Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஞானசார தேரரை தலைவராக்கி முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா ? ரிஷாத் சபையில் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை  “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். 

 rishad1.jpg

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம் ,மதம், கலாசாரம்  தொடர்பில் உள்ளன. 

அதேபோன்று தேச வழமை சட்டம், கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன. இவற்றை இல்லாதொழித்து "ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக  ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்'' எனக்கூறிய ஞானசார தேரரை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள்.

இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட 200 கோடி முஸ்லிமாக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லிம் நாடுகள் உள்ளன.

அவ்வாறிருக்கையில்  ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்'' எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன?அல்லாஹ்வை  கேவலப்படுத்திய ஒருவரை நியமிப்பதன் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?

இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களை  மிரட்டலாம் என்று நினைக்கின்றீர்களா? இந்த நியமனத்தால் சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? சிங்களவர்கள் கூட இந்த நியமனத்தை ஏற்கவில்லை. 

9 வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலாத்காரமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள். 

அவர் எத்தனையோ புரட்சிகளை செய்தார். அவருடன் நாம்  பக்கபலமாக  இருந்து செயற்பட்டோம். ஆனால் இந்த இரண்டு வருட ஆட்சியில் சண்டித்தனமாக எமது உரிமைகளை பறிக்கின்றீர்கள்.

நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளைக்கூட இந்த சபையில் ஒரு இனத்தின் மக்கள் தலைவனாக கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. எனது குரலை அடக்கினீர்கள். 

இவ்வாறான செயல்கள் மூலம் உங்களால் இந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாது என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஞானசார தேரரை தலைவராக்கி முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா ? - ரிஷாத் சபையில் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி முகமது என்று ஞானசார தேரர் சொன்னதாக யாழ்களத்தில் செய்தி படித்தேன் வாலியும் கருத்து தெரிவித்து இருந்தார். இப்போது ரிஷாத் பதியுதீன் அல்லாவை குண்டு தாக்குதலில் குற்றம் சொன்னதாக சொல்கிறார். அல்லாவால் எப்படி  அல்லா ஒரு அப்பாவி

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையும் ...தம்பியையும் வெளீலைவிட பசிலுக்கு அள்ளிக்கொடுத்த வவுத்தெரிச்சல்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.