செம்பு தூக்கி, துரோகி, முட்டுக் கொடுப்பவன் என்று பல பட்டங்கள் கொடுக்கப் பட்டு தேர்தல் நேரம் பொய்க் குற்றச்சாட்டுகள் கூடப் பரப்பப் படுகின்றன? பிறகெப்படி வேறு வழியில் முயல  எவரும் முன்வருவர்?

சரி, இப்போதைய நிலையை விடுங்கள்: அரபாத் சொன்ன கீழ்:103_point_down: வசனத்தை புலிகள் அப்போது சொல்லியிருக்க முடியுமா?

 "I never stopped anybody from freeing Palestine. If they thought they could do better, why didn't they?"

அப்படி வேறு வழிகளில் முயல வழி விட்டு வைத்திருந்தார்களா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

வேறு வழியில் முயல்பவர்களுக்கு தானே செம்பு தூக்கி, துரோகி, முட்டுக் கொடுப்பவன் என்று பல பட்டங்கள் கொடுக்கப் பட்டு தேர்தல் நேரம் பொய்க் குற்றச்சாட்டுகள் கூடப் பரப்பப் படுகின்றன? பிறகெப்படி வேறு வழியில் முயல  எவரும் முன்வருவர்?

 

அப்படி யார் என்னென்ன வழியில் முயற்சி செய்தார்கள் ஒரு உருப்படியான தீர்வை பெற??
சும்மென்று சொல்லாதீர்கள். அவர் என்ன செய்தார் என்ன செய்கிறார் என்பது உலகறிந்த விடயம்!!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Eppothum Thamizhan said:

அப்படி யார் என்னென்ன வழியில் முயற்சி செய்தார்கள் ஒரு உருப்படியான தீர்வை பெற??
சும்மென்று சொல்லாதீர்கள். அவர் என்ன செய்தார் என்ன செய்கிறார் என்பது உலகறிந்த விடயம்!!

மிகவும் தீவிரமான 30 வருட ஆயுதப் போராட்டத்திலேயே எதுவும் முன்னேற்றகரமாக நடக்கவில்லையென்றால் 12 வருடம் என்பது ஆயுதமல்லாத வழிக்கு மிகவும் குறைவு. கொஞ்சம் யாழில் இருக்கும் பரிமாற்றங்களையே தேடிப் பார்த்தீர்களானால் - 12 வருடங்களில் மாவீரர் தினம், திலீபன் நினைவு போன்றவை கொண்டாடக் கூடிய நிலை இருந்தமை என்ன தானாக வந்த சிங்கள மனமாற்றமா? எல்லாம் இணக்க அரசியலின் ஒரு துளி தான்! அதை "ரணிலுக்கு முண்டு கொடுக்கிறான்" என்று நாலு துண்டாக தமிழ் வாக்குகளைப் பிரித்து விட்டது யார்? 

 இப்ப மகிழ்ச்சியான நிலையல்லவா? "தீர்வு அவசியமில்லை, எனவே தமிழரின் எந்தப் பிரிவோடும் பேசவும் தேவையில்லை" என்று சொல்லும் சிங்கள அரசு! இதையல்லவா எதிர்பார்த்தீர்கள்? எப்ப சர்வதேசம் தலையிடும் என்று நினைக்கிறீர்கள்? ஏதாவது ரைம் லைன்?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.