Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓவியாவின் கனவுகள்-Dreams of Oviya-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியாவின் கனவுகள்

மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை.

நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. 

மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு.

இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை.

ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல்.

மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது.

இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள்  ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. 

மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு  நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள்.

நன்றியுடன் பா.உதயன் ✍️


 

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் நனவாகும் என எண்ணிக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து செல்கிறது .அருமை நன்றாக சொல்லப்பட்டுள்ளது 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

கனவுகள் நனவாகும் என எண்ணிக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து செல்கிறது .அருமை நன்றாக சொல்லப்பட்டுள்ளது 

கருத்துக்கு நன்றிகள் நிலாமதி அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 15:15, uthayakumar said:

ஓவியாவின் கனவுகள்

மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை.

நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. 

மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு.

இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை.

ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல்.

மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது.

இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள்  ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. 

மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு  நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள்.

நன்றியுடன் பா.உதயன் ✍️


 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2022 at 18:19, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

கருத்துக்கு நன்றிகள் புரட்சிகர தோழரே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.