Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!

spacer.png

குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்து விசாரணைகள் மேற்கொண்டது.

தற்போது விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://athavannews.com/2022/1259698

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிபின் ராவத்

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் சூலூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சம்பவம் தொடர்பாக முப்படைகளின் உயர்நிலைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். (இந்த பதவியை இவருக்காகவே பிரதமர் நரேந்திர மோதி அரசு உருவாக்கியிருந்தது.)

இந்த விபத்தில் பல அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

ஜெனரல் ராவத்தின் மனைவியும் ஹெலிகாப்டரில் இருந்ததால் அவரும் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில், "விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறோ, சதி அல்லது அலட்சியமோ அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை விசாரணைக்குழு ஆய்வு செய்துள்ளதாக இந்திய விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் நுழைந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

அந்த மேக கூட்டங்களுக்குள் சிக்காமல் விமானி ஹெலிகாப்டரின் திசையை மாற்றும் கட்டாயத்துக்கு வழிவகுத்தது என்றும் அதன் விளைவாக நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு விசையை கட்டுப்படுத்த வழியின்றி சம்பவம் நடந்ததாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

இதே சமயம், இந்த விசாரணைக்குழு எதிர்காலத்தில் இதுபோன்ற அசாதாரண நிலையில் எத்தகைய நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பான சில பரிந்துரைகளை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கியிருக்கிறது.

 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி

அவற்றின் விவரத்தை பாதுகாப்புத் துறையினர் வெளியிடவில்லை. இந்த குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

முன்னதாக, பிபின் ராவத் பறந்து சென்ற ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து விசாரிக்க ஏதுவாக தமிழக காவல்துறை ஆரம்பநிலை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. பிறகு இந்த சம்பவம் பற்றிய விசாரணையை பாதுகாப்புத்துறையே ஏற்றுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நிலைக்குழுவை அமைப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அறிவித்தார். அதன்படி விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த 5ஆம் தேதியே அளி.க்கப்பட்டது. இந்த ரக ஹெலிகாப்டர்கள், மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பு வடிவமைப்பாகும்.

பிபன் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானபோது அதன் செயல் திறன் முழுமையாக சேவை செய்யக்கூடியதாகவே இருந்தது என பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

எனினும் தாழ்வாகப் பறந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர், வெலிங்டனில் தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன், மேக மூட்டத்தில் சிக்கியதால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கீழே விழுந்து நொறுங்கியிருப்பதாக விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

என்ன நடந்தது?

2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

 

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும், சூலூரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டறை, ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், மதியம் 12.08 மணிக்கு, ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது.இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை நிர்வகிக்கும் நெறிமுறைகள் அடங்கிய தனது பரிந்துரைகளை விசாரணைக்குழு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அவற்றை இந்திய விமானப்படை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mi-17V5 விபத்துக்குள்ளான நாளில் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) உரையாற்ற சென்றிருந்தார்.அந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராஜே சிங் ராவத், அவரது பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் செளஹான், Mi-17V5 விமானியான ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங், துணை விமானி. ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார் மற்றும் லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் இறந்தனர்.

அந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே குரூப் கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி தனது கடைசி மூச்சை இழுத்த பிறகு அவரது உயிர் பிரிந்தது.

https://www.bbc.com/tamil/india-60002443

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப சீனாகாரன் இல்லையா?

ஆஆஆ வடை போச்சே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப சீனாகாரன் இல்லையா?

ஆஆஆ வடை போச்சே.

செய்தது சீனாக்காரனாய் இருந்தாலும்.....
செய்தது சீனாக்காரன் எண்டு வெளியிலை சொன்னால் கிந்தியனுக்கு மானங்கெட்ட வேலையெல்லோ? உளவுத்துறையின்ரை மூஞ்சையை எங்கை கொண்டு போய் வைக்கிறதாம்? 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.