Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிஸ் காவலில் சித்திரவதைகளும் மரணங்களும் தொடரும் - காரணத்தை கூறுகிறார் அம்பிகா சற்குணநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் காவலில் சித்திரவதைகளும் மரணங்களும் தொடரும் - காரணத்தை கூறுகிறார் அம்பிகா சற்குணநாதன்

(நா.தனுஜா)

பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் எமது கட்டமைப்பில் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் பல தசாப்தகாலப் பிரச்சினையாகும். சட்டம் ஓர் சமூகத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்வரையில் இத்தகைய சம்பவங்களை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவரமுடியாது. அதுமாத்திரமன்றி பொலிஸாருக்குப் பயிற்சிகள் மற்றும் தண்டனைகளை மாத்திரம் வழங்குவதன் ஊடாகவும் இவற்றை நிறுத்தமுடியாது.

மாறாக சமுதாய ரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி பொதுப்பாதுகாப்புச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் தனக்கிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதியால் வெளியிடப்படுகின்ற வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பேற்படுகின்றது. இது சித்திரவதைகள் மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் பொலிஸ்காவலின்கீழ் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அதேவேளை ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் இலங்கைப்பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சிகள் நிறுத்தப்படவேண்டும் என்று பிரிட்டன் மற்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் மரணங்கள் குறித்துத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பிவருபவர் என்ற அடிப்படையில் இத்தகைய சம்பவங்களை முடிவிற்குக்கொண்டுவருவதற்கான வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Ambika.jpg

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் இன்று, நேற்று அடையாளங்காணப்பட்ட பிரச்சினையல்ல. மாறாக அது எமது கட்டமைப்பில் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் பல தசாப்தகாலப் பிரச்சினையாகும். எனவே பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதன் ஊடாகவோ அல்லது தண்டனைகள் மூலமோ மாத்திரம் இதனை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவரமுடியாது.

மாறாக நாட்டின் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அடிப்படைக்கட்டமைப்பு உள்ளடங்கலாக சமூகரீதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியிடமுடியும். அத்தோடு அதிகாரத்திலிருப்பவர்கள் சட்டத்திற்கு உரியவாறு மதிப்பளிப்பதை உறுதிசெய்யும் அதேவேளை, அவர்களும் சட்டத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை உருவாக்கவேண்டும்.

குறிப்பாக கைதுசெய்யப்படும் நபர்களிடத்தில் வன்முறையைப் பயன்படுத்துவதென்பது ஒரு உத்தியாகக் கையாளப்பட்டுவருகின்றது. சட்டமானது ஓர் சமூகத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்வரை பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகளும் மரணங்களும் தொடர்ந்து இடம்பெறும்.

முதலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதும் வன்முறையைப் பிரயோகிப்பதும் தவறு என்பதுடன் அவை நிறுத்தப்படவேண்டும் என்ற உத்தரவு பொலிஸ் உயரதிகாரிகளால் பிறப்பிக்கப்படவேண்டும்.

ஏனெனில் ஒருவரைக் குற்றவாளியெனத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் வசமிருக்கின்றதே தவிர, அவ்வதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. மாறாக தமது தற்பாதுகாப்பிற்காக அல்லது கைதுநடவடிக்கைகளின் போது சந்தேகநபர் முரண்பட்டுத் தாக்கும்போது மாத்திரமே பொலிஸார் மட்டுப்படுத்தப்பட்டளவிலான இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கமுடியும்.

அதேவேளை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு இருக்கின்ற அதிகாரங்கள் தொடர்பில் போதிய விழப்புணர்வற்ற நிலையிலேயே பொதுமக்கள் இருக்கின்றார்கள். அதன் காரணமாக பொலிஸார் தாம் கொண்டிராத அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றபோதிலும் அவற்றை மேம்போக்காக ஏற்றுக்கொள்கின்ற போக்கு சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது.

எனவே பொதுமக்களிடத்தில் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் அதிகாரங்கள் மற்றும் சட்டவரையறைகள் தொடர்பான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும்.

அதனைவிடுத்து பொலிஸாருக்கான பயிற்சி வழங்கல், தண்டனை வழங்கல் மற்றும் சீருடையுடனான கமரா மூலம் கண்காணித்தல் போன்றவற்றின் மூலம் பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் சித்திரவதைகளையும் மரணங்களையும் முடிவிற்குக்கொண்டுவரமுடியாது என்று குறிப்பிட்டார்.

 

https://www.virakesari.lk/article/117527

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை போவதற்கான முயற்சியிது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அடுத்த முறை போவதற்கான முயற்சியிது.

அக்கா வந்தால் நானும் கூட்டத்துக்குப் போவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.