Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை

November 18, 2021

IMG 0013 அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 15ஆம் திகதி அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.

குறித்த பௌத்தகுரு ஒரு வருடகாலத்திற்குள் இலுப்படிச்சேனை,பிள்ளையாரடி பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் மாவட்ட செயலகம்,பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் கெவிழியாமடு பகுதியில் கிராம சேவையாளருக்கு எதிராகவும் கடந்த 15ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கு எதிராகவும் தொடர்ச்சியான முறையற்ற வகையில் வன்முறைத்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த மதருவின் செயற்பாடானது பௌத்தமதகுருவின் கொள்கைக்கு எதிரான வகையில் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை அரசாங்கம் ஒரு பார்வையாளர் போன்று இவரின் செயற்பாட்டை பார்த்துவருகின்றது. இந்த மதகுருவினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெறுக்கின்றார்கள். மதருவுக்குரிய மனிதாபிமானமோ, கொள்கையோ இவரிடமில்லை. இவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்கவேண்டிய நிலையேற்படும் என எச்சரித்துள்ளார்.

 

https://www.ilakku.org/buddhist-guru-who-constantly-threatens-the-authorities/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடியான செயற்பாட்டிற்கு வலுக்கும் கண்டனங்கள்.

(நா.தனுஜா)

 

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவ்வாரத்தொடக்கத்தில் மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவொன்றின் அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

 ஏற்கனவே இனவாதத்தைத் தூண்டுபவராகப் பரவலாக அறியப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர், மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் விகாரையொன்றை அமைப்பதற்கு காணியை வழங்குமாறு மட்டக்களப்பிலுள்ள பட்டிப்பளை, மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலகத்தில் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் அதற்கு அனுமதி வழங்குவதற்குரிய அதிகாரம் தனக்கில்லை என பிரதேச செயலாளரினால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Ampitiya-Sumanarathna-Thero_-One-Country

 அதனையடுத்து இவ்வாரத்தொடக்கத்தில் அப்பிரதேச செயலகத்திற்குச் சென்ற அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அங்கிருந்த அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசியதுடன் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை அனைவருக்கும் பொதுவானது என்றும் அவ்வாறிருக்கையில் கிழக்கில் விகாரை அமைப்பதற்கு அனுமதிவழங்க மறுப்பதன் காரணம் என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.

 அதுமாத்திமன்றி இதற்குரிய தீர்வு வழங்கப்படும் வரையில் அங்கேயே அமர்ந்து போராடப்போவதாகக்கூறி தரையில் அமர்ந்துகொண்டார்.

 பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோர் அங்கிருந்தபோதிலும் தொடர்ந்தும் குரலை உயர்த்திக் கடுந்தொனியில் பேசிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இக்காணொளியை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். 

அரச அதிகாரிகளை மிகமோசமாகப் பேசியபோதிலும் தனக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை நன்கறிந்திருப்பதன் காரணமாகவே அவராகவே பேஸ்புக் பக்கத்தில் அக்காணொளியைப் பகிர்ந்திருக்கின்றார் என்ற விமர்சனங்கள் பலரும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இக்காணொளியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன், 'ஒரு குடிமகன் அரச அதிகாரிகளை இவ்வாறு அச்சுறுத்தும்போது பொலிஸார் எதனையும் செய்யாமல் இவ்வாறு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களா?' என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

 

am.PNG

அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் பொலிஸார் முன்நிலையில் நபரொருவரின் கன்னத்தில் அறைந்தமை மற்றும் 2016 நவம்பர் மாதம் மட்டக்களப்பில் அரச அதிகாரியொருவரைப் படுகொலை செய்வதாக அச்சுறுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தொடர்புபட்டிருந்ததாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதேவேளை இக்காணொளியை மேற்கோள்காட்டி தமது டுவிட்டர் பக்கங்களில் பதிவுகளைச் செய்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள், 'ஒரே நாடு, ஒரே சட்டம்' குறித்து பேசப்படுகின்றபோதிலும் இங்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் பொலிஸ் அதிகாரி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருப்பதுடன் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர். 

அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடியான செயற்பாட்டிற்கு வலுக்கும் கண்டனங்கள் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.