Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம்

 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும்  மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப்பிற்கு வராததால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அதிகாரிகள் வீட்டிற்கு விரைந்தனர்.

இதன்போதே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் அனைவரும் ஒரு கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தின் போது கைகளைப் பிடித்துக் கொண்டு,  இருப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் குணதிலக.

கிறிஸ்மஸுக்கு முன், குணதிலக தனது சுயவிபரத்தை பேஸ்புக்கில் 18 நிமிட  வீடியோவாக வெளியிட்டார்.

அதில் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், உளவியல் நிபுணரைப் பார்த்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.

மேலும் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

image_eab61457e7.jpgimage_7c25bc6a56.jpegimage_fe7c8332e1.jpeg


  • கருத்துக்கள உறவுகள்

இதைப்போன்ற சம்பவம் 2019லும் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடந்தது.. ஆனால் தாய் தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பத்தில் காப்பாற்ப்பட்டு அவருக்கு எதிராக கொலை வழக்கும் நடைபெற்று தீர்ப்பு அவர் தனது இரு பெண்பிள்ளைகளை கொலை செய்யும் பொழுது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் கூறி தண்டனை குறைக்கப்பட்டது.. 

இந்த Milka Djurasovic போலவே இந்திக குணதிலகவும்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்போன்ற சம்பவம் 2019லும் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடந்தது.. ஆனால் தாய் தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பத்தில் காப்பாற்ப்பட்டு அவருக்கு எதிராக கொலை வழக்கும் நடைபெற்று தீர்ப்பு அவர் தனது இரு பெண்பிள்ளைகளை கொலை செய்யும் பொழுது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் கூறி தண்டனை குறைக்கப்பட்டது.. 

இந்த Milka Djurasovic போலவே இந்திக குணதிலகவும்.. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

 

 

மற்றவர்களுக்கு depression பற்றி கூறி இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எல்லையை மீறாது அன்பாகவும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருக்க கூறிவிட்டு.. தற்கொலை தீர்வு இல்லை என்று ஒரு புறமாகவும் பின்பு  அதனை நியாயப்படுத்துவதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது.. 

மனவள ஆலோசகர்கள் பிரச்சனைகளை தீர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் கூறும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்பார்கள்.. 

என்னைப்பொறுத்த வரை சக நண்பர்கள்,உறவுகளுடையே கதைப்பதை விட இதற்கென, இந்த துறையில் உள்ளவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது மிகவும் நல்லது.. ஆனாலும் சரியான ஆதரவு இல்லாவிட்டால் சில எண்ணங்களிலிருந்து மீள முடியாது!!

 

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வேறு திசையில் திரும்புவதும் ,டாக்டர்களின் தகுந்த ஆலோசனை  மருந்துகள் , தொடர்ந்து எடுப்பதும் ,( இடையில் விடடால் மீண்டும் பழைய நிலைக்குப்போக கூடும் ) , இடமாற்றம் , சூழல் மாற்றம் என்பவையும்  மிகவும் பயனளிக்க கூடும்.  தனித்து இருப்பதும், மற்றவர்களோடு பேசாமல் இருப்பதும் ஆபத்தாக   கூடும். எமது இனத்தின் சாபக்கேடு குழந்தைகளின் வாழ்வை முடிப்பது . ஒரு உயிரை அழிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.  படைப்பதும் காப்பதும் இறைவனின்   செயலே .         

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மற்றவர்களுக்கு depression பற்றி கூறி இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எல்லையை மீறாது அன்பாகவும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருக்க கூறிவிட்டு.. தற்கொலை தீர்வு இல்லை என்று ஒரு புறமாகவும் பின்பு  அதனை நியாயப்படுத்துவதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது.. 

மனவள ஆலோசகர்கள் பிரச்சனைகளை தீர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் கூறும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்பார்கள்.. 

என்னைப்பொறுத்த வரை சக நண்பர்கள்,உறவுகளுடையே கதைப்பதை விட இதற்கென, இந்த துறையில் உள்ளவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது மிகவும் நல்லது.. ஆனாலும் சரியான ஆதரவு இல்லாவிட்டால் சில எண்ணங்களிலிருந்து மீள முடியாது!!

 

நிறைய நண்பர்கள், மனைவி  இருந்துள்ளார்கள். ஆனாலும் அவரின் தற்கொலையை தடுக்க முடியாமல் போனது மிக கவலையானது.  பிள்ளைகளின் மரணம் மிக பரிதாபகரமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருக்கு  depression  வந்து விட்டால் யார் ஆலோசனை கொடுத்தாலும் அவர்கள் அந்த புள்ளியிலிருந்து கொஞ்சம் விலகியிருப்பார்களே தவிர......அந்த புள்ளியை விட்டு விலகி போக மாட்டார்கள். இல்லையேல் புத்தியை மழுங்கடிக்கும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு நடைப்பிணமாக வாழ வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம், பாவம் அந்த பிள்ளைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.