Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக விசாரணை!


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் கடந்த 09-09-2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.
sathirukondal-massacre-2-200x300.jpg

நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான த.கௌரி மற்றும் துரைசிங்கம் மதன் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

என்ன நோக்கத்திற்காக குறித்த அஞ்சலி நிகழ்வு கலந்துகொண்டமை விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் நடாத்தப்படுவது இந்த நாட்டின் சட்ட நிலைமையினை கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விசாரணைக்குட்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி,

இதேநேரம் கடந்த 09.09.1990 அன்று மட்டக்களப்பு சத்துருகொண்டான் பனிச்சையடி,கொக்குவில்,பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் மாலை வேளையில் அப்பாவி பொதுமக்களை ஒன்று கூடல் என்ற பெயரின் சத்துருகொண்டான் பொலிஸ் முகாமிற்கு அழைத்துச் சென்று பொதுமக்களை படுகொலை செய்யபட்டதாக கூறப்படுகிறது .

இது தொடர்பாக பல ஆதாரங்கள் வெளி வந்தும் இதற்கான நீதி கிடைக்கவில்லை என்று வருடா வருடம் கண்ணீருடன் இறந்த 186உயிர்களின் உறவுகள் இறந்தவர்களின் நினைவு நாளில் சத்துருங்கொண்டான் சந்தியில் அமைந்துள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது வழமை.

அந்தவகையில் கடந்த 09.09.2021 அன்று தற்போதைய சூழ்நிலை அறிந்து மிக குறைவான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி விளக்கேற்றினர்.

பனிச்சையடி கிராமத்தில் பிறந்தவள் என்ற ரீதியில் இறந்தவர்களின் இழப்புகள் சோக கதைகள் கேட்டே நான் எனது ஊரில் வளர்ந்தவள் அந்தவகையில் 2002 ம் ஆண்டு இந்த தூபியானது அமைக்கபட்ட நாளில் இருந்து இந்த நிகழ்விற்கு உரிய நேரத்தில் நான் செல்வேன் இது புதிய விடையம் அல்ல. குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் மட்டு மாநகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக உறுப்பினராக தெரிவானேன். ஆனால் எனது வட்டார மக்களின் வாக்குகள் கிடைத்தே எனக்கான அடையாளம் கிடைத்தது ,அந்தவகையில் மக்களின் நலன்கள் பொதுவான விடையங்களில் பங்கேற்பது தவறான விடையம் அல்ல.

ஆகவே தற்போதும் நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது நான் இந்த தூபியை கடக்காமல் செல்ல முடியாது,இந்த தூபியானது 4கிராமத்தில் உயிருளந்த உறவுகளின் அடையாள கல்லறை மட்டுமே தவிர வேறு எந்த தவறான விடையமும் இல்லை. பிறந்த மண்ணில் எனது கடமையை செய்தேன் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/147562

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சிங்களவர்கள் செய்த எந்த அநியாயத்தையும் மனசில வைக்கக் கூடாது. இது தான் சிங்கள ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. அவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வரை இப்படியான செய்திகள் மலிந்தே இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.