Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
25 நிமிடங்களுக்கு முன்னர்
 

திருவொற்றியூர் கட்டடம்

பட மூலாதாரம்,@KUPPAN_KARTHIK

 

படக்குறிப்பு,

திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் தரைமட்டமான குடியிருப்புக் கட்டடம்

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கட்டடம் முழுமையாக சரிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், பல குடும்பங்கள் உடைமைகள், முக்கிய ஆவணங்களை சம்பவ பகுதியில் இழந்தன. அங்கு என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழின் விஜயானந்த் நேரில் பார்வையிட்டு வழங்கும் சிறப்புச் செய்தி இது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. அங்குள்ள நான்கு பிளாக்குகளில் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை டி பிளாக் அதிகாலை 5 மணியளவில் கட்டடத்தில் விரிசல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் உணர்ந்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஒருவர் பின் ஒருவராக அச்சம் காரணமாக கட்டடத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அனைவரும் முழுமையாக வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டடம் இடிந்த பகுதிக்கு வந்தனர்.

 

திருவொற்றியூர் கட்டடம்

பட மூலாதாரம்,@IDHALIYAN

குடியிருப்புகளில் இருந்து அனைவரும் வெளியேறியதாக கூறப்பட்டாலும், யாராவது இடிபாடுகளுக்குள் உள்ளார்களா என்று அதிகாரிகள் தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். ஆனால், நல்வாய்ப்பாக உயிர்தேசம் ஏற்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சம்பவ பகுதியில் உள்ள நிலவரத்தை பிபிசி தமிழின் செய்தியாளர்கள் குழு நேரில் பார்வையிட்டது.

சி-பிளாக்கில் வசித்து வருபவரும் உள்ளூர் மகளிர் குழு உறுப்பினருமான ஒரு பெண்மணி சம்பவத்தை விவரித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"அதிகாலை 5.30 மணியளவில் கட்டடம் குலுங்குவதை உணர்ந்தோம். டி பிளாக்கில் எங்களுடைய மாமா வசித்து வந்தார். அவரும் கட்டடம் குலுங்குவதாகக் கூறி வெளியே வந்திருந்தார். எங்களுடைய பகுதியில் தனிப்பட்ட அளவில் தலைவரோ பிரதிநிதியோ கிடையாது. அதனால் கன்னியரசிடம் தெரிவித்தோம். ஆனால், காலை 9 மணிவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை," என்றார்.

"பிறகு குடியிருப்புவாசிகளே அரசுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முறையிட்டோம். கட்டடத்தில் விரிசல் அதிகமானதால் அதில் வசித்த அனைத்து குடியிருப்புவாசிகளும் வெளியே வந்தனர். கட்டடத்துக்கு லேசான சேதம் ஏற்படும் என்றுதான் முதலில் நினைத்தோம். கட்டடமே சரியும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று அந்த பெண்மணி தெரிவித்தார்.

கட்டடம் விழுந்த சம்பவம் காரணமாக, அருகே உள்ள வளாகத்தில் பலவீனமான குடியிருப்புகளில் இருப்பவர்களையும் வெளியேறுமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அதில் ஒரு பெண்மணி, "சரியாக காலை 9.30 மணியளவில் கதவை தாழிட முடியவில்லை. ஸ்லாப் உடைகிறது என்று பலரும் கூறினார்கள். நல்லவேளையாக அனைத்து குடியிருப்புவாசுகளும் வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் கட்டடம் அப்பளம் போல சரிந்து நொறுங்கியது," என்று கூறினார்.

"ஏற்கெனவே மழை பெய்தபோதும் கட்டடம் வலுவிழந்த நிலையில் இருப்பதாக கூறினோம். ஆனால், அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே குடிசைமாற்று குடியிருப்பில் சேதம் இருந்ததால் எந்தெந்த வீடுகளில் சேதம் உள்ளன என்று அதிகாரிகள் வந்து கேட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் பிரச்னைகளை எழுத்துபூர்வமாக தெரிவித்தோம். பிறகு கதவு, வெளிப்புற விரிசல்களில் பூச்சுவேலை செய்தனர். ஆனால், வீட்டுக்குள் இருந்த நிலை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை," என்று வீட்டை பறிகொடுத்த ஒரு குடியிருப்புவாசி கூறினார்.

