Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில்

spacer.png

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார்.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் இருந்தாலும் முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் தனது பதவி நீக்கம் நாட்டின் எதிர்கால அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையும் என்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

 

https://athavannews.com/2022/1259911

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்காற்று காரணிகளின் அடிப்படையிலேயே சுசில் பதவி நீக்கம் - நாமல்

(இராஜதுரை ஹஷான்)

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும். அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 

 

https://www.virakesari.lk/article/120217

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுசிலின் பதவி பறிப்பு; காரணத்தை வௌியிட்டார் ஜோன்ஸ்டன்

அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகளை சுசில் பல தடவைகள் விமர்சித்துள்ளார். இதனாலேயே ஜனாதிபதி சுசிலின் பதவியை பறித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும்  தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு  உள்ளது.   கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றி பேச உரிய இடங்கள் உள்ளன. அது பற்றி அமைச்சரவையில் பேசலாம். மேலும்,  இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.  அந்த சமயங்களில்  அதைப் பற்றி பேசலாம் எனவும் தெரிவித்தார். 

மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்  ஜனாதிபதி அவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பது  ஏற்புடையதல் எனவும் கூறினார்.

மேலும், வௌியில் செய்யும் அரசியலை அமைச்சரவையில்  செய்ய  முடியாது. அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள ஜனாதிபதி முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

image_42edff02b5.jpg
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/சுசிலின்-பதவி-பறிப்பு-காரணத்தை-வௌியிட்டார்-ஜோன்ஸ்டன்/175-288625

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஒழுக்காற்று காரணிகளின் அடிப்படையிலேயே சுசில் பதவி நீக்கம் - நாமல்

(இராஜதுரை ஹஷான்)

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும். அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் 

நாமல் ராஜபக்ச…. புத்திமதி சொல்லுற அளவுக்கு….
குடும்ப ஆட்சி,  கொடி கட்டிப் பறக்குது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை உலக வரைபடத்தில் காணவில்லை என்று நாளைக்கு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நாமல் ராஜபக்ச…. புத்திமதி சொல்லுற அளவுக்கு….
குடும்ப ஆட்சி,  கொடி கட்டிப் பறக்குது.

பொறுங்கோ இப்பதான் ஆரம்பிக்குது. சூடு பிடிக்க  இன்று புத்திமதி சொல்லுகிறவர்கள் நாளைக்கு பரிதாப நிலைக்கு தள்ளப்படலாம். நல்லவேளை! சுசிலின் தலை தப்பிச்சு என்று நினைத்துக்கொண்டு பழைய வேலையை கவனிக்க வேண்டியது. இதுக்கு மேல பேசினால் ஆள் காணாமல் போகலாம், விபத்தில் மரணிக்கலாம், சிறையில் தள்ளப்படலாம். அது சுசிலின் பேச்சில் உள்ளது. பழைய அரசியல்வாதிகளின் வரலாற்றை திரும்பி பார்த்துவிட்டு செயலாற்றுவது எதற்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்.. கோத்தா துரத்தினதோட விட்டாரே. தூக்கி தான் வளர்க்கும் சுறாக்குப் போடாமல் விட்டது பெரிய விசயம். 

கோத்தாவை தலையில தூக்கி வைச்சு ஆடினவைக்கு இதுவும் தேவை இன்னும் தேவை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருக்கு ....... கட்டியணைத்த நாடுகள் கட்டியிழுக்க ஆரம்பிக்கட்டுமேன், நட்பு நாடுகள் முதுகில குத்தட்டுமேன். அப்ப இருக்கு .....  இவர்களின் வீரம்!

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று ஆட்சியை பிடித்து, குடும்பமே ஆட்சி செய்யுது இதில விளக்கம் வேறை ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.