Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் -  பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

 

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில் கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். ஒன்றில் இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.

இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும். பொலிஸ் , கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பொலிசார் மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் என கோரினார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-

பிரேமதாச யுகத்தை நினைவூட்டுவதாக உள்ளது. தெற்கில் தினமும் சடலங்கள் எரிவதும் மிதப்பதும் தொடர்கதையானதொருகாலம். தற்போது கோத்தாவின் யுகத்தில் வடக்கில் ....................... அரசியல் தலைமைகள் தமது பங்காளிச் சண்டைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மக்களின் விடயங்களைக் கையிலெடுக்கவேண்டும். வெறும் ஊடகச் சந்திப்புகள் பயன்தரா. 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்கள் இப்போதுதான் காணாமல் போய்கொண்டு இருக்கின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது......!  

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அம்பாறை மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்ட்க நிலையில் ஒரு சடலம் கடலில் பயணம் செய்த்வர்களா அல்லது நாட்டை விட்டு தப்ப முயன்றவர்களா ஒன்றுமே விளங்காத தீவா இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று அம்பாறை மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்ட்க நிலையில் ஒரு சடலம் கடலில் பயணம் செய்த்வர்களா அல்லது நாட்டை விட்டு தப்ப முயன்றவர்களா ஒன்றுமே விளங்காத தீவா இருக்கு 

பாருங்கள் தனிக்காட்டுராசா அவர்களே, தமிழர் உயிராவது***ராவது. எமக்கு சீமான் ஆமைக்கறிச்சாப்பிடுவது முதல்  சுமந்திரன் சோலிப்பையைத் தூக்குவது வரை மட்டுமே நாங்கள் கவனிப்போம். 
நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

பாருங்கள் தனிக்காட்டுராசா அவர்களே, தமிழர் உயிராவது***ராவது. எமக்கு சீமான் ஆமைக்கறிச்சாப்பிடுவது முதல்  சுமந்திரன் சோலிப்பையைத் தூக்குவது வரை மட்டுமே நாங்கள் கவனிப்போம். 
நன்றி. 

எதுவும் சொல்வதற்கில்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எதுவும் சொல்வதற்கில்லை

நன்றி,

தமிழினத்தின் இப்படியான ஒதுங்கிப்போதலே இன்றைய அரசியலவத்துக்குக் கரணியமான அடிப்படை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

நன்றி,

தமிழினத்தின் இப்படியான ஒதுங்கிப்போதலே இன்றைய அரசியலவத்துக்குக் கரணியமான அடிப்படை. 

தற்போது ஒதுங்குதலே மிகவும் பொருத்தமாகிறது காலத்துக்கேற்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.