Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன உரக் கப்பல் தொடர்பில் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை ; அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சீன உர கப்பல் தொடர்பில் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை. சீன உர நெருக்கடியால்தான் இந்தியாவுடன் கலந்துரையாடி நைட்ரிஜன் உரம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் இரசாயன உர முதலீட்டாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்களே எமது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9 ) நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விவசாயிகளின் உரப்பிச்சினை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுக்கு அடுத்தபடியான பாரிய மாபியாதான் இரசாயன உர மாபியாவாகும். இதற்காக பிரதான முதலீட்டாளர்கள் 100 பில்லியன் முதலீடு செய்கின்றார்கள்.

இந்த முதலீட்டாளர்களுடன் தொலைபேசியில் பேசிய விடயங்களை விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். 

இதனையே நாங்கள் மாற்றப்போகின்றோம். என்றாலும் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் நாங்கள் செயற்படமாட்டோம். விவசாயிகள் இன்று விவசாய பூமிகளுக்கு சென்று சேதன உரத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். 

ஆனால் எதிர்க்கட்சியும் எம்முடன் இருக்கும் ஒருசிலரும் விவசாயிகளின் உரப்பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் நாங்கள் குறைத்து மதிப்படுவதில்லை.

விவசாயிகள் ஆரம்பத்தில் உரம் கேட்டு வீதிக்கிறங்கினார்கள். நாங்கள் உரம் கொடுத்த பின்னர் தற்போது இரசாயன உரம் கேட்டு வீதிக்கிறங்கி இறங்குகின்றனர் என்றாலும் பெரும்போகத்துக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கி இருக்கின்றோம்.

அத்துடன் சீன உர கப்பல் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது. நாங்கள் குறிப்பிட்ட தரத்தில் அந்த உரம் இருக்கவில்லை. அதில் சில பற்றீரியாக்கள் இருந்தன. அதனால் அந்த உர கப்பலை நிறுத்தினோம். தாவர பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தோம். 

சீன அரசாங்கத்துடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை. சீன உர கப்பலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்க்கட்சி தலைவர் பலருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆனால் விவசாய அமைச்சராக நான் உறுதியாக இருந்ததாலே அதனை செய்ய முடிந்தது. நாங்கள் யாரிடமும் கொமிஸ் பெறவில்லை.

அத்துடன் நனோ நைட்ரிஜன் கொண்டுவந்ததன் மூலம் எனக்கும் சஷிந்திரவுக்கும் 8 பில்லியன் கொமிஸ் பணம் கிடைத்ததாக சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

இதுதொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடுவேன். அவர் பதில் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் சம்பிக்க ரணவக்கவுக்கு என்ன நடக்கும் என்பதை கண்டுகொள்ளலாம்.

மேலும் நாங்கள் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டம் மிகவும் சவாலானது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

என்றாலும் இதனை நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை முன்னுக்கு கொண்டுசெல்வோம். அத்துடன் நைட்ரிஜன் உரம் தொடர்பில் எமது நாட்டில் ஆய்வு செய்யப்படவில்லை. இந்தியாவில் 21 ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்திருக்கின்றன. 

அதன் பிரகாரமே இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். இந்த உரம் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று எமது இந்த வேலைத்திட்டத்தக்கு 16 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன.

அத்துடன் சீன உரம் எமக்கு உரிய காலத்துக்கு கிடைக்காததால் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனால் இந்தியாவில் இருந்து வந்த உரம் மாதிரிகள் சல எம்மிடமிருந்தன. என்றாலும் இந்த உரம் தொடர்பில் பரிந்துரை செய்தது முன்னாள் விவசாய பணிப்பாளராகும்.

நாங்கள் நினைத்த பிரகாரம் இந்தியாவில் இருந்து நைட்ரிஜன் உரம் கொண்டுவரவில்லை. விரைவாக உரம் தேவை என்பதற்காகத்தான் இந்தியாவில் இருந்துகொண்டுவர நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

சீன உரக் கப்பல் தொடர்பில் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை ; அரசாங்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

சீன உர நெருக்கடியால்தான் இந்தியாவுடன் கலந்துரையாடி நைட்ரிஜன் உரம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம்.

  எதுக்கும்  இரண்டு வீடு வைச்சிருந்தால் நல்லது. ஒன்று கைவிடும்போது இன்னொன்றிடம் சரணடையலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.