Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by T Yuwaraj on 2022-01-21 17:27:17

 
 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

4__3_.jpeg

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். 

பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரையும் கையளித்திருந்தனர். 

4__1_.jpeg

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் செல்வதனால் , எமது கடல் வளங்களும் , கடல் சூழலும் ,எமது உபகரணங்கள் , வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்படுகிறன. 

அதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லென துன்பங்களை  அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். பல தரப்புக்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளோம். இருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை . 

 

89.jpeg

 

வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபாய். அதற்கான நஷ்டடஈடுகளை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அதேவேளை மலர்ந்துள்ள இந்த வருடத்திற்குள் எமக்கு தீர்வினை பெற்று தர சகல தரப்பினர்களும் முயற்சிகளை முன்னெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , கடல் வளத்தையும் காத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம்  | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லென துன்பங்களை  அனுபவித்து வருகின்றோம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் என்றால் குத்துமதிப்பாக 12 ஆண்டுகள் இருக்கலாம். அப்படி என்றால் அதற்கு முன்னரான காலம் யாருடையது.? அந்தக் காலத்தில் நீங்கள் துன்பத்தை அனுபவிக்காமல் பாதுகாத்து வந்தவர்கள் யார்.?? அப்படிப் பாதுகாத்தவர்களை அழிப்பதற்குத் துணைபோனவர்கள்தான் இன்று உங்கள் துன்பத்திற்குக் காரணம் என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை.???   

41 minutes ago, Paanch said:

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் என்றால் குத்துமதிப்பாக 12 ஆண்டுகள் இருக்கலாம். அப்படி என்றால் அதற்கு முன்னரான காலம் யாருடையது.? அந்தக் காலத்தில் நீங்கள் துன்பத்தை அனுபவிக்காமல் பாதுகாத்து வந்தவர்கள் யார்.?? அப்படிப் பாதுகாத்தவர்களை அழிப்பதற்குத் துணைபோனவர்கள்தான் இன்று உங்கள் துன்பத்திற்குக் காரணம் என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை.???   

யுத்தம் நடந்து கொண்டு இருந்த காலத்தில், இந்த கடற்கொள்ளையர்கள் கரையில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவுக்கு எல்லாம் எங்கள் கடல் வலயத்தில் வந்து மீன் வளத்தைக் கொள்ளை அடிக்கவில்லை. . எம் மீனவர்களின் படகினை வேண்டும் என்றே முட்டி மோதியும், எம்மவர்களின் வலைகளை அறுத்தெறிந்தும் அட்டகாசம் செய்யும் துணிவும் அன்றிருக்கவில்லை. அந்த காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு தம் கடலில் உள்ள வளத்தை சூறையாடி ஈற்றில் வளமே அற்றதாக்கிக் கொண்டு இருந்தார்கள் இந்த கொள்ளையர்கள்.

இன்று கரைக்கு வந்து எம் மீனவர்களை தாக்கி படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்தும் அளவுக்கு வந்துவிட்டார்கள். நீங்கள் அவற்றைக் கண்டிக்காமல் அதற்கெதிராக போராடும் எம் மீனவர்களைப் பார்த்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அந்த காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு தம் கடலில் உள்ள வளத்தை சூறையாடி ஈற்றில் வளமே அற்றதாக்கிக் கொண்டு இருந்தார்கள் இந்த கொள்ளையர்கள்.

இன்று கரைக்கு வந்து எம் மீனவர்களை தாக்கி படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்தும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.

நிழலி அவர்களே! என் கேள்விக்கான விடைகள் உங்கள் ஊட்டத்திலேயே உள்ளதே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழங்குறைந்த கடற்பரப்பான பாக்கு நீரிணையில் இழுவை வலைகளை போட்டு உழுதால் கடல் வளம் அழியும் என்பது மீனவர்களுக்கு தெரியாதா? அல்லது அதனைப்பற்றி கவலைப்படுகிறார்கள் இல்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.