Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளி மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல்

கடந்த செப்ரம்பர் மாதம் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் (ஆதவன்) மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்றுமுன்தினம் (04) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாயை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி காலை 6 மணியளவில், வழமைபோல நடைப்பயிற்சிக்கு செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

பின்னர் 2021 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை குறித்த நபர் நவாலிப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்த போதிலும், குடும்பத்தினர் தமது பாதுகாப்பு கருதி இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியிடவில்லை.

இருப்பினும், இவருடைய வீட்டுக்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடுந்தூரம் காணப்பட்டதையடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் இவருடைய உடல் நீதிமன்ற கட்டளையின் படி உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.

விசாரணைகள் இடம்பெற்று குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் இவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் என பல செய்திகள் பரப்பப்பட்டிருத்ததை தற்போது அறிந்த குடும்பத்தினர் அதை முற்றிலும் மறுத்துள்ளனர்.

அவர் நல்ல சுகதேகியாக இருந்தார் என்றும், தவறான முடிவு எடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு 10ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவ்விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைக்காக இன்று தவணையிடப்பட்டுள்ளது.

உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி எம். திருக்குமரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இவர் 1994 முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததுடன், அரசியல் துறையின் நிதி தொடர்பான விடயங்களில் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.virakesari.lk/article/120333

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகள் விபத்துகளில் பாதிக்கு மேல் திட்டமிட்ட கொலைகளே   ராணுவ உளவு பிரிவினரால் மேற்சொன்னவாறு கொலை  அச்சுறுத்தல் பலருக்கு விடப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

தற்கொலைகள் விபத்துகளில் பாதிக்கு மேல் திட்டமிட்ட கொலைகளே   ராணுவ உளவு பிரிவினரால் மேற்சொன்னவாறு கொலை  அச்சுறுத்தல் பலருக்கு விடப்பட்டு உள்ளது .

இந்தப் போராளி யாழ் பல்கலையின் முன்னாள் மாணவர். இவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருந்தார். 

பிரேத பரிசோதனை இதனை நிரூபித்திருக்கிறது. ஆனால் அழுத்தம் காரணமாக அது வெளியிடப்படவில்லை. இவரது  மனைவியின் இரு சகோதரர்கள் மாவீரர்கள். திருக்கோணமலை (வடக்கு) யைச் சேர்ந்தவர்கள்

இவர் மட்டுமல்ல, கடந்த வருடம் மட்டும் ஆகக் குறைந்தது 5 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் (வடக்கில் மட்டும்) இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, தற்கொலை என காண்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் முக்கியமான பொறுப்புக்களில் இருந்தவர்கள்.

😢

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் போராளியின் மரணத்தில் சந்தேகம்!
[Friday 2021-10-08 08:00]



அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மாணிக்கம் ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மாணிக்கம் ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.

    

“ மாணிக்கம் ஜெயக்குமார் என்ற முன்னாள் போராளி, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரான இவர், வீட்டிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆதவன் என்ற இயக்கப் பெயர் உடைய இவர், கராத்தே கற்று, தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு ஆரோக்கியமாக இருந்தவர், சிறியளவு நீர் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டார்.

அவரது உடலில் இரத்த காயங்கள் உள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் உறவினர்களிற்கு சந்தேகம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதுதவிர, திருகோணமலையில் முன்னாள் போராளியொருவரும், இன்னொரு இளைஞனும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=272884&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.