Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்-சாணக்கியன் பாராளுமன்றத்தில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தானின் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களையும் கூறிக்கொள்கிறேன்.
இந்தச்சம்பவம் தொடர்பாக எமது இளைஞர்கள் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக அனுதாபங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் நியாபகப்படுத்த விரும்புகிறேன். 1956- 57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.
குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு யார் காரணம் என இங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரிந்திருக்கலாம். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கத்தை கொலை செய்தார் எனும் குற்றஞ்சாட்டுள்ள ஒருவர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
1956 ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பே இருக்கவில்லை. 1948 முதல் 1978 வரையான காலப்பகுதியில் அரசியல் உரிமைக்காக தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளையே மேற்கொண்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால்தான் தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தினார்கள். பாகிஸ்தானில் மத அடிப்படைவாதத்தினால் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது. ஆனால், ஒருநாடு - ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
 
- சாணக்கியனின் முகநூல் 
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அப்படியே இஸ்லாமியர்களால் இலங்கை அரசபடைகளின் துணையுடன் கிழக்கில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றியும் கொஞ்சம் கேளுங்கய்யா, சிங்களவனாவது எமது எதிரி அதனால் எம்மை கொன்றொழித்தான் முஸ்லீம்கள் எதுக்கு எம்மேல் கொலைவெறி தாக்குதல் செய்தார்கள் என்று காட்டமாக ஒரு வினா எழுப்புங்கள் ஐயா.

மாட்டீங்க ஏனென்றால் நீங்கள் எங்கள்மேல் வைத்திருக்கும் அக்கறையைவிட இஸ்லாமியர்களுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் தேனிலவுபற்றி ஊரறியும். 

சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் பார்க்கும்போது எண்ணெயும் தண்ணியும்போல எப்போதும் தமிழர்களுடன் சேர்ந்து வாழாத இலங்கை இஸ்லாமியர்கள் வரலாற்றில் இப்போது  ஒரு தமிழரை அவர்கள் பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்றால்  அது உங்களைத்தான்.

அதற்கு ஒரேயொரு காரணம்தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள் என்பதனால்தான், மற்றும்படி தமிழர்களுடன் சேர்ந்து வாழும் எந்த நோக்கமும் அவர்களிடம் கிடையாது என்று உறுதியாக சொல்லலாம்

நேற்று எதிர்பாராதவிதமாக வாடகை காரில் போய் வரவேண்டியிருந்தது, போகவும் வரவும் சாரதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானியர்களே.

இலங்கையரா என்று என்னை விசாரித்த பின்னர்  பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார்கள், அந்த படுகொலையை எண்ணி ஆவேசபட்டார்கள், தாம் வெட்கபடுவதாக சொன்னார்கள், அவர்களை தூக்கிலிடவேண்டுமென்று சொன்னார்கள்,  இஸ்லாம் ஒருபோதும் சக மனிதனை கொல்ல சொல்லவில்லை என்று கொந்தளித்தார்கள்.

இதில் ஆச்சர்யமென்னவென்றால் இருவருமே ஒரேமாதிரியே பேசினார்கள். ஆனால் நான் ஒரு இந்தியனாக இருந்து  அல்லது பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்டவர் ஒரு இந்தியராக இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படி ஒரு கருணையும் நீதிக்கான குரலும் அவர்களிடமிருந்து வந்திருக்காது.

அதேபோல அந்த சிங்களவர் எரித்து கொல்லப்பட்டது தமிழகத்தில்  என்றிருந்தால் இப்போது உள்ளதுபோன்று சிங்களவர்கள் மெளனமாக இருந்திருக்கமாட்டார்கள் எரிந்தவர் உடல் இலங்கையை வந்து அடையு முன்னரே  இலங்கையில் உள்ள இந்தியர்கள் கண்டிப்பாக தாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறுக்கவே முடியாது. எவ்வளவு பாத்துட்டோம்.

ஆனால் அதில் ஒரு சாரதி சொன்னார் அவரும் சம்பவம் நடந்த மாநிலத்தை சேர்ந்தவராம் அவருக்கு வந்த தகவல்களின்படி அந்த தொழிற்சாலையின் தீவிரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஒரு ஊழியரை கொல்லப்பட்ட மேளாளர் சில ஓரிரு வாரங்கள்  முன்னர் வேலையைவிட்டு நீக்கியிருந்தாராம்,

அவருடைய நண்பர்களின் தூண்டுதலின் பேரிலேயே சுவரொட்டி கிழிக்கப்பட்ட சம்பவத்தை சாக்காக வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறினார் உண்மைகள் ஓரிருநாட்களில் தெரிய வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.