 

திருவொற்றியூர் கட்டடம்

 

படக்குறிப்பு,

கட்டடம் இடிந்த பகுதியில் வீடுகளை இழந்து வீதியில் வாழும் குடியிருப்புவாசிகள்

கட்டடம் இடிந்த பகுதியில் அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்திய உடையுடன் மட்டுமே வெளியே வந்துள்ளனர். அவர்களின் பொருட்களைக் கூட வெளியே எடுக்க நேரம் இருக்கவில்லை என்று பலரும் தெரிவித்தனர்.

அருகே உள்ள வளாகத்தில் நான்காவது மாடியில் வசிக்கும் ஒரு பெண்மணி, "22 வருடங்களாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம். 2012இல் வெள்ளம் வந்தபோது எல்லா வீடுகளிலும் மேற்கூரை பாதிக்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட கூரைகளில் ஓடுகளை புதுப்பித்துக் கொடுத்து விட்டு சென்றனர். குடிசை மாற்று வாரியத்தில் இருந்து ஆய்வுக்காக வந்தபோது சுவர் பலவீனம் அடைந்து விட்டதை சுட்டிக்காட்டினோம். எல்லா வீடுகள் பற்றியும் குறிப்பெடுத்து வருகிறோம். அறிக்கை அடிப்படையில் துறை ரீதியாக முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், ஜன்னல் கூரைகள் மட்டுமே பூச்சு வேலைக்கு உட்படுத்தப்பட்டன," என்றார்.

 

திருவொற்றியூர் கட்டடம்

"இப்போது நாங்கள் சாலையில்தான் இருக்கிறோம். 18 வருடங்களாக இந்த பகுதியில்தான் இருக்கிறோம். சாப்பிட உணவு மட்டும் கொடுத்தால் போதுமா.... இப்படியே சாலையில் இருக்க முடியுமா? குழந்தைகளுடன் எப்படி இங்கேயே வாழ்வது? என்று கேட்கிறார் மற்றொரு பெண்மணி.

இதற்கிடையே, சம்பவ பகுதியை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் 40 முதல் 50 வருடங்கள் பழமையானவை. அவை முற்றிலும் பலவீனமான நிலையில் உள்ளன என்று அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டு நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

திருவொற்றியூர் கட்டடம்

 

படக்குறிப்பு,

தரைமட்டமான கட்டடம்

திருவொற்றியூரில் இடிந்த கட்டடம் 1993-ல் கட்டப்பட்டவை. மோசமான சூழலில் இருக்கும் வீடுகளைக் கட்ட ரூ. 1.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 7500 கட்டிடங்களை 2,500 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளோம். அந்த பணிகளின் ஒரு பகுதியாக கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிப்பில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ. 8 ஆயிரம் இடம்பெயர்வதற்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ. 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

பாதிக்கப்பட்ட மக்களை எங்கு தங்க வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தருகிறோம் என்று அரசு கூறியிருக்கிறது.

கடைசியாக வந்த தகவலின்படி, கட்டடம் சரிந்த சம்பவத்தில் வீட்டை பறிகொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கட்டடம் வலுவிழந்த நிலையில் இருக்கும் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் நடந்த சம்பவத்துக்கு பிறகு வீடுகளுக்குள் செல்ல அஞ்சுகிறார்கள்.

வலுவிழந்த கட்டடத்துக்கு மாற்றாக ஒரு கட்டடத்தை கட்டித் தர வேண்டும், குடியிருப்புவாசிகளின் உயிர்களை காக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

காணொளி, படங்கள்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

https://www.bbc.com/tamil/india-59803853

  • கருத்துக்கள உறவுகள்

93 ம் ஆண்டில் கட்டபட்ட அரச கொண்டிராக்ட் கட்டமாம். 

2021 வரை விழாமல் இருந்ததுதான் அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

300 குடியிருப்புகள் உள்ள பகுதியாம். ஒரு வீட்டில்… நான்கு பேர் இருந்தாலும்,

1200 பேர், உயிர் சேதம் இல்லாமல் வெளியேறியதே பெரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ரோக்றில் நேர்மை என்பதே 100க்கு 60 -40% தானே .!  60 செலவு - 40 கொமிசின் 👌 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.