Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

13 ம் கதை-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 


சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
அங்கு தொங்கும் 
13 ம் உடலை 
கீழே இறக்கினான் 

மன்னவனே சற்றும் 
மனம் தளராமல் 
என்னை காவிப் போகும் 
உனக்கும் 13ம் கதையை 
சொல்லுகிறேன் 
கேள் என்றது 

காவிப் போன 
நாலு பேரும் 
இறக்கி அருகில் 
வைத்து விட்டு 
அமைதியாக இருந்து 
கேட்டபடி இருந்தனர் 

இது முற்பத்தி நான்கு வருட
13 ம் கதை இது 
தமிழர் தீர்வு
கதை இது 
கவனமாய் கேட்டுக் கொள் 

இத்தனை வருடமாக
இந்து சமுத்திர 
வல்லாதிக்க சக்தியை ஏமாற்ற 
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 
விளங்கிக் கொள் 

முப்பது வருடத்திற்கு மேல்
எந்தத் தீர்வையும் 
பெற்றுத் தராமல் 
இனப் படுகொலையையம் மறைத்து 
ஈழத் தமிழனை ஏமாத்த
இலங்கைக்கும்
இந்து சமுத்திர இந்த 
வல்லாதிக்க சக்திகளுக்கு 
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 
புரிந்து கொள் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இவர்கள்
மீண்டும் வருவார்கள் 
தெரிந்து கொள் 

அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
உனைப் போலவே 
அறிந்து கொள் 

எத்தனை முறை 
ஒப்பந்தங்கள் எழுத 
வருவார்களோ 
அத்தனை முறையும் 
வருவதற்கு முதல் 
13 ஐ காட்டி 
ஒரு வெருட்டொன்று போடுவார் 
சின்னத் தம்பிக்கு 
பெரிய அண்ணை 
இது பெரியண்ணனின் 
சொந்த நலனோடு சார்ந்து 
புரிந்து கொள் 

இப்போ இன்னும் 
ஒரு முறை நீ 
13 க்கு உயிர் கொடுத்து 
எழுப்ப முடியுமா 
என்று முயற்சிக்கிறாய்

என்ன செய்வது 
கையில் இருந்த பலத்தை 
காணாமல் ஆக்கி விட்டார்களே 
நீங்கள் ஒற்றுமையையும் 
தொலைத்து விட்டீர்களே

உலக ஒழுங்கோடு 
ஒத்து போகவும் வேண்டும் 
உனக்கு உதவக் கூடியவர்களை 
வளைத்து பிடி 

போரிலே நீ தோற்றுவிட்டாய் 
என்பதற்காக
உன் கொள்கை கோட்பாடு 
தேசியப்பற்று என்பவற்றை 
கை விடாதே

தனியவே நீ பயணித்தால்
தலைக்கு மேலே 
உனக்கு பிரசினை 
கூடி விடும் 
நினைவில் வை என்றபடி

இன்னும் ஒரு கதை 
சொல்லுகிறேன் கேள் என்றே 
அது இருட்டுக்குள் 
கருப்பு பூனையை 
தேடும் கதை 
ஒரு நாடு ஒரு சட்டம் 
என்ற கதையையும் சொல்லி

மீண்டும் முருங்கை மரத்தில்
ஏறி ஏளனமாய்
மன்னனையும் 
அவன் பக்தர்களையும் 
பார்த்து சொன்னது  

காத்திரு மன்னவா 
34 வருடங்களாக 
அடை காத்துவரும் 
வாத்து ஒரு நாள் 
பொன் முட்டைகள் 
போடும் வரை காத்திரு
காத்திரு காத்திரு.

பா.உதயன்✍️

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2022 at 19:00, uthayakumar said:

 


சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
அங்கு தொங்கும் 
13 ம் உடலை 
கீழே இறக்கினான் 

மன்னவனே சற்றும் 
மனம் தளராமல் 
என்னை காவிப் போகும் 
உனக்கும் 13ம் கதையை 
சொல்லுகிறேன் 
கேள் என்றது 

காவிப் போன 
நாலு பேரும் 
இறக்கி அருகில் 
வைத்து விட்டு 
அமைதியாக இருந்து 
கேட்டபடி இருந்தனர் 

இது முற்பத்தி நான்கு வருட
13 ம் கதை இது 
தமிழர் தீர்வு
கதை இது 
கவனமாய் கேட்டுக் கொள் 

இத்தனை வருடமாக
இந்து சமுத்திர 
வல்லாதிக்க சக்தியை ஏமாற்ற 
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 
விளங்கிக் கொள் 

முப்பது வருடத்திற்கு மேல்
எந்தத் தீர்வையும் 
பெற்றுத் தராமல் 
இனப் படுகொலையையம் மறைத்து 
ஈழத் தமிழனை ஏமாத்த
இலங்கைக்கும்
இந்து சமுத்திர இந்த 
வல்லாதிக்க சக்திகளுக்கு 
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 
புரிந்து கொள் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இவர்கள்
மீண்டும் வருவார்கள் 
தெரிந்து கொள் 

அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
உனைப் போலவே 
அறிந்து கொள் 

எத்தனை முறை 
ஒப்பந்தங்கள் எழுத 
வருவார்களோ 
அத்தனை முறையும் 
வருவதற்கு முதல் 
13 ஐ காட்டி 
ஒரு வெருட்டொன்று போடுவார் 
சின்னத் தம்பிக்கு 
பெரிய அண்ணை 
இது பெரியண்ணனின் 
சொந்த நலனோடு சார்ந்து 
புரிந்து கொள் 

இப்போ இன்னும் 
ஒரு முறை நீ 
13 க்கு உயிர் கொடுத்து 
எழுப்ப முடியுமா 
என்று முயற்சிக்கிறாய்

என்ன செய்வது 
கையில் இருந்த பலத்தை 
காணாமல் ஆக்கி விட்டார்களே 
நீங்கள் ஒற்றுமையையும் 
தொலைத்து விட்டீர்களே

உலக ஒழுங்கோடு 
ஒத்து போகவும் வேண்டும் 
உனக்கு உதவக் கூடியவர்களை 
வளைத்து பிடி 

போரிலே நீ தோற்றுவிட்டாய் 
என்பதற்காக
உன் கொள்கை கோட்பாடு 
தேசியப்பற்று என்பவற்றை 
கை விடாதே

தனியவே நீ பயணித்தால்
தலைக்கு மேலே 
உனக்கு பிரசினை 
கூடி விடும் 
நினைவில் வை என்றபடி

இன்னும் ஒரு கதை 
சொல்லுகிறேன் கேள் என்றே 
அது இருட்டுக்குள் 
கருப்பு பூனையை 
தேடும் கதை 
ஒரு நாடு ஒரு சட்டம் 
என்ற கதையையும் சொல்லி

மீண்டும் முருங்கை மரத்தில்
ஏறி ஏளனமாய்
மன்னனையும் 
அவன் பக்தர்களையும் 
பார்த்து சொன்னது  

காத்திரு மன்னவா 
34 வருடங்களாக 
அடை காத்துவரும் 
வாத்து ஒரு நாள் 
பொன் முட்டைகள் 
போடும் வரை காத்திரு
காத்திரு காத்திரு.

பா.உதயன்✍️

நல்லதொரு அரசியல் கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.